இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 30, 2018

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?


பகுதி நேர ஆசிரியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜக்கையன், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ஜக்கையன்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்கள், தற்போது, மாதம், 7,700 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்; அதை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.அமைச்சர்

செங்கோட்டையன்: மத்திய அரசின், சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று நாட்கள், தலா, இரண்டு மணி நேரம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்படி வலியுறுத்தினோம்; மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசு, அவர்களின் இருப்பிடம் அருகே பணியமர்த்த, நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜக்கையன்: அவர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை; அதை வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: அதை வழங்கினால், அவர்கள் முழு நேர ஆசிரியர்களாகி விடுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது

No comments:

Post a Comment