இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 25, 2014

ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு

ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது. தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பட்டயத்தேர்வு கடந்த 11ம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 14ம்தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடந்ததால் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி தொடக்கக் கல்வி பட்டய படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு நாளை (26ம் தேதி) துவங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கு ஜூலை 7ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பணிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் தேர்வு நடந்தது போல் அல்லாமல், புதியமுறையில் நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் 40 பக்கம் கொண்ட விடைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படும். விடைத்தாள் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத் தேர்வில் பின்பற்றப்பட்ட விடைத்தாள் பராமரிக்கும் முறை, ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கும் பின்பற்றப்படும்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் படித்த 2,053 மாணவ, மாணவியருக்கு விடைத்தாள் தைக்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உள்ளது. முதல் பக்கம் டாப் சீட்டில், மாணவர் பற்றிய விபரங்கள், பார் கோடு வசதியுடன் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.புதிய முறையில் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுவதால், எவ்வித குளறுபடி மற்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment