இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 01, 2014

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் 12–ந்தேதி வழங்கப்படுகிறது

   மதிப்பெண் சான்றிதழ் தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவு கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது. ஏற்கனவே பிளஸ்–2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே வேலைவாய்ப்பு பதிவு கம்ப்யூட்டர்களில் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு வழங்கப்பட்டுள்ளது

. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வருகிற 12–ந்தேதி வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மாணவ–மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களிலேயே 12–ந்தேதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் அவர்கள் பள்ளிக்கூடங்களிலேயே தங்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அவர்கள் சாதி சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டதையொட்டி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மதிப்பெண் நகலை கொண்டு பள்ளிக்கூடங்களில் பிளஸ்–1 சேர்க்கை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment