இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 22, 2018

ஆண்டுவிழா விதிமுறைகள்


அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா உள்பட பல்வேறு விழாக்களை நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 16 -ஆம் தேதி நடைபெற்ற ஆண்டு விழாவில், அதிக ஒளி கொண்ட சோடியம் விளக்கு பயன்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து தொடக்கக் கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசு, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி , நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் ஆண்டு விழா நடத்தப்படும்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதில், "பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்; விழாவின்போது அதிக ஒலி கொண்ட ஒலிப்பெருக்கி, அதிக ஒளி கொண்ட மின்விளக்கு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது; விழா நடைபெறும் இடமானது மாணவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும்; ஆண்டு விழா நடைபெறும் முன்னர் விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவிற்காக பயன்படுத்தப்படும் ஒலி, ஒளி சாதனங்கள் ஆகியன அமைத்தல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும்' என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Tuesday, March 20, 2018

பள்ளி நிதி செலவினம்: அறிக்கை தயாரிப்பு மும்முரம்


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், ஏப்., 20ம் தேதியுடன் முடிவடைகின்றன. மற்ற வகுப்புகளுக்கும், ஏப்., 19ம் தேதிக்குள் மூன்றாம் பருவ தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளதால், கடந்தாண்டு போல அல்லாமல், தேர்வுகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.

அதற்குள் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதித்தொகைக்கான, வரவு-செலவு குறித்த அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பது வழக்கம். இதில், இடம்பெற்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில், கல்வித்துறை சார்பில், தடையின்மை சான்று வழங்கப்படும்.இது பெற்றால் மட்டுமே, அடுத்த கல்வியாண்டில் தொடர்ந்து, அரசின் திட்டங்களில் பங்கேற்க முடியும். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 7,500 ரூபாய், பராமரிப்பு செலவினத்திற்கு வழங்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ரூபாய், பராமரிப்பு தொகையாக, ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டுவிழாவுக்கு பிரத்யேக நிதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கும், ரசீது இணைத்து அறிக்கை தயார் செய்ய வேண்டியது அவசியம்.இப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

'பள்ளி வேலை நாள் முன்கூட்டியே முடிவதால், நிர்வாக பணிகளும் முடிக்க வேண்டியுள்ளது. எனவே, பள்ளி வரவு-செலவு அறிக்கை தயாரித்து, கல்வித்துறை திட்ட அலுவலகங்களில், 'ஆடிட்டிங்' சமர்ப்பிக்க, பணிகள் நடக்கின்றன' என்றனர்.

Monday, March 19, 2018

அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருந்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து: முறையான பட்டியல் இல்லை என குற்றச்சாட்டு


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றிய அளவில் முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியலின்படி வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு முறையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் நேற்று நடக்க இருந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வை திடீரென ரத்து செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் விவரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிக் கட்டடங்கள் விதிமுறைப்படிதான் கட்டப்பட்டுள்ளனவா?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்கள் தேசிய கட்டட விதிகளுக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2004 -ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளின் கட்டடத்தை அனைத்து கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும்; 2005 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கட்டட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு பள்ளிகள்கூட பின்பற்றுவதில்லை. உத்தரவுகள் அனைத்தும் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.

தேசிய கட்டுமான விதிகளின்படிதான் பள்ளிகளின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அங்கு உள்ளன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும். இதற்காக மாவட்டம்தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அரசு அதிகாரிகள் கடைபிடிக்காததால் தனியார் பள்ளிகளும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசிய கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா, அவற்றில் தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டங்கள் அளவில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் தலைமையில் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Sunday, March 18, 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. கோபியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஜூன் மாதம் கோபியில் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அதன்மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.கோயில் நிலங்களில் மைதானம்: பேட்டியின்போது, `பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் கோயில் நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு


புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, March 17, 2018

பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் திருத்த அனுமதி


பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, விரும்பிய மையங்களில் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசந்தராதேவி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ்1, பிளஸ்2 பொதுதேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஒரு கல்வி மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் தான் சார்ந்த கல்வி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு அனுமதியளிக்கலாம். இதனால் அந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழ்நிலை ஏற்படுமேயானால், திருத்தப்பணி நிறைவுறாத மையத்தில் சென்று பணியாற்றி விடைத்தாள் திருத்தும் பணியினை குறித்த தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அகமதிப்பீடு: தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு அகமதிப்பீடு மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றும்போது கூடுதல் விவரங்களைச் சேர்ப்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்போது கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட நாள்கள் வருகை புரியாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏதேனும் ஒரு மாணவருக்கு வருகைப்பதிவு, உள்நிலைத்தேர்வு, ஒப்படைவு ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் இருந்தால் அந்த இடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டதாக பதிவு செய்ய வேண்டும்.

மொழிப்பாட விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, விலக்கு பெற்ற மொழிப் பாடத்துக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் ஜீரோ என பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைத்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

தேர்தல் பணியில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிப்பு


ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக, ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணி, செயலாளர் முத்துச்சாமி வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடிகளில், நிலை அலுவலர்களாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் என பணிகள் வழங்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக, மத்திய, மாநில அரசு பணியாளர்களை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தும், ஆசிரியர்களையே முழுமையாக பயன்படுத்துவதால், கற்றல், கற்பித்தல் பணிகள் முழுவதும் பாதிக்கப்படுகிறது.எனவே, மத்திய, மாநில அரசு பணியாளர்களை நியமிக்கவும், விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு


புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2018

பட்ஜெட்

தமிழக பட்ஜெட்-பள்ளிக் கல்வித்துறை

2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது​போல பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19 நிதி​நிலை அறிக்​கை​யில் பள்​ளிக் கல்​வித் துறைக்​காக மட்டும் ரூ. 27 ஆ​யி​ரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாக தமி​ழக அர​சின் நிதி​நிலை அறிக்​கை​யில் வெளி​யி​டப்​பட்​டுள்ள அறி​விப்​பு​கள்:

2018-19 ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும். பள்​ளிக்​குச் செல்​ல​வில்லை எனக் கண்​ட​றி​யப்​பட்​டுள்ள 33,519 குழந்​தை​களை 2018-2019-ஆம் ஆண்​டில் பள்​ளி​க​ளில் சேர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.
​உள்​கட்​ட​மைப்பு வச​தி​க​ளுக்கு நிதி​: பள்​ளி​க​ளில் உள்​கட்​ட​மைப்பு வச​தி​களை மேம்​ப​டுத்த நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 333.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

​சீ​ரு​டை​கள், சைக்​கிள் வழங்​கும் திட்டங்​க​ளுக்கு ரூ. 1,600 கோ​டி:​ பள்ளி மாண​வர்​க​ளுக்கு நான்கு இணை சீரு​டை​கள், புத்​த​கப் பைகள், கால​ணி​கள், பாடப் புத்​த​கங்​கள், நோட்டுப் புத்​த​கங்​கள், வடி​வி​யல் பெட்டி​கள், சைக்​கிள் மற்​றும் பேருந்​துக் கட்ட​ணச் சலு​கை​கள் விலை​யில்​லா​மல் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தத் திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்​டில் ரூ.1,653.89 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும், பள்ளி இடை​நிற்​ற​லைக் குறைப்​ப​தற்​காக பத்​தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாண​வர்​க​ளுக்​கான ரூ. 5000 ஊக்​கத் தொகைத் திட்டத்​துக்​காக நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 313.58 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​ம​டிக்​க​ணினி திட்டத்​துக்கு ரூ. 758 கோ​டி:​ பள்​ளி​க​ளில் கற்​பிக்​கும் முறையை மேம்​ப​டுத்​தும் வகை​யில் இணை​ய​வழி மூலம் கற்​கும் வகுப்​ப​றை​கள் ஏற்​கெ​னவே 770 பள்​ளி​க​ளில் நிறு​வப்​பட்​டுள்​ளன.
இந்த நிதி​யாண்​டில் 3,090 உயர்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும், 2,939 மேல்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும் ரூ. 462.60 கோடி செல​வில் 10 முதல் 20 கணி​னி​க​ளு​டன் கூடிய உயர் தொழில்​நுட்ப ஆய்​வ​கங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பள்ளி மாணவ, மாண​வி​க​ளுக்கு மடிக்​க​ணினி வழங்​கு​வ​தற்​காக இந்த நிதி​யாண்​டில் ரூ. 758 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அனை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​துக்கு ரூ.1,750 கோ​டி​யும், அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்வி இயக்​க​கத்​துக்கு ரூ. 850 கோ​டி​யும் இந்த நிதி​யாண்​டில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. குழந்​தை​க​ளுக்​கான இல​வச மற்​றும் கட்டா​யக் கல்வி உரி​மைச் சட்டத்தை' திறம்​ப​டச் செயல்​ப​டுத்த ரூ.200.70 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​மொத்​தம் ரூ. 27,205.88 கோ​டி:​ பள்​ளிக் கல்​வித் துறை​யில் பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்​கை​யில் ரூ. 27,205.88 கோ​டியை தமி​ழக அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ள​து.

மாணவர்களுக்கு புத்தகப்பை பள்ளி கல்வித்துறை அறிமுகம்


அடுத்த கல்வியாண்டில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, புதிய வடிவம் மற்றும் நிறத்தில், புத்தகப்பையை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், காலணி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வியாண்டு துவங்கும் முன் உத்தேச மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு புத்தகப்பை தயாரிக்கப்படும்.கடந்த ஆண்டு பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலரில் புத்தகப்பை வழங்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், புத்தகப்பையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. நீலம் மற்றும் ஆரஞ்சு நிறுத்தில், புத்தகப்பை புதிய வடிவம் பெற்றுள்ளது. அதில் ஒரு புறத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன

புத்தக வங்கி திட்டம் தகவல் சமர்ப்பிக்க கெடு


புத்தக வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள் குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:டில்லி, பசுமை தீர்ப்பாய கோர்ட் அறிவுறுத்தல்படி, பள்ளிகளில் புத்தக வங்கி திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், ஏராளமான மரங்களை அழிக்க வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாணவர்கள் படித்த, பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, வரும் கல்வியாண்டில், புதிய மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் பெறப்பட்ட, பழைய புத்தகங்கள் குறித்த தகவல்களை, 23ம் தேதிக்குள், deesections@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும், அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.