இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 14, 2017

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.லிட் ஊக்க ஊதியம் பிடித்தம் செய்யும் திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளி மாணவர்களுக்கு 'கலையருவி' திருவிழா : நிகழ் கல்வியாண்டு முதல் அமல்


தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளைத் தெரிந்து கொள்ளவும், அத்தகைய கலைகளைப் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாகவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை நிகழ் கல்வியாண்டு முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க முடியாத, தனக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிப்படுத்த நேரமில்லாத நிலை உள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுகளும், மன அமைதி, சிந்திக்கும் ஆற்றலுக்குத் துணை புரியும் வகையில் ஓவியம், இசை, நடனமும், மொழித் திறனை வளர்த்துக் கொள்ள கவிதை, கட்டுரை, கதை, பாடல் எழுதுதல் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, இதற்காகப் பள்ளிகளில் பாட வேளை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு நடத்தி, மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தன. காலப் போக்கில் இத்தகைய பாடப் பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் காலிப் பணியிடங்களாகவும், ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் அத்தகைய சிறப்புப் பாடங்களுக்குப் பாட வேளை ஒதுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய போக்கை மாற்ற தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், நிகழ் கல்வியாண்டு முதல் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், தமிழக கலைகளைக் கற்றுக் கொள்ளவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலை வடிவங்களில் மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், நாட்டுப்புறக் கலைகள் என சுமார் 154 -க்கும் மேற்பட்ட கலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களின் தனித் திறன், குழுத் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக, போட்டிகளைத் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு பிரிவுகளில், பள்ளிகள் அளவில் நடத்த வேண்டும். பின்னர், அவற்றில் முதலிடம் பெறுவோருக்கு ஒன்றியம், கல்வி மாவட்டம், மாவட்டம், இறுதியாக மாநில அளவில் என அடுத்தடுத்த நிலைகளில் தரமுடன் கூடிய திறனை வெளிப்படுத்துவோருக்கு அங்கீகாரமும், பரிசுகளும் அளிக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளிக் கலைத் திருவிழா வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நிகழ் கல்வியாண்டு (2017 - 18) முதல் கலைத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:- மாணவ-மாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள்.

மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது. மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.

புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம். தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம். 32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை நடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன.

திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி, நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன. அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்கு களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

9,351 பணியிடங்களுக்கு, 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு : முதல் முறையாக வி.ஏ.ஓ., பதவியும் இணைப்பு


தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தகுதியில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு, 'குரூப் - 4' வரிசையிலும், வி.ஏ.ஓ., பணியிடத்துக்கு, தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால், மனித வளம் மற்றும் நிதி இழப்பு கருதி, இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்தது. இதையடுத்து, வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்ட, குரூப் - 4 தேர்வுக் கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டது.

இதன்படி, 2018 பிப்., 11ல் நடக்கும் தேர்வுக்கு, நேற்று முதல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது; டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இந்த தேர்வில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, 4,300 பேர் உட்பட, எட்டு பதவிகளில், 9,351 பேர் சேர்க்கப்பட உள்ளனர். வி.ஏ.ஓ., பதவிக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பில், எந்த மாற்றமும் இல்லை. ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்யலாம். தேர்வு முடிவு வரும் போது, தரவரிசை அடிப்படையில், தகுதியான, விருப்பப்பட்ட பதவியை தேர்வு செய்யலாம். முதற்கட்டமாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில், தங்கள் சுயவிபரங்களை, ஒரு முறை பதிவாக, ஆன் -- லைனில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் வழியாக, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ஒரு முறை பதிவு செய்தவர்கள், மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குரூப் - 4 தேர்வுக்கு, 12 லட்சம் பேரும், வி.ஏ.ஓ.,தேர்வுக்கும், 15 லட்சம் பேரும், இதுவரை விண்ணப்பித்து வந்தனர். வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வையும் எழுதி வந்தனர். தற்போது, குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பணியிடமும் சேர்க்கப்பட்டதால், 18 லட்சம் பேர் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 'இந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி பதவியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, 2018 ஜன., 20, 21ல் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன் - லைன் பதிவு, நேற்று துவங்கியது. டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; டிச., 15 வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC

தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017 விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017. தேர்வுநாள்: 11.02.2018. காலிப்பணியிடங்கள்: 9351.
குரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை.

* தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017.
* தேர்வு நாள்: 11.02.2018.
* காலிப்பணியிடங்கள்: 9351.

  இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவையர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் அடங்கும். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏறத்தாழ 10000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இப்போது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC CCSE-IV (Group 4 & VAO Combined) Notification Date of Examination: 11.02.2018
Last Date for Apply: 13.12.2017
Junior Assistant - 4349
VAO - 494
SURVEYOR - 74
DRAFTSMAN - 156
TYPIST - 3463
STENO - 815
TOTAL VACANCY - 9351

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் தெளிவுரை வழங்கிய அரசு கடிதம்


SEAL model

TNPSC notification

Click below

https://drive.google.com/file/d/1NqcA9tCZvE1__ShWSpjEtvuqjnebrPLN/view?usp=drivesdk

Monday, November 13, 2017

வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருப்போர் 79 லட்சம்: தமிழக அரசு தகவல்


தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79 லட்சத்து 69 ஆயிரமாக உள்ளதாக தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பகப் பதிவுதாரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளளன. அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 22 லட்சத்து 35 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று, 18 முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 11 ஆயிரம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். 24 முதல் 35 வரையுள்ள 30 லட்சத்து 59 ஆயிரம் பேரும் 35 வயது முதல் 56 வயது வரை 11 லட்சத்து 57 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' : தேர்தல் கமிஷன் முடிவு


வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் தொடர்ச்சியாக, வாக்காளர் விபரங்கள் செம்மைப்படுத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக (பி.எல்.ஓ.,) கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் பணியில் உள்ளனர்.

அலைபேசி செயலி அறிமுகம் அவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய அலைபேசி செயலி (மென்பொருள் செயலியை) 'பிஎல்ஓ., நெட்' என்ற பெயரில் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஆன்ட்ராய்டு போன் வாங்க விருப்பமுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார்களிடம் தங்களின் முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாத ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலை வைத்துக் கொண்டு, வீடு வீடாக சென்று விபரங்களை சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: வாக்காளர்களின் முழுமையான விபரங்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி நாளை (நவ.,15) முதல் நவ., 30 வரை நடக்க உள்ளது. இதில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இப்பணியில் இணைய செலவுக்காக தலா ரூ.250 வழங்கப்படும். அந்த அலுவலர்களின் விருப்பத்தின் படியும், அவர்களுக்கு பயன்படுத்தும் முறைகள் குறித்து தெரிந்திருந்தால் மட்டுமே ஸ்மார்ட் போன் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது, என்றார்

ஊதியக்குழு 2017...தமிழில் அரசாணைகளின் தொகுப்பு...👇👇👇




உண்மைத்தன்மை கோருதல் சார்பு

Sunday, November 12, 2017

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது: யுஜிசி உத்தரவு


"பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் பெயர்களில் "பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றன. இது யுஜிசி சட்டப் பிரிவு 23-க்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சட்டப் பிரிவு 23-இன் கீழ் ஒரு மாதத்துக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி-யை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பெயரில் "பல்கலைக் கழகம்' என்பதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. தங்களது கல்வி நிறுவனங்களின் பெயரோடு பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி வழிகாட்டுதல் 2016-இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல்கலைக்கழகம் என்ற பெயருக்குப் பதிலாக, எந்தவிதமான மாற்று வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை யுஜிசி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்கலாம்.

அடுத்த 15 நாள்களுக்குள் இந்தப் பரிந்துரையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தேவையானத் திருத்தத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரும் என சுற்றறிக்கையில் யுஜிசி தெரிவித்துள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஆன்லைன் பதிவுக்கு 27ம் தேதி கடைசி நாள்


மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஆன்லைன் பதிவுக்கு வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். மெடிக்கல், சர்ஜிக்கல், டென்டல் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் நடத்துகின்ற நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். எம்.டி, எம்.எஸ், பிஜி டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.3750. ரூபே கார்டு, நெட் பாங்கிங் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு 2750 ரூபாய் ஆகும். ஆன்லைன் தேர்வு ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெறும்.
முடிவுகள் ஜனவரி 31ம் தேதி வெளியிடப்படும்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் உட்படுத்தப்படும். புதுடெல்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்ஆர்,புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்கான்ஸ், திருவனந்தபுரம் சித்ரா ஆகிய 5 நிறுவனங்களுக்கு சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறாது.

திருவனந்தபுரம், திருச்சூர், கோழிக்கோடு, மங்களூரு, கோயம்புத்தூர், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்கள் உட்பட 128 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும்போது தேர்வு மையத்தை தேர்வு செய்யலாம். எம்டிஎஸ் பட்ட மேற்படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு வழியாக சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம், கோழிக்கோடு உட்பட 29 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதுடெல்லி எய்ம்சில் இந்த தேர்வு வழியாக சேர்க்கை நடைபெறாது. மேலும் விபரங்களை ஷ்ஷ்ஷ்.ஸீதீமீ.மீபீu.வீஸீ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்.

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்


சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் சங்கம் அமைத்து பள்ளிகளுக்கு பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிப்பதாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 662 இடங்களை நிரப்ப செப்டம்பரில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் 482 இடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாமா என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. ஓவியம், இசை, தையல் போன்ற சிறப்பு பாடங்களுக்கு உயர்கல்வியில் போதிய முக்கியத்துவம் இல்லை. எனவே அந்த பாடங்களை நடத்த பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து விட்டு, தற்போது காலியாக உள்ள இடங்களை பட்டதாரி பணியிடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இதன்படி அரசு பள்ளிகளின் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இன்றி கூடுதலாக 500 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

RH 2018

*RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்*

🌟  *ஜனவரி:*

1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.

🌟  *பிப்ரவரி:*

1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.
2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.

🌟  *மார்ச்:*

1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.

🌟  *ஏப்ரல்:*

1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.
2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.

🌟  *மே:*

1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத்.
2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.

🌟  *ஜூன்:*

1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.

🌟  *ஜூலை:*

1. RH இல்லை.

🌟  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

🌟  செப்டம்பர்:*

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

🌟  *அக்டோபர்:*

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

🌟  *நவம்பர்:*

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

🌟  *டிசம்பர்:*

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

23.08.2010 க்கு பிறகு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோர் TET தேவையில்லை உடனடியாக அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரின் உத்தரவு :


Saturday, November 11, 2017

இனி இணையதளத்தில் மட்டுமே முழுமையான தேர்வு அறிவிக்கைகள்: டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு அறிவுறுத்தல்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குரூப் 1 (துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர்) தேர்வு முதல் குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வரை நூற்றுக்கணக்கான தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது.

இந்த தேர்வுகளின் மூலமாக, அரசுத் துறைகளுக்கு பத்தாம் வகுப்புப் படித்தவர் முதல் பட்டதாரிகள் வரை ஆயிரக்கணக்கானோர் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு அறிவிக்கைகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தத் தேர்வானாலும், அதுகுறித்து அறிவிக்கைகள் வெளியிடப்படும். இந்த அறிவிக்கைகள், இரண்டு தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாவது வழக்கம். எவ்வளவு பெரிய அறிவிப்புகள் என்றாலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியிடுவதில் புதிய முறையை பின்பற்ற வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள உத்தரவு: கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் (www.tnpsc.gov.in) புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திலேயே தேர்வு அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தேர்வு அறிவிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் போது அதற்கு தேர்வர்களிடம் இருந்து நல்ல முறையில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த அறிவிக்கைகள் தொடர்பாக இணையதளத்திலேயே தேர்வர்கள் உரிய விளக்கங்களை கேட்டுப் பெறுகிறார்கள். எனவே, தேர்வு அறிவிக்கை குறித்த விரிவான மற்றும் முழுமையான விவரங்கள் இனி இணையதளத்திலேயே வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம், அந்த தேர்வு அறிவிக்கை குறித்த சுருக்கக் குறிப்பு மட்டும் நாளிதழ்களில் வெளியிடப்படும். எப்படி வரும் அறிவிக்கை: உதாரணத்துக்கு, குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை என்றால், அது ஒருசில வரிகளில் மட்டுமே நாளிதழில் தெரிவிக்கப்படும். குரூப் 1 தேர்வு மூலமாக நேரடி பணி நியமனத்தின் வழியே காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான முழு விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மட்டுமே நாளிதழ்களில் இனி விளம்பரம் வரும் என தனது உத்தரவில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் பலரும், செய்தித் தாள்களில் வரும் தேர்வு அறிவிக்கைகளைப் பார்த்த பிறகே இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பம் செய்வர். ஆனால், நாளிதழ்களில் விரிவான விளம்பரத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.