இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 30, 2017

இனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப் பணிகள்


ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன.

குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். புதிய விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து இணையதளம் மூலமாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிப்பதைப் போல, குடும்ப அட்டை தொடர் சேவைகளும் இ.சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தனி மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியது: குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலமாக பெறும் வசதி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இந்த சேவையைப் பெற முடியும். இதேபோல, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் தொலைக்காட்சி இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் இ.சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அல்லது குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணங்களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையினர் ஒப்புதல் வழங்குவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது திருத்தஹம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

ஸ்மார்ட் கார்டு விநியோகம்: செல்லிடப்பேசிக்கு தகவல் வரும் ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'கிராஸ் மேஜர்'


அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.

இதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோரை (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க 2000 அக்., 18ல் உத்தரவிடப்பட்டது.தற்போது, 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், பழைய உத்தரவுப்படியே முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது; இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் 1:3 என்ற விகிதப்படி பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 1:3 என்ற விகிதத்தை மாற்ற 2016 நவம்பரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது; ஆனால், முடிவு அறிவிக்கவில்லை.தற்போது, முதுநிலை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எந்த விகிதப்படி பதவி உயர்வு அளிப்பது என்ற தகவல் இல்லை; இதனால், வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:நீதிமன்றம் உத்தரவிட்டும், 1:3 என்ற விகிதத்தை மாற்றவில்லை. தற்போது 'சேம் மேஜர்' ஆசிரியர்களுக்கு 2002--03 ஆண்டின் படியும், 'கிராஸ் மேஜருக்கு' 2007--08 ன் படியும் பணிமூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் 1:3 என்ற பழைய முறைப்படியே பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.

விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய 'காலத்தில்' எழுதாமலும் விட்டது என பல தவறுகள் தெரியவந்தன. இதை சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது.தற்போது, 'முதன்மைத் தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு முதன்மைத் தேர்வாளர் கட்டுப்பாட்டில், 10 உதவி தேர்வாளர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

தனித் தேர்வர்கள் கவனத்துக்கு: நாளை 8ஆம் வகுப்பு முடிவுகள்


ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பவுள்ளன.

இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்கக மண்டலத் துணை இயக்குநர் தேவவரம் இனிய வேந்தன் கூறியது: 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

*EMIS NEWS - தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31|03|2017 - க்குள் முடிக்கப்பட வேண்டும் - இயக்குனர் உத்தரவு!!*

Wednesday, March 29, 2017

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்


வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18 பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இபைலிங் செய்பவர்களுக்கு இது மிக எளிமையாக இருக்கும். கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு: புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தாய்மை அடையும்பட்சத்தில், அவர்களுக்கு 12 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த விடுப்பினை 26 வாரகாலமாக உயர்த்தும் வகையில் பழைய மகப்பேறு சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பாக வழங்க வேண்டும்; குழந்தை பேறு இல்லாத பெண்கள், மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 12 வாரகால விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 26 வாரகால மகப்பேறு விடுப்பானது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக 12 வாரங்கள் வழங்கப்படும்.
இது, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்தச் சட்ட வரைவு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: தமிழக அரசு தகவல்


பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம். குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும். பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

டெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பாட புத்தகத்தில் முரண்பாடு : பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வினாத்தாளில், சில வினாக்களுக்கு, விடையை கண்டறிவதில், தமிழ், ஆங்கில வழி மாணவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது. 'பொருத்துக, கோடிட்ட இடத்தை நிரப்புக' பகுதிகளிலும், பிரச்னை ஏற்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில், பல குளறுபடிகள் இருந்தாலும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 'பொருத்துக' பகுதியில், விடையை மாற்றி கொடுத்ததால், அதிகபட்சம், ௫ மதிப்பெண்களுக்கு, மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, 5 மதிப்பெண்ணுக்கான, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் பகுதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கான விடைகளை, வினாத்தாளில் உள்ள குறிப்புகளில் இருந்து, சரியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு, சரியான விடையாக, 'ஷில்லாங்' என்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பலருக்கு இந்த விடை தெரியவில்லை. அதற்கு, பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த குளறுபடியான அம்சமே காரணம். தமிழ் வழி பாட புத்தகத்தில், அதிக மழை பொழியும் பகுதியாக, 'மவ்சின்ராம்' என்ற கிராமத்தின் பெயர் உள்ளது. ஆங்கில வழியில், 'ஷில்லாங் பீடபூமி பகுதியில் உள்ள மவ்சின்ராம் கிராமம், உலகில் அதிக மழை பெறும் பகுதி' என கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தகத்தின் அடிப்படையில், வினா தயாரிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை சிந்திக்க வைத்து, பதில் எழுத வைப்பதற்காக, மவ்சின்ராம் என்பதற்கு பதில், 'ஷில்லாங்' என்ற விடையை, வினாத்தாளில் இடம்பெற வைத்துள்ளனர்.

தமிழ் வழி மாணவர்களுக்கு, மவ்சின்ராம் மட்டுமே, பாட புத்தகத்தில் படித்ததால், ஷில்லாங் என்ற விடையை தவிர்த்து, தவறான விடைகளை தேர்வு செய்துள்ளனர்.இந்த தவறால், மற்ற நான்கு கேள்விகளுக்கும், தவறான விடை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், ஒட்டுமொத்த பொருத்துக பகுதியும், தவறான விடையாகி, ஐந்து மதிப்பெண் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tuesday, March 28, 2017

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்


நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது.

ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'டெட்' தேர்வு குழப்பம் நீடிப்பு


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.

'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர்
சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

*பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

Monday, March 27, 2017

3rd Term - Model Questions மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0THFoeXBCTzRlVVU/view?usp=sharing

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்து கருவூல அலுவலகத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள பதில்..


நலத்திட்ட உதவிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது


அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இருந்த போதிலும், வங்கி கணக்குகள் போன்ற பிற திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆதார்  தொடர்புடைய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் கூறும் போது, “ அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்ற எங்கள் முந்தைய உத்தரவு தெளிவாக உள்ளது. சலுகை அல்லாத பிற திட்டங்களான வருமான வரி, வங்கி கணக்குகள் போன்ற திட்டங்களுக்கு அரசு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் எனினும் இது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு போன்ற 12-க்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங்களை பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளது.

Sunday, March 26, 2017

நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்


நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அந்த நகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்வு


நடப்பாண்டில் "நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய இடைக்கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் "நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 2594 பேர். தற்போது 2017 ஆம் ஆண்டில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை "நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை விட இது மிக அதிகம். நடப்பாண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7 -ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இந்தத் தேர்வு 80 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 23 நகரங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 2,200 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களோடு தற்போது வேலூர், நாமக்கல், திருநெல்வேலியிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூலுவபட்டி மாணவர் ஓவியம்-வண்ணக்கதிரில்