இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 11, 2016

English for children pdf

Click below

https://app.box.com/s/8kj4b6evd2qdmc93qfnvi2q3gre3ficr

10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடந்தது. அதில் 60 ஆயிரத்து 79 தனித் தேர்வர்கள் எழுதினர். தேர்வு முடிவுக்கு பிறகு மறுகூட்டல் செய்யக் கேட்டு 644 பேர் விண்ணப்பித்தனர். இதன்படி 1310 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. அவற்றில் 6 பேருக்கு மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் www.tndge.in என்ற இணைய தளத்தில் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது.

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும். மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வார்டுக்கு 100 வாக்காளர் பட்டியல்


உள்ளாட்சி தேர்தலுக்கான, ஓட்டுச்சாவடி விபரங்களை வெளியிடவும், வார்டுக்கு, 100 வாக்காளர் பட்டியல் தயார் செய்யவும், மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர்களாக, கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் விரும்பும் இடத்திலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எனவே, வார்டுக்கு, 100 வாக்காளர் பட்டியல், தயார் செய்ய வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி வார்டுகளில், 1,400 வாக்காளர்கள்; பேரூராட்சிகளில், 1,200 வாக்காளர்களுக்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். அதற்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு


அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்குமான பேறுகால விடுப்பை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் மசோதா, அனைத்து கட்சிகளின்ஆதரவுடன், ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, தற்போது, 26 வாரங்கள், முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில், 12 வாரங்கள் மட்டுமே, பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
போதிய அளவில் பேறுகால விடுப்பு வழங்காததால், பிறந்த குழந்தைகள் தாய் பாலின்றி ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஆளாவது, பெண்கள் பணிக்கு வருவதில் ஏற்படும் சிக்கல் போன்ற பிரச்னைகள் இருந்து வருகின்றன.

மாற்றம் செய்ய...:
இதையடுத்து, 'அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பெண்களின் பேறுகால விடுப்பை, எட்டு மாதங்கள் வரை உயர்த்த வேண்டும்' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு பரிந்துரையும் அனுப்பப்பட்டது.

இதை ஏற்று, பேறுகால விடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்ய, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. அதன்படி, தனியார் உட்பட அனைத்துத் துறைகள், நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, 26 வாரங்கள் பேறுகால விடுப்பு அளிக்க வகை செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மசோ தாவை தாக்கல் செய்து, பேசியதாவது:
அமைப்பு சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும் பணி யாற்றும் பெண்களின், மகப்பேறு விடுமுறையை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக உயர்த்த மசோதா வகை செய்கிறது; அந்த காலத்திற்கு, முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள, 10 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயனடைவர்; பெண்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். பாலுாட்டாத காரணத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.

வேலை வாய்ப்பு:

அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தன. மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சில எம்.பி.,க்கள்., 'தொழில் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பையும், வேலை வாய்ப்பை யும் உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் தேவை' என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அனைத்து கட்சி எம்.பி.,க்களின் ஆதரவுடன், இந்த மசோதா, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

வேதனையான காலம்:

பேறு காலம் என்பது பெண்களுக்கு விடுமுறை காலம் அல்ல; மிகவும் வேதனையான காலம். இதனால் தான், பேறுகால விடுப்பை உயர்த்த வேண்டும் என பெண்கள் கோரி வந்தனர். மசோதா நடைமுறைக்கு வந்தால், பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேனகா, மத்திய அமைச்சர், பா.ஜ.,

விடுப்பு கட்டாயம்:

அரசு துறைகளில் உள்ளது போல், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும், 26 வார மகப்பேறு விடுப்பு என்பது வரவேற்கத் தக்கது. குழந்தைகளுக்கு ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும் என, அறிவுறுத்துகிறோம். விடுப்புகொடுக்காமல், அது சாத்தியமில்லை. இவற்றை, தனியார் நிறுவனங்கள், சரியாக நடைமுறைப் படுத்துகின்றனவா என, அரசு கண்காணிப்பதும் அவசியம்.

டி.ஜோதி மகப்பேறு மருத்துவர், மதுரை

ஓராண்டு வேண்டும்:

தனியார் நிறுவனங்களிலும், பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு அளிப்பது வரவேற்கத் தக்கது. இதனால், குழந்தைகளின் நலனில், பெண்கள் கூடுதல் கவனம் செலுத்தமுடியும். அதே நேரத்தில், அரசு துறைகளில் பெண்களுக்கு வழங்கப்படும், 26 வார மகப்பேறு விடுப்பை, ஓராண்டாக அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

பி.பாலகிருஷ்ணன்

பொதுச்செயலர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

தாய்ப்பால் சேமிப்பு மையம்:

தமிழகத்தில், 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என்ற நடைமுறை, ஏற்கனவே உள்ளது; இதை 39 வாரங்களாக நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாய்ப்பால் வங்கி திட்டமும் உள்ளது. இதற்கென, தமிழகத்தில் ஏழு அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் சேமிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க., - எம்.பி.,

முக்கிய அம்சங்கள்:

* தனியார் உட்பட அமைப்பு சார்ந்த அனைத்து இடங்களிலும் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு, 26 வாரங்கள் பேறு கால விடுமுறை வழங்கப்படும்
* பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்
* பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார

ஆசிரியர்-மாணவர் விகிதம்

அரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்
தொடக்கப் பள்ளிகள்.
01. - 60. - 2
61. - 90. - 3
91. - 120. - 4
121. - 150. - 5
151. - 200. - 6
201. - 240. - 7

241. - 280. - 8
281. - 320. - 9
321. - 360. - 10
361. - 400. - 11
401. - 440. - 12
441. - 480. - 13
481. - 520. - 14
521. - 560. - 15
561. - 600. - 16
601. - 640. - 17
641. - 680. - 18
681. - 720. - 19
721. - 760. - 20

ஊதிய முரண்பாடு களைதல் சார்ந்து இயக்குநரின் அறிவுரை

தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்_*

ஆசிரியர்கள் தலைப்பெழுத்து தமிழில் எழுத செயல்முறைகள்

நிரப்பப்படாத பதவி உயர்வு பணியிடங்களை துணைதேர்ந்தோர் பட்டியல் மூலம் நிரப்புதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 08. 2016....

Wednesday, August 10, 2016

11-8-16 EDUSAT programme

2 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டதால் பி.எட் படிப்பில் மாணவர்கள் ஆர்வம் குறைந்தது


பி.எட் படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டதால் பி.எட் படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட்கள் உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்லூரிகளில் விற்பனை செய்யப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட 4 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி வரை 3 ஆயிரத்து 600 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தில் சமர்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 7 ஆயிரத்தும் அதிகமான மாணவர்கள் பி.எட் படிக்க விண்ணப்பித்துள்ளனர். பி.எட் படிப்பிற்கான கால அளவை ஒரு ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக மாற்றி தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

பொறியியல் படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு 20 சதவீத சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்பிற்காக கவுன்சலிங் அகஸ்ட் மாத இறுதியில் நடக்கிறது. இதில் பி.எட் சீட் கிடைப்பது உறுதியில்லை என்பதால், இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் ஜூன் மாதம் சேர்ந்து விடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் டெட் தேர்வு நடத்தப்படவில்லை. இவை அனைத்தும் பி.எட் விண்ணப்பம் குறைந்ததற்கான காரணமாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற அரசு திட்டம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளி களுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இதில், பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன

Policy note higher education department

Click below

https://app.box.com/s/xoa5ppedgzey3svmymrfnt3hsvsckyhv

Tuesday, August 09, 2016

TN budjet


தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி பயில சிறப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

நூல்கள் மின்மயம்: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சுமார் ஆயிரம் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து மின்மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

93 பகுதிநேர நூலகங்களானது ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். இதற்கென நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நூலகங்களில் சூரியஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் அளிக்கப்படும்.

இலவச சிறப்புப் பயிற்சி மையம்:

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தொடங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 50 மாணவர்கள் பயனடைவர்.

பார்வையற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்கும் அளிக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு:

அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெற அனைத்து அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.

3-ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடப் புத்தகங்களுடன் இலக்கணப் பயிற்சித் தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

# யோகா என்பது மனம், உடல், ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும்.

பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவும் யோகப் பயிற்சி உள்ளது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு: பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான கட்டடம், சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, பாதுகாப்பான மின் இணைப்புகள், இருக்கை, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு சுயநிதி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் உள்ளடக்கிய 5 உறுப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வாரம் ஒருமுறை பள்ளி வேலை நாளொன்றில் பள்ளியைப் பார்வையிட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வர்.

அவர்கள் ஆய்வு செய்த விவரங்களைப் பள்ளி பதிவேட்டில் பதிவு செய்வர். குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை பள்ளி நிர்வாகம் நிறைவு செய்துள்ளதா என்பதை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் ஆய்வின்போது உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் கல்வி புத்தகங்கள், டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.சமநிலை கல்வி

# சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும். அடிப்படை கல்வி பெற்றுள்ள நபர்களுக்கு சமநிலைக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம் வகுப்பு நிலையில் கல்வி கற்பிக்கப்படும். இத்திட்டம் விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும்.சிறப்பு பயிற்சி மையம்

போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, 32 மாவட்ட மைய நூலகங்களுக்கும் நடப்பு ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப் புத்தகங்கள், இரண்டிரண்டு தொகுப்புகள் வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்காக மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்குமான சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.

கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு


சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு, தமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விரும்பும் மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

5,451 இடங்களுக்கு குரூப் - 4 தேர்வு


'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், செப்., 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, செப்., 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு, நவ., 6ல் நடக்கும்.

தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. மசோதா குறித்து படிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்பையும் மீறி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம்; சாலை விபத்தில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு; அதிக வேகமாக வாகனத்தை ஓட்டினால், 4,000 ரூபாய் அபராதம்; ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்


'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த மாதம் புதிய ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி முதலான நிலுவைத் தொகை, அரியர்ஸாக வழங்கப்படும். இதுவரை வாங்கிய ஓய்வூதியத்தைவிட, 2.57 மடங்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். அனைத்து ஓய்வூதிய அலுவலகங்களும், வங்கிகளும், இந்த மாத இறுதிக்குள், புதிய ஓய்வூதியம் மற்றும் அரியர்ஸ் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதிக்குப் பின், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

G.O.No.231 Dt: August 09, 2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2016 to 30.09.2016 – Orders – Issued.

Click below

https://app.box.com/s/8dpw63m5rsn7sdpbx6io5in4e74n83bd

Monday, August 08, 2016

TNPSC Group 4 notification

பி.எட் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட் உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்லூரிகளில் பி.எட் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட் 9ம் தேதி(இன்று) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ம் தேதி (நாளை) மாலைக்குள் செயலாளர், பி.எட் மாணவர் சேர்க்கை 2016-17, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது


'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

பல்வேறு மாநிலங் களின் கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, ஒரே மாதிரியான பாடங்கள் தயாரிக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. இருப்பினும், பொதுவான அடிப்படை பண்புகள், சுதந்திர போராட்ட இயக்கம், தேசிய ஒற்றுமையை சாராம்சமாக உடைய விஷயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, தேசிய கட்டமைப்பில் பாடங்கள் தயாரிக்க, தேசிய கல்விக் கொள்கை திட்டமிட்டு உள்ளது.

இதற்கு, சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப்பையின் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.