இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 08, 2016

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை (நேஷனல் எலக்டர் ரோல் பியூரிபிகேஷன்) ஜூன் 11ல் துவங்க வேண்டும்' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் அது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த மே 16ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக அதற்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செம்மைப்படுத்தும் பணி தற்போது இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை ஜூன் 11ல் துவங்க வேண்டும். இதை வாக்காளர் பதிவு அலுவலர்களாக(எலக்ட்ரோல் ரிட்டர்னிங் ஆபீஸர்)உள்ள ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்து அந்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின் செம்மைப்படுத்தும் பணிகள் துவங்கும்.

இறுதிபட்டியல்: பின், செப்டம்பர் இறுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலில் பேரில் வெளியிடப்படும். இதற்கான உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலெக்டர் ஹரிஹரன், நேர்முக உதவியாளர் அருண்சத்யா, தேர்தல் தாசில்தார் சுரேஷ்கண்ணன் பங்கேற்றனர். கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்


ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வழக்கமாக, மே மாதம் நடத்தி முடிக்க வேண்டிய கவுன்சிலிங், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தேர்தல் முடிந்தும், பணி மாறுதலுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.

இம்மாதத்திற்குள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டாலும், அனைவரிடமும் மனுக்களை பெற்று, அதை பரிசீலனை செய்து, கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற, இரு மாதங்கள் ஆகிவிடும். இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம், ஏராளமான தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், பல பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் நிர்வாகத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. அந்த பணியிடத்திற்கு கவுன்சிலிங் மூலம் ஆட்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, இதை சரிப்படுத்த முடியும். இது ஒருபுறமிருக்க, பணி மாறுதலை எதிர்பார்த்துள்ள பல ஆசிரியர்கள், இன்னும் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பணி மாறுதல் கவுன்சிலிங் குறித்து, அரசு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tnpsc group 2A results released nw

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-g2a2015rank.html

Tuesday, June 07, 2016

செய்முறை வகுப்பிற்கு இன்று முதல் பெயர் பதிவு : 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை வகுப்பிற்கு இன்று முதல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்கக நெல்லை மண்டல துணை இயக்குனர் மகத்தாப்பானு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2016 - 17ம் கல்வியாண்டில் மார்ச் 2017ல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள் வரை பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (8ம் தேதி) முதல் 30.6.2016க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2016-17ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8.6.2016 முதல் 30.6.2016 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 30.6.2016க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

International yoga day celebration

Click below

https://app.box.com/s/dmxxogi57zutm749hphyesuc8ucuxylm

National student compaign

Click below

https://app.box.com/s/wp13owjbcj1pizmznfxqgxbcw32w6or6

Sunday, June 05, 2016

பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு இனிமேல் முதுநிலை பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதுடன்,  பதவி உயர்வு மூலமும் பட்டதாரிகளை  நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மாற்றி பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

TNPSC annual planer 2016-17

Click below

http://www.tnpsc.gov.in/annual-planner.html

Saturday, June 04, 2016

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்

'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவில், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து முடிவு செய்யும் புதிய கல்வி கொள்கை, கடைசியாக, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் வெளியிட்டார்.

அதன் பின் வந்த அரசுகள், அதில் மாற்றங்களை மட்டுமே செய்துள்ளன. கல்வித்துறை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், அதன் தரம் குறித்த விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதையடுத்து, புதிய கல்வி கொள்கையை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, முன்னாள், மத்திய அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இந்த கமிட்டி தனது அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. எனினும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டது. 'ஆன்லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என, பல தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பரிந்துரைகளை பெறுவதாக, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்; அதன்படியே செயல்படுவோம். மாநில அரசுகளின் பரிந்துரைகள் பெற்ற பின்பே இது வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Friday, June 03, 2016

பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்


தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்ற வேண்டும்.

ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். மாறுதல் பெற்ற பிறகும் ஒரு ஆண்டு அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளின் இடையே, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்களை பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகள் வழங்கி வருகின்றன. பாரபட்சமில்லாமல், ஒளிவுமறைவு இல்லாத வகையில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கே பணியிட மாறுதல் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பிரச்னையின்றி பணியாற்ற முடிகிறது.

கடந்த மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடக்க வேண்டிய மாறுதல் கவுன்சலிங் தேர்தல் காரணமாக நடக்கவில்லை. அதனால் ஜூன் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆனால், பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு, பாடம் நடத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உடனடியாக பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஜூன் 3வது வாரத்தில் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக, மாறுதல் கவுன்சலிங் குறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட உள்ளது.

Thursday, June 02, 2016

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்கு அனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் இலவச பஸ் பாஸ் வழங்குகிறது.

நடப்பு கல்வியாண்டு துவங்கிய பின்பும், இதற்கான பணி வேகமெடுக்கவில்லை. அதனால், பஸ் போக்குவரத்து செலவுக்கு, பெற்றோர் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். விரைவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு எத்தனை மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது? இந்தாண்டு மாணவர் சேர்க்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய மாணவர் சேர்க்கையால், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே மாற வாய்ப்புள்ளது. இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு; ஏழு முதல் பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 ஆகிய வகுப்பு பட்டியலில் மாற்றம் இல்லாததால், பழைய பட்டியலில் சில மாற்றங் கள் மட்டும் செய்தால் போதும். மாணவர்களின் தகவல்களை சேகரித்து, விவரங்களை 'சிடி' யாக மாற்றி வரும், 10க்குள் போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். முதல்கட்ட பட்டியல் கொடுத்தபின் மாற்றங்கள் இருந்தால், தொடர்ந்து தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tuesday, May 31, 2016

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பெறலாம். விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில், மாலை 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Monday, May 30, 2016

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஜூன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். ஹால்டிக்கெட்டுகளை தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிந்து கொள்ளலாம்

ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் கார்டு கட்டாயமாகிறது : ஜூன் 1ம் தேதி முதல் அமல்


தமிழகத்தில் ரேஷன் கடையில் ஆதார் அட்டை இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சிவில் சப்ளை துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ‘ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் தவறாது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமானோர் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கான மாற்று வழி எதுவும் கூறப்படவில்லை.

அரசின் புதிய உத்தரவால் ஆதார் அட்டை இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பயனாளிகள் கூறுகையில், ‘‘ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, ஆதார் அட்டை கொண்டு செல்வது அனைவருக்கும் சாத்தியப்படுமா என தெரியவில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலைமை குறித்து சிவில் சப்ளை துறை தெளிவாக விளக்க வேண்டும்’ என்றனர்.

Sunday, May 29, 2016

தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடப்புக் கல்வியாண்டில் கணினி வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும்.

எனவே மாவட்ட வாரியாக மூன்று ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்த ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களுடன் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விவரங்களை www.ciet.nic.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.

மாவட்ட தேர்வுக் குழு தலைவர், ஆசிரியர் சார்பான கருத்துகளைப் பரிந்துரைக்கும்போது எந்தவித புகாருக்கும், குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்படாதவர், நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படாதவர் என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது. இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:

டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும். சிக்கலில் பள்ளிகள்: அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில் உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை


'ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

புதிய கல்வி ஆண்டில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதன் முக்கிய அம்சங்கங்கள்:

பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும் கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல் நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்

நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும் ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.