இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 28, 2013

எம்.எஸ்சி., புள்ளியியல் கணிதத்திற்கு இணையானது

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.

இந்நிலையில், எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலை வழங்கும் எம்.எஸ்சி., புள்ளியியல் படிப்பு, எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Friday, September 27, 2013

பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகிறது

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கட்டுப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து உபரி வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த லாபத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு, மாறாக உயர்ந்தது. தற்போது பெட்ரோல் விலை குறைப்பு உறுதியாகி உள்ளது. லிட்டருக்கு ரூ.2 வரை பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த விலை குறைப்பு சாத்தியமானதுதான் என்று மத்திய பெட்ரோலியம் மந்திரி வீரப்ப மொய்லி கூறி உள்ளார். இதற்கிடையே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி வாரம்தோறும் புதன்கிழமை பஸ், ரெயிலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்று பிரசாரம் செய்ய உள்ளனர். இது தவிர அரசு ஊழியர்கள் அலுலவகம் செல்ல வசதியாக பஸ்டே கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பிரசார திட்டத்துக்கு ரூ.52 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணை இறக்குமதியை கணிசமாக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மத்தியரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை- மத்திய அரசு

 நாடு முழுவதும் பல்வேறு துறைகளில்  சுமார்  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். 1998 இல் தான் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.  சமீபத்தில்  மீடியாக்கள் மத்திய அரசு  ஊழியர்களின்  வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் என செய்தி வெளியிட்டு இருந்தன.

மத்தியரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என அரசு தெளிவாக கூறி உள்ளது .  இது குறித்து மத்திய மந்திரி நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது

:- தற்போது, ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.என்று கூறினார்

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

    அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ‘‘அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது,’’ என்றார்.

பணிக்கு "கல்தா' கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

    காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும் என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

தற்போது, காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை கேட்கும் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் கல்வித்துறை ஊழியர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி, சி.இ.ஓ.,க்கள் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சில பள்ளிகளுக்கு டெலிபோனிலும் பேசி, பணியில் இருக்கிறார்களாக என, உறுதிப்படுத்த முயன்றனர்.

சிவகங்கை உட்பட சில மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் பணியில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் இலவச பொருட்களின் வினியோகம், கல்வித் உதவித்தொகை, தேர்வு பெயர் பட்டியல்களை பெற முடியவில்லை. அரசின் விதிமுறையை மீறி,பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவ திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு திறனை மேம்படுத்த நூலக புத்தகங்களை உபயோகிக்க வேண்டும்.தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

Thursday, September 26, 2013

1,391 பேருக்கு மெயின் தேர்வு

துணை–கலெக்டர்–8, டி.எஸ்.பி.4, வணிகவரித்துறை உதவி–ஆணையர் 7, பதிவுத்துறை பதிவாளர் 1, மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் 5 உட்பட 25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து 704 பேர் முதன்மை தேர்வு எழுதினர். இவற்றிலிருந்து 1,391 பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது

      குரூப் VIII  தேர்வு நவம்பர் 26ல் நடக்கிறது.குரூப்.1 தேர்வுக்கு காலிப்பணியிட விபரம் சேகரிக்கப்பட்டுவருகிறது

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது

      பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. மாநில அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அந்தந்தப் பாடங்களுக்கான புத்தகங்களை எழுதும் பணி தொடங்கும் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகங்களை எழுதவும், புத்தகங்களில் குறைபாடுகளை சரி செய்யவும் குறைந்தபட்சம் பத்து மாதங்கள் வரை ஆகலாம். புதிய புத்தகங்கள் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் தயாராகும்.

எனவே, பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2015-16 கல்வியாண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2016-17 கல்வியாண்டிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது.

புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறைக்குக் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் வல்லுநர் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வல்லுநர் குழுவிடம் இப்போதுள்ள பாடத்திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், புதிதாக சேர்க்கப்படவுள்ள பகுதிகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும்போது மிகவும் திணறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பொறியியல் கணிதம் ஒரு பாடமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதியப் பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி கட்டண நிர்ணய விசாரணையில் பெற்றோரையும் சேர்க்க பரிசீலனை


தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விசாரணையில், பெற்றோரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளையும் கேட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலு தெரிவித்தார். தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரை, நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், கட்டண நிர்ணய விசாரணையில், பள்ளி நிர்வாகத்தின் கருத்து மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால், பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விசாரணையின்போது, பெற்றோரையும் அழைத்து, கருத்து கேட்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு, குழு தலைவர், சிங்கார வேலு பதிலளிக்கையில், விசாரணையில், பெற்றோரையும் சேர்ப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், கட்டண நிர்ணய குழு கூட்டத்தை கூட்டி, அதில், இதற்கான முடிவு எடுக்கப்படும், என, தெரிவித்தார்.

சென்னையில், அதிக கட்டணம் வசூலித்த சில பள்ளிகளுக்கு எதிராக, பெற்றோர், குழு தலைவரிடம் புகார் அளித்தனர். அதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, குழு எதுவும் செய்ய முடியாது, என, சிங்காரவேலு தெரிவித்தார்.

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்' : காந்தி பிறந்த நாளில் குதூகல ஆரம்பம்

 
கல்வி தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை'களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி' என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும்.

அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும். மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம். பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, சூநேர்மை கடை'யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Annamalai University UG&PG results released May 2013

Wednesday, September 25, 2013

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:

இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-
First Paper
(Relating to Secondary and Special
Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--
Second Paper
(Relating to Elementary Schools)
(Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

மாவட்டக்கல்வி அலுவலர்
1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books)."

ஆசிரியர் தகுதித் தேர்வில் சாதி வாரியாக மதிப்பெண் குறைக்க முடியாது. டி.ஆர்.பி பதில். வழக்கு அக். 22 ல் வருகிறது

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்ப

  3½ லட்சம் மாணவர்கள்    தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் கல்லூரிகள் உள்ளன.   இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேர் படிக்கிறார்கள்.

மேலும் தொலை தூரக்கல்வி மூலம் 4 லட்சம் பேர் படிக்கிறார்கள்.   இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது. இது குறித்து மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறியதாவது:–  

கட்டண உயர்வு நிறுத்தம்    கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில பல்கலைக்கழகங்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.   இறுதி முடிவு    உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டண ம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

  எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:– அரசு பொதுத்தேர்வுகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வை சரியான முறையில் நடத்தி நேர்த்தியான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். விடைத்தாளின் முதல் பக்கத்தில் ரகசிய கோடு, மாணவர்களின் புகைப்படம் ஆகியவை புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை தற்போது நடைபெறும் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமான இடங்களில் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கப்படும். அச்சடிக்கும் முன்பு பல முறை எழுத்துப்பிழை பார்க்கப்படும். அச்சடித்தபின்பு அவை வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். அங்கு ஷீல் சரியாக இருக்கிறதா? என்று அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்ப்பார்கள். முன்பு ஒரு பள்ளிக்கு 500 வினாத்தாள் தேவை என்றால் கூடுதலாக வினாத்தாள் அனுப்பப்படும். இப்போது கூடுதலாக ஒரு கட்டு மட்டுமே அனுப்பப்படும். மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் பிரிக்கப்படும் முன்பு 50 வினாத்தாள் கொண்ட பார்சல், 100 வினாத்தாள் என்று இருக்கும்.

ஆனால் இப்போது அப்படி அல்லாமல் அனைத்து கட்டுகளும் தலா 20 வினாத்தாள் கொண்டே இருக்கும். அச்சடிக்கப்படும் இடங்களில் இருந்தே 20 வினாத்தாள் கொண்டு பார்சல் செய்யப்பட்டுதான் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படும். அதுபோல வினாத்தாள் பார்சல் தேர்வு அறையில் பிரிக்கும்போது மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு அறையிலும் தலா 2 மாணவர்கள் கையெழுத்திடுவார்கள். இந்த முறையின் காரணமாக வினாத்தாள் எந்த காரணம் கொண்டும் வெளியாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம். இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான, பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். புத்தகச்சுமையை குறைத்து, கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வி திட்டத்தில், 6 முதல் 9 வகுப்புவரை உள்ள மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்பருவ தேர்வு முடிந்து, தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்.,3 ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அன்றே, இந்த வகுப்பு மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து வந்துள்ள அப்புத்தகங்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அந்ததந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை கொடுத்து, தங்களது பள்ளிகளுக்கான புத்தகங்களை, தலைமையாசிரியர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்தவார இறுதிக்குள், இப்பணிகளை, முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு வினா – விடை புத்தகங்கள்: அடுத்த வாரம் விற்பனைக்கு வரும்

   பத்தாம் வகுப்பு, வினா – விடை புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வருகின்றன. பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர் – ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், மாணவ, மாணவியருக்காக, பல ஆண்டுகளாக, வினா – விடை புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு, விற்பனை செய்து வருகிறது. பாட புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவே, வினா – விடை புத்தகங்களையும் தயாரிப்பதால், இது, மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில, பெற்றோர் – ஆசிரியர் கழக அலுவலகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினா – விடை புத்தகம், விற்பனை செய்யப்படுகிறது.

பத்தாம் வகுப்பிற்கான புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வந்துவிடும் எனவும், மாணவ, மாணவியரின் தேவைக்கு ஏற்ப, போதுமான அளவில், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் வழி புத்தகங்கள், ஒரு, "செட்' – 185 ரூபாய்க்கும்; ஆங்கில வழி புத்தகங்கள், 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "மாவட்ட தலைநகர்களில் விற்பனை வேண்டும்': இந்த புத்தகங்கள், சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பெற்றோர், சென்னைக்கு படை எடுக்கும் நிலை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. "மாவட்ட தலைநகரங்களில், வினா – விடை புத்தகங்களை விற்பனை செய்ய, கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.