இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 08, 2013

விடைத்தாள் திருத்துவதில் தவறு - ஆசிரியர்களுக்கு அபராதம்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை, திருத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூலியும் வழங்கப்படுகிறது. மாணவர்களின், எத்தகைய பதில்களுக்கு, எவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது, "ஆன்சர் - கீ" முறைப்படி, மதிப்பெண் வழங்கப்படுகிறது

. சில நேரங்களில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. உதாரணமாக, மதிப்பெண்ணை கூட்டுவதில் தவறு, மதிப்பெண் அளிக்க மறந்து விடுவது, தவறுதலாக அதிக மதிப்பெண் போட்டு விடுவது போன்ற தவறுகளை ஆசிரியர்களும் செய்வதுண்டு. அத்தகைய தவறுகளுக்கு, ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யும் வகையில், ஒவ்வொரு தப்புக்கும், ஒவ்வொரு விதமான தண்டனை, அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சம், 15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு, எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்படும். 15 மதிப்பெண் முதல், 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு, அதிகபட்சம், 1,000 ரூபாய் அபராதமும், கண்டன நோட்டீசும் அளிக்கப்படும்.

மொத்தம், 30 மதிப்பெண் முதல், 50 மதிப்பெண் வரை வித்தியாசம் இருப்பின், அந்த ஆசிரியரின் பணிப்பதிவேடுகளில், அவரின் தவறான செயல் குறிப்பிடப்படும். அதற்கும் மேல் தவறு செய்தால், ஆசிரியருக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை நிறுத்தப்படும். இவ்வாறு, ஒவ்வொரு படியாக தண்டனை மற்றும் அபராத அட்டவணையை, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை நடுநிலைப்பள்ளித் தலைமையாசிராக நிலையுயர்த்தி ஆணை இயக்குனர் உத்தரவ

யுபிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் (Optional 1)யில் முதல் தாள், இரண்டாம் தாளும், (Optional 2)யில் முதல் தாள், இரண்டாம் தாள் என மொத்தம் 2000 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் இது பழைய முறையாகும்.

முதல் தாளில் மொத்தம் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், முன்றாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும்,  நான்காம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், ஜந்தாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வின் மூலம் மொத்தம் 1,800 மதிப்பெண்களுக்கும், ஆளுமைத் தேர்வின் மூலம் 275 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். இந்த புதிய முறையை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 07, 2013

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமனம்!

  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (டி.என்.பி.எஸ்.சி) ஆர்.நட்ராஜ் இருந்து வந்தார். இந்த நிலையி்ல் புதிய தேர்வாணைய தலைவராக நவநீதகிருஷ்ணன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 21ல் தொடக்கம்!

  தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது.அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார். இதன் மீதான விவாதம் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து தேதி குறி்ப்பிடப்படாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையி்ல், பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2013-14ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து,  சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அதன்பிறகு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். புதிய சட்டமசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, March 06, 2013

UPSC 2013 Preliminary Examination Notification

Important Dates

Opening Date for Registration: 5 March 2013

Closing Date for Registration: 4 April 2013

Civil Services Preliminary Exam Date: 26 May 2013

The experts of Jagranjosh.co, have come up with IAS Exam 2013 Preparatory PDF Package for the students preparing for UPSC Civil Services IAS Exam. The examination will be held on 26 May 2013.

* Eligibility

Criteria Age Limit The candidate applying for the examination should be between the age 21 years and 30 years on August 2013. He/she must have been born not earlier than 2nd August, 1983.

*Educational Qualification

The candidate must possess a degree of any of Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other educational institutions established by an Act of Parliament or declared to be deemed as a University under Section-3 of the University Grants Commission Act, 1956, or possess an equivalent qualification.

*Application Fee

The candidates are required to pay fee of Rs. 100/- (Rupees Hundred only) either by remitting the money in any Branch of SBI by Cash, or by using net banking facility of State Bank of India/ State Bank of Bikaner& Jaipur/Sate Bank of Hyderabad/State Bank of Mysore/ State Bank of Patiala /State Bank of Travancore or by using Visa/Master Credit/Debit Card. The candidates belonging to Female/SC/ST/PH are exempted from payment of fee.

*How to Apply All the candidates are required to apply online through the website http://www.upsconline.nic.in the detailed instructions for filling up online applications are mentioned in the link below.

பங்கேற்போர் திறனை கண்டறிய சிவில் சர்வீசஸ் தேர்வில் புது மாற்றம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்வகையில் , மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற நிர்வாக பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இதில், முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என நடத்தப்பட்டு வருகிறது.முதல் நிலை தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற முடியும். முதன்மை தேர்வில், பொதுப்பாடத்திற்கு கூடுதலாக முக்கியத்துவம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது பாடம் பிரிவில், நான்கு தாள்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும், தலா, 250 மதிப்பெண்கள் உண்டு. இது தவிர, இரண்டு விருப்ப பாடங்களுக்கு தேர்வு இருக்கும். இதற்கு, தலா, 250வீதம் மதிப்பெண் வழங்கப்படும்கட்டுரை மற்றும் ஆங்கிலம் தாளிற்கு ஏற்கனவே உள்ளபடி, 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிரதான தேர்விற்கான மொத்த மதிப்பெண், 1,800 ஆகும். யு.பி.எஸ்.சி., அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில், சிவில் சர்வீஸ் தேர்வில், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில், தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு உள்ள திறன், சமூக -பொருளாதார இலக்குகளை அடையும் விஷயங்களில் புரிந்துணர்வு ஆகியவற்றை கண்டறியும் வகையில், இத் தேர்வு அமையும். இம் மாற்றத்திற்கு, பிரதமர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததும் , இது நடைமுறைக்கு வருகிறது.சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு,மே 26ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும்

  பிப்ரவரியில் நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு கணினி மூலம் 11 தேர்வுகளை நடத்தினோம்.

அடுத்த கட்டமாக மடிக்கணினி, ஐபேட் மூலம் தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம். நவம்பர் 4ம் தேதி குரூப்&2 தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான நேர்காணல் முடிந்தது. 7ம் தேதி (இன்று) 1,426 பேருக்கு பதவி ஆணை வழங்க உள்ளோம். இதில் 14 பேர் நகராட்சி கமிஷனர்கள். குரூப்&4ல் 1,400 காலி பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கவுள்ளோம்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விஏஓ தேர்வுகளில் தேர்வான அனைத்து தேர்வர்களுக்கும் ஒருவாரத்தில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. குரூப்&1 முதல் நிலைத் தேர்வு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது. இதற்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு கருத்துகள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தி ல் வெளியாகும். அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடக்கும்.குரூப்-1 உள்பட அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள 10,500 பணியிடங்களுக்கு இந்தாண்டு தேர்வு நடத்தப்படும். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டும், அடுத்த ஆண்டும் அதிகமானோர் ஓய்வு பெற உள்ளனர்.டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஏஓ தேர்வு எழுதுவோர் கிராம நிர்வாகத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதுபற்றி 24 கேள்விகள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் அமைக்கப்படும்.

அனைத்து பிரிவு தேர்வுகளுக்கும் வினாக்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கணினி மூலம் வினாத்தாள் நட்ராஜ் மேலும் கூறுகையில்,வினாத்தாள் வெளியானது தொடர்பான பிரச்னை தற்போது இல்லை. அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கணினி மூலம் வினாத்தாள் அனுப்ப தயாராகி வருகிறோம். தேர்வு நடைபெறும் நேரத்துக்கு 15 நிமிடத்துக்கு முன்னதாக கணினியில் வினாத்தாளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். தனி பாஸ்வேர்ட் அளித்து அதை சிறிது நேரத்துக்கு முன்பு எடுப்பது பற்றி ஐஐடி பேராசிரியர்களுடன் விவாதித்து வருகிறோம். அதற்கு தேவையானது அதிகளவு கணினிகள். தற்போது தேர்வு நடக்கும் கல்லூரிகளில் 30 ஆயிரம் கணினிகள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்&-, விஏஓ உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றார்.

IGNOU B.ed Assignments

TNPSC Group II.240 posts Notification

Tuesday, March 05, 2013

அறிவியல், கணித தேர்வுகளை இயக்குனர்கள் கண்காணிக்க உத்தரவு

வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த முதல் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. தமிழ் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று, ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடக்கிறது. நாளை, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.கணிதம், அறிவியல் பாடங்களில், மாணவர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடத்தப்படுகிறது.

எனவே, இந்த பாடங்கள் மட்டும், "டம்மி' பதிவு எண்களைக் கொண்டு, தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முக்கிய தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல், நடக்கின்றன.இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன. 25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி' தேர்வு நடக்கிறது. இதுபோன்ற தேர்வுகளை, வழக்கமாக, இணை இயக்குனர்கள், நேரடியாக கண்காணிப்பர்.இந்த ஆண்டு, கல்வித்துறை இயக்குனர்களும், நேரடியாக சென்று, முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த உத்தரவை, அமைச்சர் பிறப்பித்தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் 26 மாதிரி பள்ளிகள், ஜூனில் துவக்கம்

  மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும் துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அரசு, நாடு முழுவதும், கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு மாதிரிப் பள்ளியை நிறுவி, இலவசமாக, தரமான ஆங்கில வழி கல்வியை அளித்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 44 ஒன்றியங்கள், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில், 18 ஒன்றியங்களில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள், முடியும் தருவாயில் உள்ளன. தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.மாதிரிப் பள்ளிகளில் சேர, கிராமப்புற மாணவ, மாணவியர், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 18 பள்ளிகளிலும், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, மீதியுள்ள, 26 ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், 26 மாதிரிப் பள்ளிகளை, வரும் கல்வி ஆண்டு முதல் துவக்க, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது

:ஒவ்வொரு பள்ளியும், 3 கோடி ரூபாய் செலவில், கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக, 25 முதல், 50 லட்சம் ரூபாய் வரை தேவை. கூடுதல் தொகையை, தமிழக அரசிடம் இருந்து பெற்று, கட்டுமானப் பணியை துவக்க உள்ளோம்.வரும் ஜூன் மாதம் முதல், கட்டுமானப் பணிகள் துவங்கும். தற்காலிகமாக, 26 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில் இருந்து, பள்ளியை துவக்கவும், முடிவு செய்துள்ளோம். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர் சேர்க்கை நடக்கும். ஒவ்வொரு வகுப்பிலும், தலா, 40 மாணவர் வரை சேர்க்கப்படுவர். 2014-15ம் கல்வி ஆண்டில் இருந்து, கூடுதலாக, மேலும் ஒரு வகுப்பு துவங்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள உள் கட்டமைப்பு வசதிகளைப் போல், அனைத்து வசதிகளையும், இந்த பள்ளிகள் உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 30 பேர் வரை, நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் பணி நியமனம

்அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 700 முதுகலை ஆசிரியர்கள், நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்கனவே நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் காலி இடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்து, பள்ளி கல்வித்துறையிடம், பெயர் பட்டியலை வழங்கியது. இதைத் தொடர்ந்து, "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது.

தேர்வு செய்யப்பட்ட, 700 பேரும், பணி நியமனம் செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த, 700 பேரின் பெயர் பட்டியலையும், வெளிப்படையாக, இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிடவில்லை. தனித்தனியாக, தேர்வை அறிந்து கொள்ளும் வகையில் தான், முடிவு வெளியிடப்பட்டது.ஒவ்வொரு தேர்வின் போதும், இதேபோன்ற நடைமுறையை, டி.ஆர்.பி., கடைபிடிக்கிறது. தேர்வு பெற்றவர்களின் முழு பட்டியலையும், "கட்-ஆப்' மதிப்பெண் படி, இன சுழற்சி வாரியாக, ஒரே பட்டியலாக வெளியிட வேண்டும் என்றும், இதுபோன்று வெளியிட்டால் தான், தேர்வு வாரியத்தின் வெளிப்படைத் தன்மையை அறிய முடியும் என்றும், தேர்வர்கள் கூறுகின்றனர்.டி.ஆர்.பி.,யிடம், இதுகுறித்து கேட்டால், "நடவடிக்கை எடுக்கிறோம்' என, ஒற்றை வரியில் முடித்துக் கொள்கின்றனர்.

பொதுத் தேர்வுகளை புகாருக்கு இடமின்றி நடத்த வேண்டும்

   பள்ளிக் கல்வித் துறையின் புதிய அமைச்சராக வைகைச் செல்வன் பொறுப்பேற்றவுடன் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டும் என்றும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் த.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத் தலைவர் சண்முகவேல்ராஜ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட சம்பளம் உயர்வு: மத்திய அரசு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட சம்பளம் ரூ.136லிருந்து ரூ.148 ஆக அதிகரித்துள்ளது. இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Go.30 M.com (bank management,computer application) by bharathidhasan University.Equal to M.com

Monday, March 04, 2013

10ம் வகுப்பு தனி தேர்வு "தத்கால்' திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், "தத்கால்' திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத்துறை அறிவிப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வில் பங்கேற்க முடியும். பழைய பாடத்திட்டத்தில், அறிவியல் பாடத்தை தவிர, இதர பாடங்களில் தோல்வியுற்று இருந்தால், அந்த பாடங்களை மட்டும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம்.

தேர்வுக் கட்டணம், 125 ரூபாய், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 5, 6ம் தேதிகளில், மாணவர் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை, 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பின், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய படிவத்தில் வழங்கப்படும், 10 இலக்க எண்களை, மாணவர், தவறாமல் குறித்து கொள்ள வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தியே, தேர்வு தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களுக்கும், முறையீடு செய்ய முடியும். பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், மாணவ, மாணவியர், தங்களின் புகைப்படத்தை ஒட்டி, அருகில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றொப்பம் பெற வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை, வரும் 18, 19ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் ஒப்படைத்து, "ஹால் டிக்கெட்' பெறலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

ஆசிரியர் பட்டய தேர்வில் 36.57 சதவீதம் பேர், "பாஸ்'

தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், "பாஸ்' செய்துள்ளனர். தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத் தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில், 35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது. இதில், 13,037 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 36.57. தோல்வியுற்ற மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?

  7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது என கூறினார்.

Friday, March 01, 2013

பெட்ரோல் விலை ரூ.1.78 உயர்வு: 15 நாட்களில் மீண்டும் விலை அதிகரிப்பு: நள்ளிரவு முதல் அமல

ி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பெட்ரோல் விலை இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 45 காசும் உயர்த்தின.

உள்ளூர் விற்பனை வரியையும் சேர்த்து சென்னையில் அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 91 காசும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசும் அதிகரித்தது. லிட்டருக்கு ரூ.1.78 உயர்வு எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் நேற்று மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசு உயர்த்தின. இந்த விலை உயர்வு உள்ளூர் விற்பனை வரி அல்லது ‘வாட்’ வரி நீங்கலானது ஆகும். வரியையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 78 காசு உயர்ந்தது.

இந்த விலை உயர்வினால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72 ரூபாய் 17 காசில் இருந்து 73 ரூபாய் 95 காசாக அதிகரித்தது. நள்ளிரவு முதல் அமல் வரியையும் சேர்த்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 68 காசு அதிகரித்து, 70 ரூபாய் 74 காசு ஆனது. இதேபோல் வரியையும் சேர்த்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 77 காசு அதிகரித்து, 77 ரூபாய் 66 காசு ஆனது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 75 காசு அதிகரித்து, 78 ரூபாய் 34 காசு ஆனது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வு ஏன்? கடந்த 15 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 128.57 டாலரில் இருந்து 131 டாலராக உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 53 ரூபாய் 43 காசில் இருந்து 54 ரூபாய் 15 காசாக குறைந்து இருப்பதாலும் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரமும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப எதிர்காலத்தில் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.