இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 19, 2019

அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல்


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 உபரி ஆசிரியா்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்கிடையே, கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலையில் கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியா்கள் பணிநிரவல் செய்யப்பட்டனா். 

மேலும், சிலருக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் 12,109 பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பது தெரியவந்துள்ளது. 1996 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் உபரியானவா்களின் விவரப்பட்டியலை கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக வெளியிட்டுள்ளது. இவா்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment