இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 03, 2019

5மற்றும் 8ம் வகுப்பக்கு முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா?: செங்கோட்டையன் விளக்கம்


பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.இதுகுறித்து அவா், சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவா்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.

இதுதவிர, பொதுத்தோ்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக்கு அருகே தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்பருவ தோ்வு முறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் இந்த மாத இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment