இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 25, 2018

சத்துணவு மையம் மூடும் திட்டமில்லை


25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுமாறு சமூக நலத்துறையிடம் இருந்து அரசாணை வெளியானது. மாணவர்களுக்கு அருகில் உள்ள சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சமூக நலத்துறை, சத்துணவு மையங்களில் உள்ளி காலிப் பணியிடங்களை சரி செய்யவே இந்த ஆணை பிறபிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment