роЗро▓ро╡роЪ SMS роХро│ை роЙроЯройுроХ்роХுроЯрой் рокெро▒ ON tnptfmani роОрой்ро▒ு type роЪெроп்родு 9870807070 роОрой்ро▒ роОрог்рогிро▒்роХு роЕройுрок்рокி роЗро▓ро╡роЪ роХுро▒ுрои்родроХро╡ро▓்роХро│ை(SMS) рокெро▒ுроЩ்роХро│். DND (Do NOT Disturb) роЪро░்ро╡ீро╕்ро▓் роЙро│்ро│ роОрог்роХро│் роЕродройை(DND) роиீроХ்роХிроп рокிро▒роХே роЗроЪ்роЪேро╡ைропை рокெро▒рооுроЯிропுроо். plz call 1909

Wednesday, October 10, 2018

11-10-18 morning prayer

*School Morning Prayer Activities - 11.10.2018*
*🔷பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*

*🔷திருக்குறள்:63*

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

உரை:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

பழமொழி :

Cast no pearls before swine

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

*🔷பொன்மொழி:*

வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

- காண்டேகர்

*🔷இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*🔷பொது அறிவு :*

1.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?
துபாய்

2.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்

*🔷நீதிக்கதை:*

ஆப்பு அசைத்து இறந்த குரங்கின் கதை

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.

*🔷இன்றைய செய்தி துளிகள்:*

1.ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2.உயரதிகாரிகளுக்கு எதிரான மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : மத்திய அரசு உத்தரவு

3.தமிழும், தமிழ் நாடும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

4.தாமிரவருணியில் இன்று தொடங்குகிறது மகா புஷ்கர விழா!

5.யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: பளுதூக்குதலில் லால்ரின்னுங்கா சாதனை

No comments:

Post a Comment