Thursday, February 06, 2020
பாரத பிரதமரின் ‘பிட் இந்தியா’ திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார் ரேட்டிங்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
Wednesday, February 05, 2020
PG counselling
Monday, February 03, 2020
5,, 8 -வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு வினாத்தாள் மதிப்பீடு: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு
பள்ளி சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி
Saturday, February 01, 2020
தொகுப்பூதிய அடிப்படையில் 3,624 தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அரசாணை வெளியீடு
Tuesday, January 28, 2020
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு?
Saturday, January 25, 2020
கற்றதும் பெற்றதும்-88*மணி
Thursday, January 23, 2020
அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு
Wednesday, January 22, 2020
ஜூன் 26, 27 தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு
Tuesday, January 21, 2020
டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்
ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.
இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் ஐமொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.
தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.