இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 22, 2018

புத்தக தினம்

💥உலக புத்தக தினம்💥
🌹மணிகண்டபிரபு🌹

"ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னல் திறக்கிறது" என்றார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.மனித குல வரலாற்றில் மனிதனை மேம்படுத்தியதும், மனிதனை சிந்திக்கச் செய்து சமுதாய மாற்றத்துக்கு காரணமாய் அமைந்தவையும் புத்தகங்களே!

புத்தகம் எனும் பொக்கிஷம்

சிறகு விரிந்தால் பறக்கலாம்;புத்தகம் விரித்தால் படிக்கலாம்.சிந்தனை வானில் சுயமாய் நம்மை செதுக்கலாம். கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்பதை சொல்லித் தந்த புத்தகங்களை நாம்
1995 ஏப்ரல் 23ல் துவங்கி புத்தக தினத்தின் 22வது ஆண்டாக கொண்டாடுகிறோம்.

புத்தகங்களுக்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை நினைக்கும் வகையில் இந்நாள் இருக்கிறது.ஏ.கே செட்டியாரின் பயண அனுபவங்களும்,சி.சு செல்லப்பாவின் வாடிவாசலும்,புதுமைப்பித்தன் கதைகளும்,
ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை வரையும் இன்றும் இளைஞர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் புத்தகங்களாக இருக்கின்றன.

துவக்க நிலையில் வாசிக்க துவங்கும்போது மனதின் முரட்டுத்தனம் பக்குவப்படாமல் புரிந்து கொள்ள சிரமப்பட்டு படிப்பதை கடினமாக்குவோம்.பின் மனதும் மூளையும் பக்குவப்பட்டு சமரசம் அடையும்.கேட்டு தெரிந்து கொள்வதை விட படித்து புரிந்து கொள்ளும் போது எழுத்தின் அழகியலும்,அதன் பின்னால் உள்ள அனுபவமும் வாசிப்பின் ருசியை பருக தூண்டும்.

காகிதம்

நான் தூய்மையானவனாக படைக்கப்பட்டேன்.அப்படியேதான் இருப்பேன்.மையினால் கரைபடுவதை விட எரிந்து சாம்பலாவதே சிறந்தது என்றது வெள்ளை காகிதம்.

மைகுப்பி ஒன்று அதை கேட்டு தன்னுடைய கருத்த மனதிற்குள் சிரித்துக் கொண்டது.அதன்பின் காகிதத்தின் பக்கம் திரும்பவேயில்லை.வண்ண எழுதுகோல்களும் செல்லவில்லை.அந்த வெள்ளை காகிதம் தூய்மையாக புனிதமாக காலமெல்லாம் கற்போடு இருந்தது வெறுமையாக..என்பார் கலீல் ஜிப்ரான்.

மனிதர்களும் வீம்பாக புத்தகம் படிப்பது நேர விரயம்.பணத்திற்கு செலவு என்பார்கள்.அவர்களுக்கு தெரியவில்லை புத்தகம் என்பது அறிவுக்கான முதலீடு என்று.வாசிப்பின் இன்பத்தை உணராதவர்க்கு மேற்சொன்ன ஜிப்ரானின் கதையே போதும்.

புதியதொரு உலகத்தில் பயணிக்க வரும் நிழலாக,தான் அனுபவித்த செய்திகளை நமக்கு அறிமுகம் செய்யும் ஆசானாக விளங்குகிறது.

வாசிப்பு ஒரு தவம்

புத்தகம் படிக்கும் முன் புத்தக வாசனை நுகர்ந்து பார்ப்பது ஒரு warm up.
அதற்கு ஈடு இணை கிடையாது.

வாயில்லா பிராணியின் கண்பார்வை பேசும் பேச்சை அறிவாளியின் ஆத்மா முழுமையாய் உணர்ந்து கொள்ளும் என்ற வரிகளுக்கு சால பொருந்துவது புத்தகங்களே.கண்ணை மட்டுமே பார்த்து பேசும் கண்ணியம் உண்டு.

நேருவின் வாசிப்பு அலாதியானது.கடந்த ஆண்டுகளில் புத்தகம் படிக்க குறைவான நேரமே எனக்கு கிடைத்தது.ஆசைபடும் அளவிற்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை.இன்றைய வாழ்க்கை முறை பற்றிய எனது அதிருப்திகளில் ஒன்று என நேரு பதிவு செய்திருப்பார்.மேலும் அந்நாளிலேயே 'டிரிப்யூன்,'ல யூரோப்" போன்ற பல்வேறு வெளிநாட்டு இதழ்களின் சந்தாதாரராக இருந்தார்.அவரின் "உலக வரலாறு" "இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்" போன்றவை புகழ்மிக்கவை.

பாரதியை பிடிக்க முயன்ற ஆங்கிலேய அரசு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஐரிஷ் நாட்டினர் நடத்திய பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தியுள்ளார் என்ற காரணம் காட்டி அவரை கைது செய்ய துணிந்ததிலிருந்து புத்தக வாசிப்புக்கு அந்நாளைய அரசாங்கம் தடை விதித்ததை காணலாம்.

காமிக்ஸ் புத்தகம்,ராஜேஸ்குமார் பாக்கெட் நாவல்களில் ஆரம்பித்து அப்துல்கலாம்,சுயமுன்னேற்ற நூல்களை படிப்போம்.அந்த கட்டத்தை கடந்தால் காண்பவை எல்லாம் அழகாய்த் தெரியும் கவிதையில் பய்ணிப்போம்.கல்லூரியில் சேர்ந்தவுடன் வரலாற்று நாவல்களில் குதிரையில் பறப்போம்.கல்கியையும் சாண்டில்யனையும் இரு கண்களாய் பார்த்து பூரிப்போம்.அதில் கொஞ்சம் தெளிவு பிறந்தவுடன் சுஜாதா எனும் பன்முக ஆளுமைக்கு வருவோம்.

சிறுகதைகள் சிறிது சிறிதாக புலப்பட ஆரம்பிக்கும்.வலிமை வாய்ந்த வல்லூறு போல் கொத்தி, ஜெயகாந்தன் நம்மை வாசிப்பு வானில் சமூக சிந்தனையுடனும்,யதார்த்த தத்துவத்துடனும் அவர் காட்டிய அனுபவ உயரத்தை அளக்க ஐம்புலன்கள் போதாது.

அடிப்படையான புத்தகங்களை படித்த பின் அடுத்த கட்ட நகர்வில் பல்வேறு மொழி பெயர்ப்பு புத்தகங்களும், நாவல்களை,கதைகளை,கவிதைகளை,கட்டுரைகளை ஆய்வு நோக்கில் அணுகும் மனப்பாங்கு வருகிறது.அது வாசித்தலில் நுனி வரை செல்லும் அனுபவம்.

நூலகம்

எளியோர்களின் போதி மரம் நூலகம் தான்.பல்வேறு மேதைகளை உருவாக்கும் பட்டறை.முந்தைய கால புத்தகங்களும்,அரிய பல பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்.
முதல் பதிப்போடு நின்று போன புத்தகங்களும்,பழுப்படைந்த பக்கங்களும் எழுதிய காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும். நூலகம் தான் புத்தகங்களை குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்கவும், புத்தகங்களை தேர்ந்தெடுக்கவும் பயிற்சி அளிக்கிறது.

ஏழைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,தமிழ்நாட்டின் நூலக தந்தை எனப் போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன், 1931ல் அக்டோபர் 21ல் மன்னார்குடி அருகில் மேலவாசலில் நடமாடும் நூலக வண்டிப்பயணம் தொடங்கப்பட்டது.அங்கு 72 கிராமங்ககில் 275 பயணங்கள் இந்த வண்டியில் புத்தகம் சென்றுள்ளது.ஏறத்தாழ இதில் 3782 புத்தகங்கள் 20000 தடவைக்கு மேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பெறப்பட்டதை நினைத்தால் புத்தகங்கள் மீது அவருக்கு இருந்த அன்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சிந்தனை மாற்றம்

புத்தக வாசிப்பில் புலமைபெற்ற பின் பேச்சிலேயே புதிய சொற்கள் பயன்படுத்துவதை காணலாம்.சிந்திக்க தூண்டும் கதைகள் கருத்தை கவரும்.

'அகிலன் எழுதிய காசுமரம்' கதையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தை காசினை விழுங்கிவிடும்.வயிற்றில் இருந்து காசுமரம் முளைக்கும் என மற்றவர் சொல்லிக் கேட்டிருக்க காசினை தொடர்ந்து விழுங்க குழந்தைஇறந்துவிடும். படிக்கும்போதே அகச்சூழலில் கற்பனை ஓடும் நிகழ்வுதான் வாசிப்பின் வெற்றி.குழந்தையின் அறியாமையையும் வாழ்வினையும் நம் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

"சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு" என்பர்.

"சிந்திப்பீர்!சிந்திப்பதில் கெடுதியில்லை.சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாக மாட்டீர்கள்.சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தின் அஸ்திவாரம்,ஆணி வேர் எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் புரியும் என்றார் பெரியார்!

உலக அனுபவங்களை அறியும் பெரு முயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது புத்தகமே.படிப்பதன் வாயிலாக அது தனது உலகை உருவாக்கிக் கொள்கிறது.படிப்பதால் கிடைக்கும் ஆனந்தத்தில் தான் வாசிப்பு இன்னும் திகட்டாமல் இருக்கிறது.இனியொரு முறை புத்தகம் வாங்கிச் செல்வோரை ஆசையாய்ப் பாருங்கள்.அவர் கேரி பேக்கில் வாங்கிச் செல்வது புத்தகத்தை அல்ல உலகை"!

-ப.மணிகண்டபிரபு
திருப்பூர்

பள்ளித் தேர்வுகள் நிறைவுபெற்றதால் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்


தமிழகத்தில் பள்ளிகளின் பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக துணை மின் நிலையத்தில் இருந்து பீடர் என்ற வழித்தடம், டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மின் விநியோக பெட்டி உள்ளிட்டவை வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அதிக வெப்பத்துடன் இருக்கும்.

இதனால் அந்த சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த பணிகள் நடக்கும் இடங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதால் மின் சாதனங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பிப்ரவரி மாத இறுதியில் இருந்து மின் வாரியம் தடை விதித்தது.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:

தேர்வு நேரங்களில் மின் சாதனங்கள் பராமரிப்புக்காக மின் தடை செய்தால், மாணவர்கள் படிக்க சிரமப்படுவர் என்பதால், இரு மாதங்கள், மின் சாதனங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அவசியம் இருந்த சில பகுதிகளில் மட்டும் உயரதிகாரிகள் ஒப்புதலுடன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், வழக்கம்போல் மீண்டும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் அனுமதித்துள்ளது. இதனால் பராமரிப்பு நடைபெறும் பகுதிகளில் பகல் வேளையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் கடும் வெயிலால் மின் தேவை அதிகரித்து வருவதால் பல இடங்களில் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஓரிரு தினங்களில் துணை மின் நிலையம் மற்றும் மின் சாதனங்களில் மீண்டும் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மின் தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணைய வழியில் மின் கட்டண வசதி ரத்து: தமிழகத்தில் மின் கட்டணத்தை, மின்சார வாரிய கட்டண மையங்கள், இணையதளம், செல்லிடப்பேசி செயலி (செல்போன் ஆப்) வாயிலாகவும், அரசு இ - சேவை மையங்கள், தபால் நிலையங்களில் மூலமாகவும் செலுத்தலாம்.

Saturday, April 21, 2018

ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?


ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.

-மகுடேசுவரன்

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரும் படிப்பு இன்ஜினியரிங். 500க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஒன்றரை மாதத்துக்கும் மேலாக இரண்டு லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படும் நாட்களில் அண்ணா பல்கலைகழக வளாகமே மனித தலைகளால் நிரம்பி இருக்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்னரே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்படுவதால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றுவிடுவதால், குறிப்பிட்ட மாணவர்களின் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. இந்த பிரச்னையை தவிர்க்க 2018-19 கல்வியாண்டு முதல் இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இன்ஜினியரிங் கலந்தாய்வு விண்ணப்பித்தல் அறிவிப்பு வெளியானதும் இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் 44  அரசுக் கல்லூரிகளில் இணைய சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வு முடிவு வந்ததும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்யலாம். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு யூசர் ஐடி, பாஸ்வேர்ட் வழங்கப்படும், அதில் தங்கள் தொடர்பான விவரங்களை மாணவர்கள் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு  தொடர்பான அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் (www.annauniv.edu) மாணவர்கள் கூடுதல் தகவல்களை அறியலாம். அரசுக்கல்லூரிகளில் 44 இணைய சேவை மையங்களில் 6 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். மாணவர்களின் வசதிக்காக பரப்பளவில் பெரிய மாவட்டத்தில் 2 இணைய சேவை மையங்களும், சிறிய மாவட்டத்தில் ஒரு இணைய சேவை மையமும் அமைக்கப்படுகிறது. இதனால் கலந்தாய்வுக்கு விணணப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, இடம் தேர்வு செய்தலுக்கு மாணவர்கள் தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே வரவேண்டிய தேவை இருக்காது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவர்கள், தங்களிடம் உள்ள எல்லா சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், கல்லூரியை தேர்வு செய்ய மாணவர்களுக்கு 3 நாட்கள் வாய்ப்பு வழங்கப்படும். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண், தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் 5 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் படிக்க விரும்புகிறீர்களா என்று மாணவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். கல்லூரியை தேர்வு செய்த மாணவர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்கு சென்றுவிட்டால் அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு 5 சுற்றுகளாக இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 250ம், இதர பிரிவு  மாணவர்களுக்கு 500ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையதள வங்கி சேவை, பணம் செலுத்தும் ஆப்கள் மூலமாகவும் மாணவர்கள் பணம் செலுத்தலாம்.

Friday, April 20, 2018

மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்


போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, மூன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாணவர்களின் இனிஷியல், பெயரில் திருத்தம் இருந்தால் மாற்றி தர, தற்போது கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி வரும், 23ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் துறைஇயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், 'மதிப்பெண் சான்றிதழ்களில், பிழை இருப்பதாக மனுக்கள் அனுப்பப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும்.

'இத்தொகையை, சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும். மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறியுள்ளார்

தொடக்ககல்வி அலுவலரின் உபரி பணியிட சரண் செய்தல் சார்பு

தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மாணவர் விகிதாச்சாரம்


TNPSC NEWS


Thursday, April 19, 2018

Community list

https://drive.google.com/file/d/1ao__S9VPDDH_iy6b8KwCsKb6lNKSeXiS/view?usp=drivesdk

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது


தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இன்று (20ம் தேதி) நிறைவுபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதினர்.

இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளது. இதற்காக கல்வி மாவட்டத்திற்கு ஒன்று வீதம் விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். விடைகள் தொடர்பான பட்டியல் வரும் 23ம் தேதி விநியோகம் செய்யப்படுகிறது.

ஏப்ரல் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர். ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 26ம் தேதி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர்.

ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவியல், சமூக அறிவியல் விடைத்தாள் திருத்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 18, 2018

அரசு கல்லூரியில் சேரணுமா? 25ம் தேதி முதல் விண்ணப்பம்


திருப்பூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், வரும், 25ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மற்றும் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 18 இளங்கலை, எட்டு பட்ட மேற்படிப்பு பாடப் பிரிவுகள் உள்ளன; இரண்டு 'ஷிப்டு'களில், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயில்கின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான, முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும், 25ம் தேதி காலை, 10:00 மணி முதல் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள், 50 ரூபாய் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்பித்து, இலவசமாக விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். மங்கலம் சாலை, குமரன் மகளிர் கல்லுாரியில், இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது; மாணவியர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.

மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும்மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.