இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 13, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்காக அக்.25 முதல் அக்.27-ஆம் தேதிவரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை (அக்.13) வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிகழாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற 18,769 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த கடந்த ஜூலையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள இயலாத 701 பேர் மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான பி.எட். கல்வியியல் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட். சான்று அளிக்காத 535 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், மதுரையில்... இத்தகையோர் விழுப்புரம் மற்றும் மதுரையில் அக். 25 முதல் அக். 27 வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம். இதற்கான அழைப்புக் கடிதங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனியாக அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தையே எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்- 605 602 மற்றும் நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை, மதுரை-625 009.

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்


டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருச்செந்தூர் அறிவியல் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்கள் பொதுவாக மருத்துவம், ஆட்சிப் பணி, பொறியியல், வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட பாடத் திட்டங்களையே பெரும்பாலும் பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இது போன்றுள்ள 246 பாடத் திட்டங்களையும் பயின்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். மேலும் தற்போதுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 483 கோடியில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.

பொதுத் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பும் முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டுடன், மாணவர்களின் ஆதார் எண், முகவரி, ரத்த வகை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் போது, காப்பீடுத் திட்டத்தின் மூலம் 48 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும். அது போல வரும் டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013இல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியத்திலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் செங்கோட்டையன்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு ₹25000/- லிருந்து ₹72000/- ஆக உயர்வு - அரசாணை நிலை எண்: 56 நாள்: 26.09.2017:-


1.6.06க்கு பின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநராக செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் எனும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

Thursday, October 12, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஓரிரு நாளில் குழு


மேலை நாடுகளின் கல்வி முறையை கற்றுக்கொள்ளும் வகையில் 100 தமிழக மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். மத்திய அரசின் எத்தகைய தேர்வாக இருந்தாலும் அதைத் நம் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 412 பயிற்சி மையங்களை வரும் நவம்பருக்குள் அமைக்க உள்ளோம். இந்த மையங்களில் பணிபுரிய சிறப்பு பயிற்சி பெற 54 ஆசிரியர்களை ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். அவர்கள் தமிழகம் திரும்பியவுடன் 3000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க, அவர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர்.

இந்த சிறப்புப் பயிற்சியில் மாணவர்கள் சேர ஒன்றியத்துக்கு ஒரு விண்ணப்பம் வழங்கி பின்னர் அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்படும். கரூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் என்சிசி அமைப்புகள் இல்லையெனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் என்சிசி அமைப்புகள் கொண்டு வரப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க ஒரிரு நாட்களில் குழு அமைக்கப்படும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கைக்கேற்ப 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பாதிக்கப்பட்டோர் குறித்து தமிழக அரசு கவனத்தில் கொள்ளும். நவம்பர் மாதத்திற்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும்.

இனி பிளஸ்-1 வகுப்பு தொடங்கும்போதே மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் 920 பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.

பிளஸ் 1 துவங்கும் போது, 'லேப்டாப்' : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்


பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். கரூரில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தில், 412, 'நீட்' மற்றும் போட்டி தேர்வு மையங்கள், வரும் நவம்பர் மாதத்திற்குள் துவக்கப்படும். இவை மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் அமைக்கப்படும்.இந்த மையங்களுக்கான, 54 ஆசிரியர்கள், ஆந்திரா மாநிலத்திற்கு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம், 3,000 ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3,000 பள்ளிகளில் தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்' தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த, 12 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து, 2018 - 19 முதல் படிப்படியாக அனைத்து வகுப்பு பாட திட்டங்களும் மாற்றப்படும். கடந்த ஆண்டு, 'டெண்டர்' மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு துவங்கும்போது, லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில், 10 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வகுப்பில், 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அறிவியல் ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள, மேலை நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஜாக்டோ - ஜியோ' இன்று அவசர கூட்டம்

தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, இன்று, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது. சென்னையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், பிற்பகல், 2:௦௦ மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது. அதன் முடிவுகள் குறித்து, மாலை, 6:௦௦ மணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்

அக மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரும் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!


பதினொன்று மற்றும் 12ஆம் வகுப்புகளில் அக மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50-ஐ ரத்து செய்யக்கோரும் வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதிப்பெண்கள் வழங்குவதிலும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது;ஜாக்டோ ஜியோ தலைவர்கள்


அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏமாற்றமளிக்கிறது என்று ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறையின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணசாமி கூறியதாவது: அரசு ஊழியர் சங்க 7வது ஊதியக்குழு பொத்தாம் பொதுவாக பெரிதாக வழங்கியது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

6வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 3 தவணைகளிலும் அடுத்த ஊதியக்குழுவில் அந்த நிலுவைத்தொகை பொது வருங்கால வைப்புநிதி கணக்குகளிலும் இதுவரை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக 21 மாத கால நிலுவைத்தொகையை வழங்காதது வருத்தமளிக்கிறது. அதே போல மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் 13 மணி நேரத்திற்கும் கூடுதலாக பணியாற்றுகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பணிபுரியக்கூடிய இவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகளை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

டெங்கு ஒழிப்பு பணிகளையும் பராமரிக்கிறார்கள். இந்த ஊராட்சி செயலாளர்கள் குறித்த ஊதியம் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் போது வலியுறுத்தினோம். அப்போது இந்த ஊழியர்களின் ஊதிய மாற்றம் நிச்சயமாக தனியாக அறிவிப்போம் என்றார்கள். ஆனால் அரசு அறிவித்த அறிவிப்பு இதற்கு மாறாக உள்ளது. வருத்தமளிக்கிறது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போது மதிப்பூதியம், தொகுப்புதியம் பெறுபவர்களின் பணித்தன்மை, பணி நிலைமையை கணக்கில் எடுத்து ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். அந்த வாக்குறுதியை தற்போதைய அரசு காப்பாற்றவில்லை.

இந்த முரண்பாடுகள் குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் பரிசீலிப்போம். நீதிமன்ற உத்தரவுபடி தான் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 23ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு எங்களது அறிவிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 27 ஆயிரம் வரை இழப்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட் கூறியதாவது:

நாங்கள் 9 நாட்களாக நடத்திய போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளிலே முக்கியமானது 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட்டு பின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என்பதுதான். ஆனால் 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவில்லை.இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.27 ஆயிரம் வரை ஊதிய இழப்பு ஏற்படுகிறது. 1.1.2016 முதல் 1.10.2017 வரை 21 மாத காலத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

1.1.2016 முதல் இந்த ஊதியக்குழு அமுல்படுத்துவதாக இந்த அரசு அறிவித்தாலும் அதற்கான பணப்பலன் எதுவும் வழங்காத காரணத்தினால் 13லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, October 11, 2017

NMMS exam -2017

அரசு ஊழியர்களின் ஊதியம் குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.2.25 லட்சமாக உயர்வு


# 7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்.

# குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

# தமிழக அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ 6, 100-ல் இருந்து ரூ 15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

# தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு 30 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

# அதிகபட்ச ஊதியம் ரூ. 77,000 லிருந்து ரூ 2.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

# ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.

# இந்த ஊதிய உயர்வு 2016-ம் ஆண்டில் இருந்து கருத்தியலாக அமல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14, 719 கோடி கூடுதல் செலவாகும். அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வால் 12 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வுதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

பள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை

பள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், நுழைவுத் தேர்வு பயிற்சி, 'ஸ்மார்ட்' வகுப்பு என, பல்வேறு திட்டங்கள், பள்ளிக்கல்வித் துறையில் அமல் படுத்தப்பட உள்ளன. அது குறித்து, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நாளை, ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்விஇயக்குனர், இளங்கோவன் பங்கேற்கின்றனர்.

டெங்குவை தடுப்பது எப்படி? : 'மொபைல் ஆப்' வெளியீடு!


டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்' ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'மொபைல் ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

'டெங்குவை தடுப்போம்; கொசுக்களை ஒழிப்போம்' என துவங்கும் பக்கத்தின் முகப்பில், கொசு உற்பத்தியாகும் இடங்கள், கேள்வி - பதில், சித்த மருத்துவம், தகவல் மற்றும் உதவி, ஆடியோ, குறும்படங்கள் என, ஆறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில், தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், நிலவேம்பு கஷாயம், மலைவேம்பு இலைச்சாறு, பப்பாளி இலை சாறு தயாரிப்பு முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு, 94443 - 40496 மற்றும் 93614 - 82899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து, பிரபலங்கள் பேசும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன

அகவிலைப்படி 136லிருந்து 139% ஆக உயர்வு




கிரேடு வாரியாக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு வெளியீடு!

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 21,792-26,720, இளநிலை உதவியாளர் ரூ.37,936,-ல் இருந்து ரூ.-47,485, இடைநிலை ஆசிரியர்களுக்கான விகிதம் ரூ.40,650-ல் இருந்து ரூ.50,740, ஆய்வாளர்களின் ஊதிய விகிதம் ரூ.69,184ல் இருந்து ரூ.-84,900, சப் கலெக்டர்களுக்கு ரூ.81,190-ல் இருந்து ரூ.98,945, சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.10,810-ல் இருந்து ரூ.13,270, சத்துணவு சமையலர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 6562-ரூ.8,680, இந்திய குடிமைப்பணி அலுவலர் இல்ல அலுவலக உதவியாளர் தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பார்வைக்குறைபாடு, மாற்றுத் திறனாளி, காது கேளாதோர் ஊர்திப்படி ரூ.2,500 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வுதியத்தொகை குறைந்த பட்சம் ரூ.7,850ல் இருந்து அதிகபட்சமாக ரூ,1,12, 500 ஆகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.7,850 -ல் இருந்து 67,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.ஆயிரத்து 500-ல்இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக ரூ.14,719 கோடியாகும். இதில், ரூ.8015.99 கோடி அரசு அலுவலர்களுக்கான சம்பளமும் ரூ.6702.91 கோடி ஓய்வூதியதாரர்களுக்கும் செலவாகும்

அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு!


7-வது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை தமிழக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசின் நிதித்துறை செயலாளரான சண்முகம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தரப்பு அறிக்கையை முதல்வரின் முன்பாக சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரியும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரியும் தமிழக அரசு ஊழியர்களும், பள்ளி ஆசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையில் 20% ஊதிய உயர்வு வழங்கலாம் என்ற பரிந்துரையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், எந்தெந்த படிநிலைகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்புகளும் அதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, October 09, 2017

அக்.11-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: ஏழாவது ஊதியக்குழு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு


தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் வரும் புதன்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதலமைச்சரிடம் வழங்கியது.

இக்கூட்டத்தில், அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணத் தொகை எத்தனை சதவீதம் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.O No. 293 Dt: October 05, 2017-MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals – Addition of Hospitals and inclusion of additional Specialities in the hospitals – Orders – Issued

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_293_2017_0.pdf

Sunday, October 08, 2017

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்


தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். 'தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2011 முதல், அனைத்து புதிய ஆசிரியர் களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், ௨௦௧௦ல், வெளியிட்ட அறிவிப்பில், 'புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்' என, தெரிவித்தது. 'தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்' என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கூடுதல் அவகாசம்: இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், ௨௦௧௦க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ௨௦௧௪ வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு, 2019 வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தகுதி தேர்வு: அதில், 'மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 'இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS

Click below

https://tnmanavan.blogspot.in/2017/06/primary-upper-primary-study-materials.html?m=1

Saturday, October 07, 2017

மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.

இந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.