இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 25, 2017

பள்ளிக்கல்வி துறை சந்திக்கும் சவால்கள்!


பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன. அதன் விபரம்:

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் உட்பட, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும்

* பல ஆசிரியர்கள், வகுப்பில் பெயருக்கு பாடம் நடத்திவிட்டு, தாங்கள் நடத்தும் அல்லது பணியாற்றும், 'டியூஷன்' மையத்துக்கு மாணவர்களை வரவழைக்கும் நிலையை மாற்ற வேண்டும்

* தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* குறுநில மன்னர்கள் போல் செயல்படும், முதன்மை கல்வி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், ஆசிரியர்களுக்கு, செயல்திறன் அறிதல் திட்டம் கொண்டு வர வேண்டும்

* புதிய பாடத்திட்டம் தயாரிக்கவும், வெளி மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படும் கற்பித்தல் முறைகளை, தமிழகத்தில் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதியாண்டு மாற்றம்: 10 அம்சங்கள்


டில்லியில் கடந்த ஏப்., 22ம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ' தற்போது, நாம் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கடைப்பிடித்து வருகிறோம். இதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டாக மாற்ற முன் வர வேண்டும்' என, கூறினார்.

இந்த நிதியாண்டு மாற்றம் குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:

1. இந்தியாவில், ஏப்., - மார்ச் நிதியாண்டு, 1867 ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

2. இதை, ஜன., - டிச., நிதியாண்டாக மாற்ற வேண்டும் என்றால், அது தொடர்புடைய ஏராளமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக தற்போது ஆண்டுதோறும் பிப்., மாதம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டை, ஆண்டுதோறும் நவ., மாதம் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். வரி ஆய்வு ஆண்டை மாற்ற வேண்டும். வரி கட்டமைப்பை மாற்ற வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களையும் மாற்ற வேண்டி இருக்கும்.

3. நிதியாண்டை மாற்றினால், ஏற்கனவே அந்த நடைமுறையை பின்பற்றி வரும் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெறும். இது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உலக பொருளாதாரத்துடன் இந்தியா இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

4. இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது இரண்டு நிதியாண்டுகளை கடைப்பிடிக்கின்றன. ஒன்று, இந்தியாவிற்கு, மற்றொரு நிதியாண்டு,அவர்களின் தலைமை அலுவலகம் உள்ள நாட்டிற்கு ஏற்றவாறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் நிதியாண்டு மாற்றப்பட்டால், அவர்களின் சிரமம் குறையும்.

5. பொருளாதார ஆலோசனை வழங்கும் சர்வதேச நிறுவனமான, 'கிறிசில்' என்ற நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி கூறுகையில்,'' இந்தியா சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் காலனி ஆதிக்கம் கொண்டு வந்த நிதியாண்டை பின்பற்றுவதில் என்ன நன்மை இருக்க முடியும். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்த மாற்றம் உதவும்,'' என்றார்.

6. வழக்கமாக பிப்., இறுதியில் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதை இந்த ஆண்டு முதல் பிப்., 1ம் தேதி, என, மோடி அரசு மாற்றி அமைத்துள்ளது. இதற்கு முன்பே நிதியாண்டை மாற்றுவது குறித்தும் ஆலோசனை தொடங்கி விட்டது.

7. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சாரியா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தான் நிதியாண்டை மாற்றவேண்டும் என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிக்கை அளித்தது.

8. அந்த குழு அளித்த அறிக்கையில், ' நிதியாண்டை மாற்றுவதன் மூலம், நாட்டின் பருவமழை காலத்துடன் இணைந்து செயல்பட முடியும். ராபி, காரீப் பருவத்திற்கான பாசனத்தை முன் கூட்டியே திட்டமிட முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. தற்போது மத்திய பட்ஜெட், பிப்., மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், புதிய நிதியாண்டுக்கான பருவ மழை முன் அறிவிப்பு ஏதும் பிப்., மாதம், மத்திய அரசுக்கு கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் தொடர்பான வருவாய் - செலவு குறித்த பட்டியல் தயாரிக்க முடிவதில்லை. நிதியாண்டை மாற்றினால், இப்பிரச்னை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. நிதியாண்டை மாற்றுவதால் பல நன்மைகள் ஏற்பட்டாலும், மத்திய அரசு, மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களிடம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஒரே ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த செலவு தொகை சற்று அதிகம் என்பதால், மத்திய அரசின் ஆலோசனைக்கு சில எதிர்ப்புகள் இருக்க செய்கின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன. இத்துடன் தற்போது தான் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி மாற்றம் வர உள்ளது. இத்துடன், நிதியாண்டு மாற்றத்தையும் மேற்கொண்டால் ஏகப்பட்ட குழப்பம் ஏற்படும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

RTE 25% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம்

Click below

https://app.box.com/s/97l714r4uglw6bfsgv9t8ac9f769a22t

Monday, April 24, 2017

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  சொந்த வீடு என்பது கனவு. போராடினாலும் பலருக்கும் கைகூடாத காரியம்தான். காலம் முழுக்கச் சேமித்தாலும் 45 வயதில் நகரத்தைவிட்டுப் பல கிலோமீட்டர் தாண்டிதான் ஃப்ளாட் ஒன்றை வாங்க முடியும். பணத்தைத் திரட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். மத்திய அரசு ஏற்கெனவே, 'எல்லோருக்கும் வீடு' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தத் திட்டம் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றியமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிக்கடன்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் பி.ஃஎப். நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பி.ஃஎப். தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பி.ஃஎப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது. தற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, பி.ஃஎப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை பி.ஃஎப் அலுவலகம் விதித்துள்ளது.

அதன்படி, பி.ஃஎப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் பி.எஃப். கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பி.ஃஎப். நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும். Advertisement பயனாளர்களிடம் நேரடியாகத் தொகை வழங்காது. ஏப்ரல் 21-ம் தேதி முதல் இந்தச் சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 பேர் கூட்டாகச் சேர்ந்து ஃபிளாட் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தினால் வீடு வழங்க முடியாமல்போனால், 15 நாள்களுக்குள் எடுத்த பணத்தை பி.ஃஎப் நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், '' இந்தத் திட்டத்தின்படி நான்கு கோடி பேர் பயனடைவார்கள். ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வீடு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டியை உருவாக்கி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் இந்தியரும் சொந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு” என்றார். பி.ஃஎப் கமிஷனர் வி.பி.ஜாய், ''தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை பி.ஃஎப் பயனாளர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை'' என, கடந்த ஜனவரி மாதம் குறைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

TNGEA வேலைநிறுத்தம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.கிரிஜா வைத்தியநாதன் காரணம்
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் கூறியதாவது:–

தமிழ்நாடு அரசு ஊழியர்களுடைய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி மாநில முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 15–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் நடத்தினோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 25–ந்தேதி(இன்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று அரசுக்கு அறைகூவல் விடுத்து இருந்தோம்.

அதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் அவரை பேச்சுவார்த்தை நடத்தவிடாமல் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுத்து விட்டார்.

5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு
எனவே நாங்கள் திட்டமிட்டபடி நாளை(இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்துக்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்பட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படும். அரசு நிர்வாகமும் முற்றிலும் முடங்கும். இந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமையும்.

26–ந்தேதி மாநில முழுவதும் வட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டமும், 27, 28 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டமும், 29, 30 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டங்களும், மே.2–ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்படும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்து நூலகங்களிலும் ஆங்கில புத்தகம்


போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், கிளை நுாலகம் உட்பட அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. இதற்கு, அமைச்சர் செங்கோட்டையனும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

அதனால், அண்ணா நுாலகம் மறு சீரமைப்பு, கிளை நுாலகங்கள் புதுப்பிப்பு, ஆசிரியர்கள் இடமாற்றத்தில் விதிகள் மாற்றம், ஆர்.டி.இ., சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை என, பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில், 'அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்களும் கட்டாயம் வாங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் பொது நுாலகத்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:நுாலகங்களில், புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிளை நுாலகங்கள் உட்பட அனைத்து நுாலகங்களிலும், புத்தகங்களை பராமரிக்கவும், புதிய புத்தகங்கள் வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 32 மைய நுாலகங்கள், 241 முழுநேர நுாலகங்கள், 320 கிளை நுாலகங்கள் ஆகியவற்றில், கூடுதலாக ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கில வார, மாத இதழ்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது, போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட, பல தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த முரண்பாட்டால், 2005க்கு முன் சேர்ந்த சீனியர் ஆசிரியர்கள், 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை விட, குறைந்த ஊக்க ஊதியம் பெறுகின்றனர். இந்த முரண்பாட்டைப் போக்க, 2009 ஜூன், 1ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியத்தின் முரண்பாடுகளை, தலைமை ஆசிரியர்களே சரிசெய்து, அதற்கு கல்வித் துறையில் அனுமதி பெறலாம் என, கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு செயலுக்கு வரவில்லை.

இதனால், அரசாணை பிறப்பித்து, எட்டு ஆண்டுகள் தாண்டிய பின்னும், ஊக்க ஊதியக் குறைபாடு தீரவில்லை. மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்


'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Sunday, April 23, 2017

Transfer form new 2017-18

Click below

https://app.box.com/s/55z03j9aqskuu1o5jh6p1qcme3g8cew2

தொடக்கக்கல்வி இயக்குநரின் நான்காவது சுற்றறிக்கை

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'விஷுவல்' பாடப்புத்தகம்!


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக, இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, April 22, 2017

NEET exam hall ticket

Click below

http://164.100.108.61/cbseneet/Online/AdmitCardAuth.aspx

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் 5 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்


அரசு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியான அதிமுக உடைந்து குழப்பம் நிலவி வரும் நிலையில் அரசு ஊழியர் சங்கங்களின் அறிவிப்பால் அரசு நிர்வாகம் மொத்தமாக முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் ஒப்பந்தக் கூலி நியமனங்களை ஒழித்து காலியிடங்களில் முறையான நியமனம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக 64 துறை வாரியான சங்கங்கள் இணைந்த அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு கடந்த பிப்.20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஏப்.8ல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஏப்.15ல் திருச்சியில் மாநில அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தியுள்ளது. ஏப்.17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் துரைசிங் கூறுகையில், ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறையிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த அரசுத் துறைகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக இரு அணிகளாக உடைந்துள்ளது. அந்த கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தமிழக அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

* அரசு ஊழியர்கள் கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* அப்போது 1.75 லட்சம் அரசு ஊழியர்களை அப்போதைய முதல்வராக இருந்த ெஜயலலிதா டிஸ்மிஸ் செய்தார்.

* எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் அரசு ஊழியர்கள் மீது பாய்ந்தது.

* பின்னர் கடந்த ஆண்டு 2016ல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.