இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 08, 2014

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் இறந்தால் நிவாரணம் ரூ.10 லட்சம்

தேர்தல் பணியின்போது, இறப்போருக்கு வழங்கப் படும் நிவாரணத் தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், லட்சக்கணக்கான ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, தமிழக அரசு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க, அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியின்போது, இறப்போரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இறந்தோரின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதம், 5 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும், என்றார்.

பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்

மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.

 மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம். http://attendance.gov.in/

மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உத்தரவு


   அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கை விவரம்:

பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்று திரும்புகின்றனர். அவ்வாறு, சுற்றுலா செல்கையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநரின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுலா அழைத்துச் செல்வது என்பது மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும், வகுப்புகளுகுரிய பாடப்பொருள் சார்ந்தாகவும் அமையுமாறு தலைமையாசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடன் வரும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பெற்றோர், அலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் இருக்க வேண்டும். அதோடு, பாதுகாப்பு அடையாள அட்டையை ஒவ்வொருவரும் அணிந்திருக்கிறார்களா என்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முக்கியமாக மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியரும், மாணவிகளுக்கு முதுநிலை ஆசிரியை ஆகியோரும் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். அணைக்கட்டுக்கள், மின்சக்தி நிலையங்கள், கடற்கரைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் முன்பு ஆட்சியரிடமும், உரிய கல்வித்துறை அலுவலர்களிடம் அனுமதியும் பெற வேண்டும். சுற்றுலா செல்லும் போது அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டு நடந்து கொள்வேன் என்றும், இதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோரிடம் இருந்து மாணவர் அனுமதி கடிதம் முன்னதாகவே அளித்துள்ளனரா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்த பின்னர் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

. இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உடனே ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றுலா தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தான தகவலை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும் உடனே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் சுற்றரிக்கையில் தெரிவித்துள்ளார்.   

Tuesday, October 07, 2014

12-இல் ஊரக திறனாய்வுத் தேர்வு


பள்ளிப் படிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு அரசு  ஊரக திறனாய்வுத் தேர்வு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் 8-ஆம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் படிப்பு உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும்.

 இதில், திருப்பூர் மாவட்டத்தில் 50  மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு வரும் 12-ஆம் தேதி கீழ்க்கண்ட தேர்வு மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 337 பேர், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 332 பேர், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 பேர், உடுமலை எஸ்.வி.ஜி. மேல்நிலைப் பள்ளியில் 422 பேர், தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 260 பேர், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 127 பேர் என மொத்தம் 1,657 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் மற்றும் சுகாதாரம் காக்க "தூய்மையான பள்ளி' திட்டம்


மாணவர் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், "தூய்மையான பள்ளி' திட்டம், ஒன்பதாம் தேதி அறிமுகமாகிறது. அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகமாகும் இத்திட்டத்தின் முக்கிய அம்சம், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவது, பள்ளி சூழ்நிலையை ஆரோக்கியமாக மாற்றுவதாகும். முதற்கட்டமாக, காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவர் உறுதிமொழி வாசிப்பது, பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் தனிநடிப்பு போட்டி நடத்துவது, மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும்.

அடுத்ததாக பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துதல், விளையாட்டு மைதானம் பராமரித்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்தல், சத்துணவு கூடம், சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருத்தல், தலைமை ஆசிரிய அறை மற்றும் வகுப்பறைகளை தூய்மைபடுத்தப்படும். நூலகம், ஆய்வகத்தில் ஒட்டடை அகற்றுதல், பழுதடைந்த மேஜை, நாற்காலிகளை புதுப்பித்தல், பயன்பாடற்ற பொருட்களை அகற்றுதல், பள்ளி கட்டிடங்களின் பழுதை சரிசெய்தல், சுவர்களுக்கு வெள்ளையடித்தல், கட்டிட ஜன்னல், கதவுகள் மற்றும் மின்விசிறி, மாணவர் இருக்கை, அலமாரி, "டிவி', கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் போன்றவற்றை தூசி படியாமல் தூய்மைபடுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமும் பல் துலக்குதல், விரல்களில் நகம் வெட்டுதல், தூய்மையான ஆடை அணிதல், சாப்பிடும் முன் கைகளை கழுவுதல், சுகாதாரமான முறையில் உணவு சாப்பிடுதல், குப்பை தொட்டியில் வீசுதல் போன்ற நல்ல பழக்கங்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி பள்ளிகளில் துவங்கப்படும் இத்திட்டத்தை, வரும், 2015 ஜூன், 15 வரை, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் செயல்படுத்துமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. "தூய்மையான பள்ளி' திட்டத்தின் செயல்பாடு குறித்து, பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


"கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு கால அட்டவணை, விடுமுறை, நலத்திட்ட தேவைகள், மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம், தொடர்பான தகவல்கள் அனைத்துமே, கல்வித்துறை அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு, இ-மெயில் மற்றும் தபாலில் அனுப்பப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த தகவல்கள் விரைவில் பள்ளிகளை சென்றடையவும், காகித பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், "சிந்தியா சாப்ட்வேர்' திட்டம் நடைமுறையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்க மற்றும் 293 நடுநிலைப்பள்ளிகளில், பல ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

சிறப்பு தினங்கள் மற்றும் மாணவர்களுக்கான உறுதிமொழி எடுப்பது, பேரணி நடத்துவது, மாணவர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கல்வித்துறைக்கு அனுப்புவது மற்றும் பெறுவதில், நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள், தபால் சேவை ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளதால், தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், விழா கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை, உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து தபால் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், கல்வித்துறைக்கு சென்றடைந்தனவா என்ற குழப்பமும் நிலவுகிறது. ஆசிரியர்கள் மட்டுமின்றி, திடீரென பெறப்படும் தகவல்களால் மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கல்வித்துறை தொடர்பான தகவல்களை பெற, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "சிந்தியா சாப்ட்வேர்" முறை நடைமுறையில் உள்ளது.

நடுநிலைப்பள்ளிகளுக்கும் இவ்வசதியை செய்துதர, ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தரப்படுகிறது. முக்கியமான தகவல்கள் தபால் மூலமாக அனுப்பப்படுவதால், அவை பள்ளிகளை வந்தடைய தாமதமாகிறது. பெரும்பாலும், ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அருகில் உள்ள துவக்கப்பள்ளிகளும் இத்திட்டத்தை பயன்படுத்தும்படி, இணைப்பு சேவை ஏற்படுத்தினால், தகவல்களை பெறவும் அனுப்பவும் வசதியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

டி.எம். கார்டு... உஷார்... உஷார்...!

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?

கார்டு தொலைந்தால்..?

சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம். 

ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்!

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது. 

வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

பின் நம்பர் பத்திரம்!

முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.

ஸ்கேனிங் திருட்டு!

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம்.

ஆன்லைன் திருட்டு!

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

விழிப்புணர்வு அவசியம்!

திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். 

-சா.வடிவரசு

Monday, October 06, 2014

SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் அடிப்படை கணிதத் திறன் பயிற்சி


அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படைகணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு


பெயர் சேர்ப்பு,  முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.

அக்டோபர் 15-ஆம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் என்பது, இப்போதுள்ள வாக்காளர் பட்டியலை அப்படியே வெளியிடுவதாகும். அந்தப் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை அறிந்து கொள்ளலாம். நவம்பர் முதல் வாரம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள்: 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள், சுருக்க முறை திருத்தத்தின்போது தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ஆம் தேதியன்று புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் பணி: மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளன. இதனால், சுருக்க முறை திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்காது என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட வேண்டுமெனில், அது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CCE 2nd TERM WEEKLY SYLLABUS

Sunday, October 05, 2014

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு

கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்  விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 9 முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை தூய்மைப் பள்ளி நிகழ்ச்சி: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 9 முதல் 2015 ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மை செய்ய வேண்டும். வளாகத்தில் முள் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். சமையலறை, தலைமையாசிரியர் அறை, நூலகம், ஆய்வகம் ஆகியவற்றை ஒட்டடை அடித்து தூய்மைப்படுத்துதல் வேண்டும். பள்ளிகளில் உள்ள மேசைகள், நாற்காலிகள், அலமாரிகள் உள்ளிட்டப் பொருள்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பழுது நீக்க முடியாத நிலையில் உள்ள பொருள்களை பதிவேட்டில் பதிவு செய்து அப்புறப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக வழங்கப்படும் பராமரிப்புத் தொகையை வைத்து இந்தப் பணிகளை வேலையாள் மூலமாக மேற்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவற்றின் மூலம் தூய்மையான பள்ளியை அறியச் செய்ய வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு பேரணியும் நடத்த வேண்டும். பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், தூய்மையான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன்பு சோப்பினால் நன்கு கை கழுவுதல், சுகாதாரத்துடன் உணவு உண்ணுதல், குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்கி, மாணவர்களிடம் நல்லப் பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

அதோடு, சுத்தம் சார்ந்த உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது தொடர்பாக அறிக்கையையும் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.