இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 08, 2014

இனி ஏடிஎம் வேண்டாம், ப்ரீபெய்டு ஸ்மார்ட் கார்ட் போதும் – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

தற்போதைய நிலையில் ஏடிஎம் கார்டு முதல் ரேஷன் கார்டு வரை எந்த கார்டிலும் தில்லுமுல்லு இல்லாமல் இருப்பதில்லை. ஏடிஎம் கார்டின் மூலம் அதன் பின் நம்பர் தெரிந்தால் போதும், கார்டை போட்டு யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால் முற்றிலும் பயோமெட்ரிக் முறையிலான புதிய "ப்ரீபெய்டு கார்டு" என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ரிசர்வ் வங்கி.
இதில் நமது கைரேகை இருக்கும் என்பதால் இந்தக் கார்டை உரியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதனால் முறைகேடுகள், மோசடிகள் நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
பயோமெட்ரிக் முறை:
இந்த கார்டைப் பயன்படுத்துவோர், தங்களது ரேகையை சம்பந்தப்பட்ட மெஷினில் வைத்தால்தான் பணம் கிடைக்கும். எனவே உரியவர் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
கைரேகை கஷ்டம்:
ஆனால் கைரேகை பதிவுக்கு குறைந்தபட்சம் 20 வினாடி எடுப்பதாலும் நாடு முழுக்க எல்லா இடங்களிலும் கைரேகை பதிவுடன் கூடிய மெஷின்களை வைப்பது சாத்தியமில்லை என்பதாலும் வங்கிகள் தயங்கி வருகின்றன.
பணம் எடுக்க வழி:
தற்போது ப்ரீபெய்டு இ - வேலட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங், இ-டிக்கட் எடுப்பது, கட்டணங்கள் வரிகளை செலுத்துவது போன்றவற்றுக்கு வசதியை சில தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன. இந்த கார்டுகள் மூலம் பணம் எடுக்கவும் வழி செய்ய வேண்டும் என்று இவை கோரி வந்தன.
ஸ்மார்ட் கார்டு வசதி:
ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு மறுத்து வந்தது. இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையில் பணம் எடுக்க பயன்படும் வகையில் ஸ்மார்ட் கார்டு வசதியைஅறிமுகம் செய்ய இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.
கார்டு மட்டும் போதும்:
அதாவது, ஸ்மார்ட் கார்டிலேயே கைரேகை பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேறு வகையில் கைரேகை பதிவு தேவை இல்லை. கார்டு மட்டுமே போதும். பதிவு பெற்ற கைரேகையை தங்களிடம் இருக்கும் மெஷினில் ஒப்பிட்டு கடைகளே பணம் அளிக்க முடியும்.
தில்லுமுல்லு குறையும்:
இந்த முறையில் தில்லுமுல்லு வெகுவாக குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வந்தால் எதிர்காலத்தில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள் எல்லாம்கைரேகை பதிவில்லாமல் பயன்படாத நிலை ஏற்படும்.
வர்த்தகத்துக்கான லைசன்ஸ் :
தற்போது ப்ரீபெய்டு மற்றும் இ -வேலட் கார்டுகளை வெளியிட்டு ஏர்டெல் மணி உட்பட சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு இந்த புதிய ஸ்மார்ட் கார்டு வெளியிடும் வர்த்தகத்துக்கான லைசன்ஸ் தரப்படலாம்.
கைரேகை மூலம் பணம்:
இந்த ஸ்மார்ட் கார்டு அமலுக்கு வந்தால் ஏடிஎம் மையத்துக்கு போக வேண்டாம். லைசன்ஸ் உள்ள கடைகளில் கூட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணம் பெற முடியும்.

Wednesday, May 07, 2014

தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம

் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூல்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்: பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும

். அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

   மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல், இறுதிகட்டத்தை நெருங்க, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

Tuesday, May 06, 2014

வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: அரசுக் கல்லூரி பட்டதாரிகள் பாதிப்பு

  ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது

. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளத

ு. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி., உத்தரவுப்படி தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.

டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும் 12ம் தேதி வரை, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்

ஆகஸ்ட் 24ல் ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வு

இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெறும்' என, யூ.பி.எஸ்.சி., அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்காக, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காக, ஆண்டுதோறும் நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெற உள்ளது. முக்கிய தேர்வான, மெயின் தேர்வு, டிசம்பர் 14ல் நடைபெறலாம் என, இந்த தேர்வுகளை நடத்தும், மத்திய பணியாளர் தேர்வாணையமான, யூ.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என, மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்பட்டு, தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

BHARATHIYAR UNIVERSITY M.Ed., 2014-15 APPLICATION

M.Ed., Application click below

http://www.b-u.ac.in/sde/med_app_2014.pdf

GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்ய GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2014-2015 – Orders – Issued.

Monday, May 05, 2014

Elementary transfer Application.form

வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

   வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம் அல்லது அவர் புது வீட்டில் குடியேறும் முதல் மாதம் தொடங்கும். இவற்றுள் எந்த மாதம் முன்பு வருமோ அந்த மாதம் தொடங்கும். வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு.

அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம். ஒரு பணியாளர் பத்து லட்சம் ரூபாய் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவருக்கு முதல் தவணையாக ரூபாய் ஐந்து லட்சம் ஜனவரி 2014-ல் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை அக்டோபர் 2014-ல் வழங்கப்படுவதாகவும் கொள்வோம். கடன் பிடித்தம் ஜூலையில் தொடங்கும். மாதத் தவணை ரூபாய் 10 ஆயிரம். கடன் தொகை, தவணை எண் மற்றும் வட்டி வீதம் ஆகியவை மாறும்போது தக்க மாற்றங்களுடன் மேற்கண்ட முறையில் வட்டியைக் கணக்கிடலாம். அதிகபட்சமாக அறுபது தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு வட்டியை அவர்களது பணிக்கொடையில் (Death cum Retirement Gratuity) பிடித்தவும் செய்யவும் கூடும். வட்டியைச் செலுத்திய பின் வீட்டுப் பத்திரம் முதலானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். கடன் தொகைப் பிடித்தம் முடியும்வரை, கடன் மற்றும் வட்டித் தொகைக்குக் காப்புறுதி செய்து பிரீமியத் தொகை செலுத்தி வர வேண்டும். -

கட்டுரையாளர், ஓய்வுபெற்ற அரசு அதிகா

TNOU term end exam January 2014 results published

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150 செலுத்தியும், அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150லிக்கான கேட்பு வரைவோலை எடுத்து, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில், ரூ.15லிக்கான அஞ்சல் வில்லையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 32 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 4 அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளும், சிறப்புப் பயிலகங்களும் உள்ளன.

Saturday, May 03, 2014

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு


அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1.9.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘உபரி ஆசிரியர்கள் உபரி பணியிடங்கள் தொடர்பான விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் ஜூன் 18-ல் திறப்பு

    அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் தொடங்கி மே 20ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து கலை கல்லூரிகளிலும் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கும். ஜூன் மாதம் தான் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

    திருப்பூரில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் நேற்று வழங்கப்பட்டன. மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண் ணப்பங்களை வாங்கி சென்றனர். விண்ணப்பங்கள் வினியோகம் தமிழ்நாட்டில் உள்ள கல்லூ ரிகளில் என்ஜினீயரிங் படிப் புக்கான இளநிலை பொறியி யல் கலந்தாய்வு விண்ணப் பங்கள் மாணவர்களுக்கு நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் பல்லடம் ரோட் டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 2-வது நுழைவுவாயிலில் பி.இ. கலந்தாய்வுக்கான விண் ணப்ப வினியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9.30 மணி முதல் விண்ணப்பங்கள் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. 20-ந்தேதி வரை இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கே மாணவர் கள் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் குவிந்தனர். 10 மணி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். முதல் கட்டமாக மையத் துக்கு 3 ஆயிரம் விண்ணப் பங்கள் வந்திருந்தன. நேற்று ஒரே நாளில் 700-க்கும் மேற் பட்ட விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தது. இதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர் களுக்கு ரூ.250 -க்கும், பி.சி. வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ரூ.500-க்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. வருகிற 20-ந்தேதி வரை விண் ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குச் சீட்டு தரவில்லை: ஆசிரியர் கூட்டணி புகார்

வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களாக பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார் எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டாரக் கிளைத் தலைவர் மணிகண்ட பிரபு, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் 180 பள்ளிகளில் 1,200 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், மக்களவைத் தேர்தலுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 11 முதல் 24-ஆம் தேதி வரை 14 நாள்களாக வீடுதோறும் பூத்சிலிப் விநியோகம் செய்தனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பணியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றுவதற்காக தபால் வாக்குச்சீட்டு (போஸ்டல் ஓட்டு) இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும், தேர்தல் தினத்தில் வழங்கப்படவேண்டிய மதிப்பூதியமும் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் அதிருப்தியை தெரிவித்துகொள்கிறது என்று தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தினமான வரும் 16-ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குப் பதிவு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம

்25 சதவீதம்:

ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், ஆரம்பநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, ஒதுக்க வேண்டும். இந்த பிரிவில் சேரும் குழந்தைகளுக்கான கல்விச் செலவை, மத்திய அரசு ஏற்கிறது. இந்த பிரிவின் கீழ், மாணவர்களை சேர்க்க, தனியார் பள்ளிகள், ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஆண்டு, 20 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த போதும், அவர்களுக்கான கல்வி கட்டணம், இதுவரை, பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இதனால், இந்த ஆண்டு, ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை, பெரிய அளவில் நடக்காது என, தெரிகிறது. ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்த, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், ஏற்கனவே அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 25 சதவீத இடங்கள் விவரத்தை, நேற்று முன்தினமே, அறிவிப்பு பலகையில், பள்ளிகள் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு பள்ளியும், அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பம் வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, மொத்த இடங்களையும், பள்ளிகள் நிரப்பிவிட்டன.

அட்டவணையை காணோம்:

ஒருசில பள்ளிகள், ஆர்.டி.இ., கீழ், மாணவர் சேர்கை நடத்த ஆர்வம் காட்டினாலும், அதற்குரிய வழிகாட்டுதலை, இயக்குனரகம் வெளியிடவில்லை. ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பம் வழங்குவதற்கான காலக்கெடு, நேற்று முதல், 9ம் தேதி வரை உள்ளது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கலானது. அதில், நேற்று முதல், 18ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஏற்ப, பழைய அட்டவணையில் மாற்றம் செய்து, புதிய அட்ட வணையை, இயக்குனரகம் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை, புதிய அட்டவணை வெளியிடவில்லை. இயக்குனரகத்தின், இந்த அமைதி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும், பெரிய தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு


கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை


   ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது.  தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர்.  2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.  யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.  யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதல் மதிப்பெண் பெறுவோர்க்கு வாய்ப்பு வழங்குவது போல பணிநியமனம் வழங்கினார் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும். அதே போல ஆசிரியர் தேர்வு வாரியமும் தேர்ச்சி பட்டியல் தயாரித்து பணி நியமனம் வழங்க பரிசீலனை செய்ய ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.