இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 30, 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இதுவரை லிட்டருக்கு ரூ.4.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் திருப்திகரமாக உள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் (உள்ளூர் வரிகள் தவிர) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.3.18 குறைந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல் டெல்லியில் ரூ.63.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.35 ஆகவும், மும்பையில் ரூ.69.73 ஆகவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 15-ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாயும், அதற்கு முன்னர் 85 பைசாவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு. - இடைக்கால தடை இறுதி தீர்பு வரை தொடர்கி

இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை  படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர்.  அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்ததுது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இடைக்கால தடை  உத்தரவை இந்த பென்ச் தான் வழங்கியுள்ளது, எனவே இம்மேல்முறையீட்டை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர்.

மெலும் இந்த இடைக்கால தடையானது இறுதி தீர்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டைப் பட்டம் முடித்தவர்களையும் பதவியுயர்வு பட்டியலில் வைக்க விரைவில் கல்வித்துறை ஆணையிடும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது.

Monday, April 29, 2013

2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது

  தொடக்க கல்வி 2–ம்ஆண்டுக்கான பட்டயத்தேர்வு (இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:–
ஜூன் 24–ந்தேதி இந்திய கல்வி முறை, 25–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் –2, 26–ந்தேதி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)–2,இளஞ்சிறார் கல்வி –2, 27–ந்தேதி ஆங்கிலம் மொழிக்கல்வி –2, 28–ந்தேதி கணிதவியல் கல்வி –2, 29–ந்தேதி அறிவியல் கல்வி –2, ஜூலை 1–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –2, 4–ந்தேதி கற்கும் குழந்தை, 5–ந்தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்–1, 6–ந்தேதி மொழிக்கல்வி( தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) –1, இளஞ்சிறார் கல்வி –1 8–ந்தேதி ஆங்கில மொழிக்கல்வி –1, 9–ந்தேதி கணிதவியல் கல்வி –1, 10–ந்தேதி அறிவியல் கல்வி –1, 11–ந்தேதி சமூக அறிவியல் கல்வி –1 அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்கும். இவ்வாறு தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.  

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.  (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு A

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

Sunday, April 28, 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டுள்ளது. வரிசை எண்.31-வது இடத்தில் உள்ளதால் இவ்வழக்கு இன்று மாலைக்குள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டம் அக்டோபர் 1–ந் தேதி முதல் அமல் -

கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு மானியம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது சென்னையில் ரூ.398க்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு சிலிண்டருக்கு மானியமாக மத்திய அரசு, 490 ரூபாய் 50 காசுகள் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியா முழுவதும் 14 கோடி வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இதற்கான மானிய தொகையை, மத்திய அரசு அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.

நேரடி மானிய உதவி இந்த மானிய தொகையை, இனிமேல் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியா முழுவதும், 20 மாவட்டங்களில் நேரடி மானிய திட்டத்தை அடுத்த மாதம் (மே) 15–ந் தேதிக்குள் பரீட்சார்த்தமாக அமல்படுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி கியாஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். மானிய தொகையை பொதுமக்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தி விடும். ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் இந்த திட்டத்தின்படி ஒரு நுகர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானிய திட்டத்தில், ஒரு இணைப்பு வருடத்துக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை சிலிண்டருக்கு மட்டும் மானிய தொகை கிடைக்கும்.

இந்த திட்டம் அமல்படுத்தப்படும்போது, பொதுமக்கள் கியாஸ் சிலிண்டரை முழு விலை கொடுத்து வாங்க வேண்டும். உதாரணமாக டெல்லியில் தற்போது மானியத்துடன் சேர்த்து ஒரு சிலிண்டரின் விலை 901 ரூபாய் 50 காசுகள். இந்த விலைக்கு நுகர்வோர், கியாஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதற்கான மானிய தொகையை பின்னர் மத்திய அரசு, வங்கி கணக்கில் செலுத்தும்.

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

  அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஏழை வீட்டு குழந்தைகள் என்ற காரணத்தினால் அவர்களின் கல்விக்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அரசின் சார்பில் 4 செட் விலையில்லா சீருடை, புத்தகம், வண்ணப் பென்சில்கள், புத்தகப் பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், காலணிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.கோடீஸ்வரன் கையில் இருந்த மடிக்கணினி தற்போது அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனின் கையிலும் தவழுவதற்கு வழிவகை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா.கல்வியில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தருகிறது. அரசுப்பள்ளிகளில் 21,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.17,000 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையான கட்டடமைப்புகள், தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து நிறைய கனவுகளுடன் இருப்பார்கள். மாணவ, மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Saturday, April 27, 2013

மே 9-ந்தேதி பிளஸ்-2, மே 31-ல் 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1-ந்தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு மார்ச் 27-ந்தேதி முடிவடைந்தது.  மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 17-ந்தேதி முடிவடைந்தது. கம்ப்யூட்டர்களில் மதிப்பெண்களை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது.   மே 10-ந்தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 10 1/2 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதன் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 17-ந்தேதி தொடங்கியது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அதன் பிறகு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 31-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

Friday, April 26, 2013

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.69.81 கோடி ஒதுக்கீடு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

   ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர். அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க வேண்டும். தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை. அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப் பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வை போல இனி ஆண்டுக்கு 2 தடவை ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவ

யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறையின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால். ‘நெட்’ அல்லது ’ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய அளவிலான ‘நெட்’ தகுதித்தேர்வினை யு.ஜி.சி. நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும்.

ஸ்லெட் தேர்வை நடத்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஸ்லெட்–நெட் தேர்ச்சி தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்லெட் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. யு.ஜி.சி.யின் நெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு திட்டமிட்டபடி தேர்வு தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன் வெளியிடப்படும். நெட் தேர்வு ஆண்டுதோறும் கண்டிப்பாக நடத்தப்படுவதால், அதற்கு தயாராவோர் நன்கு திட்டமிட்டு படிக்க முடியும். ஆனால், ஸ்லெட் தேர்வு அப்படி அல்ல. 2 ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, இஷ்டம்போல் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், ஸ்லெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று மாணவ–மாணவிகளால் யூகிக்கக்கூட முடியவில்லை. இனி ஆண்டுக்கு 2 முறை இந்த நிலையில், இப்பிரச்சினை குறித்து, அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், யு.ஜி.சி. நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வையும் இனிமேல் ஆண்டுக்கு 2 தடவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நெட் அல்லது ‘ஸ்லெட்’ தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டம் பெற்றவர்களாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி தேவையில்லை

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குஇடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டி TNPTF பொதுச் செயலாளர் கடிதம்


Thursday, April 25, 2013

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது

ரயில் டிக்கெட்டுக்கு முன் பதிவு செய்யும் நாட்கள், நான்கு மாதத்தில் இருந்து, இரண்டு மாதங்களாக குறைக்கப்படுகிறது. முன் பதிவு நாட்களை குறைக்க வேண்டும் என, பலதரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, முன் பதிவு நாட்களை, 120 நாளிலிருந்து, 60 நாட்களாக குறைக்க ரயில்வே முடிவு செய்தது. மே, 1ம் தேதி முதல், முன்பதிவு காலம், 60 நாட்களாக அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம், உண்மையான பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29 ல் கவுன்சிலிங்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29 ல் "கவுன்சிலிங்' நடக்கிறது. கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்,சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர். ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில் சேரவில்லை.

இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணிநியமன "கவுன்சிலிங்' நடக்கிறது. தேர்வில் வெற்றி பெற்று மறு "கவுன்சிலிங்' அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு பெறாமல் காத்திருப்பில் உள்ள 150 பேரின் நிலை குறித்து இது வரை தகவல் வெளியாகவில்லை.

திருப்பூரில் 10 இளநிலை உதவியாளருக்கு  பணி நியமனம் உத்தரவு

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் வெற்றிபெற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை நடந்த கலந்தாய்வு மூலமாக மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளிóல் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவுகளை பெற்றனர்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்று கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் கலாந்தாய்வு நடைபெற்றது.  

திருப்பூர் மாவட்டத்திற்கான இக்கலந்தாய்வு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ஜெயலட்சுமி முன்னிலையில் இக்கலந்தாய்வில் 10 பேர் பங்கேற்றனர்.  திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட, தொடக்க கல்வி அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் 44 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர்.   இந்த 10 பேரில் 8 பேர் தாங்கள் விரும்பிய அரசுப் பள்ளிகளை தேர்வு செய்தனர். ஒருவர் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மற்றொருவர் தொடக்கக் கல்வி அலுலகத்தில்(தெற்கு) பணியாற்ற விருப்பம் தெரிவித்து, பணியிடங்களை தேர்வு செய்தனர். கலந்தாய்வில் இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

Wednesday, April 24, 2013

Part Time Trs Application Form

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

  தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஒரு பள்ளியில் தினசரி மூன்று மணி நேரம் பணிபுரிய வேண்டும்.

வாரம் ஒன்றுக்கு மொத்தம் 9 மணி நேரம் பணி நேரமாகும். பணி நாடுநர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, அப்பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். 137 பணியிடங்கள்: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 49 இடங்களும், ஓவிய ஆசிரியர் பணிக்கு 52 இடங்களும், இசை, தையல், கணினி, தோட்டக்கலை, வாழ்க்கைத் திறன், தகவல் தொடர்புத் திறன், கட்டுமான ஆசிரியர் பணிகளுக்கு 36 இடங்களும் உளளன.

விண்ணப்பங்களை சுய விலாசமிட்ட ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் ஒப்படைத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.