இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 12, 2013

பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்

வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.  இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது:

வரும் 20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.  பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.  

மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Monday, February 11, 2013

TNPSC GROUP I Hall ticket

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு 16–ந்தேதி நடக்கிறது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு 33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ந்த முதல் நிலைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.net ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் எம்.விஜயக்மார் தெரிவித்துள்ளார்.

"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

. "குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு: முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார். பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.

எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது. ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Sunday, February 10, 2013

218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களைத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் (11) கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதுபோல் 2010-11ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 218 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகள் 2012-2013-ஆம் கல்வியாண்டில் 6, 7, 8 வகுப்புகளுடன் முழுமை பெற்ற நடுநிலைப் பள்ளிகளாக இயங்குகின்றன. எனவே, 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.

அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும், பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின்படி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 09, 2013

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு இணையதள வசதி* ரூ.50 கோடியில் திட்டம் நிறைவேற்றம்

Thaமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, "பிராட்பேண்ட்' இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

.இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநில சேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.

ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும். நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Friday, February 08, 2013

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மாதம் தான் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

் பள்ளிகளில் மாணவர் சேர்கை மே மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில தனியார் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. இதனால் தகுதியான மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை கிடைப்பதில்லை. எனவே இதை தவிர்க்க பள்ளிகளில் மே மாதம் முதல் சேர்க்கையை ஆரம்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை நடுநிலைப்பள்ளித் தலைமையாசிராக நிலையுயர்த்தி ஆணை வெளியீட

அரசு ஊழியர் திருமணமாகாத /விவாகரத்தான/விதவை மகளுக்கு மாதம் ரூ3050 ஓய்வூதியம்

Tuesday, February 05, 2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற "டிப்ஸ்' * புதிய முறையை எதிர்கொள்வது எப்படி

தயாராவது எப்படி ? : கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.

பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும். தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும்.

முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம். அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும். மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம். பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம். இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு, சைவமும் வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. வெற்றி பெற வாழ்த்துகள்.

தமிழகம் முழுவதும் 7 நாட்களுக்குள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கலர் பென்சில

் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு நிலையை பொறுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பை, உபகரண பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், காலணி, சீருடை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார்.

இந்த கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அரசு அறிவித்த இலவச பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்கட்டமாக தொடக்கக் கல்வி மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 2ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெழுகு பென்சிலும், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலர் பென்சில்களும் விரைவாக வழங்க வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்டங்களுக்கு பென்சில்கள் உடனே அனுப்பப்படும். அதை அடுத்த வார இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

் சென்னை பல்கலைக்ககழகத்தில், இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ., பி.காம். பி.எஸ்சி., ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண www.unom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Monday, February 04, 2013

IGNOU TERM END EXAMINATION DECEMBER 2012

IGNOU B.ed Results

தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளத

ு. தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Saturday, February 02, 2013

தனி ஊதியம் குறித்த தெளிவுரைக் கடிதம்

சீசன் டிக்கெட் வழங்கும் முறை ரயில்வே துறை புதிய முடிவு

ரயில் பயணிகளுக்கு, இனி, ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே, சீசன் டிக்கெட் வழங்குவது என, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்களில் தினமும் பயணம் செய்வோர், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் என்ற அளவில், தற்போது சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்கின்றனர். இதில், மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டு என்ற அளவில் மட்டுமே, இனி, சீசன் டிக்கெட் வழங்கப்படும்

. ஒரு ஆண்டுக்கு சீசன் டிக்கெட் வாங்கினால், 10 மாதம், 8 நாட்களுக்கான கட்டணத் தொகையே, சீசன் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆறு மாதத்திற்கான சீசன் டிக்கெட் வாங்கினால், ஐந்து மாதம், 4 நாட்களுக்கான கட்டணத் தொகையை செலுத்தி, சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில், சீசன் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு, ஒரு முறை செலுத்திய கட்டணத் தொகை, எந்தக் காரணத்திற்காகவும் திருப்பித் தரப்பட மாட்டாது. மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், சீசன் டிக்கெட்டுகள், தொடர்ந்து வழங்கப்படும். சீசன் டிக்கெட் பெறுவதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்தகவல், மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்

் எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான் இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர் வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் மேலும் பேசுகையில் கூறியதாவது:

மாணவர்களாகிய நீங்கள் நாளை சமுதாயத்தை ஆள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதற்கு பின்னராவது மாணவர்கள் திருந்தி, சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதனைப் பெற்றோர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்தததால்தான் இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன். நான் படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் தவறு செய்யும் போது ஆசிரியர்கள் கண்டித்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். ஆனால் அதை அப்போது பெற்றோர் குறை சொல்லவில்லை. நல்லதற்கு என்றுதான் கூறினார்கள். வீட்டில் ஒன்று அல்லது இரு குழந்தைகளை வைத்துள்ளார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்றால்  பிள்ளைகளை வைத்து பெற்றோரால் சமாளிக்க முடியுமா? ஏன் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள் என்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டுள்ள, வெவ்வேறு குணநலன் கொண்ட பிள்ளைகளை வைத்து ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பள்ளி நிர்வாகம் நடைபெற இயலும். பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகள் வரும்போது அதனை புறக்கணித்துவிடுங்கள்.இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். மாணவர்களை நல் வழிப்படுத்த கண்டிப்பு அவசியம் தேவை.உங்கள் பிள்ளைகள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் விருப்பப்படி பொறியியல், மருத்துவம் எடுத்து படிக்க வையுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெற்றோர் மாணவர்களை அடுத்த மாணவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறாமல், ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகத்தான் இருக்கும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கலாம் என்று கூறினார்.

பணியிடை பயிற்சி ரத்து செய்ய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

"பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உண்டு உறைவிடப் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநிலச் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஃபிப்ரவரி, 4-7, 11-14 மற்றும், 18-19 என்ற அளவில், பத்து நாட்கள் நடக்க உள்ள உண்டு உறைவிடப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி நடக்கிற தகவல் அறிந்து, பள்ளித் தலைமையாசியிர்கள், பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பெண்களாக இருப்பதும், அவர்கள், தங்களது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பணிக்கனுப்புதல், குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.

ஒரு குடும்பத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பள்ளித் தலைமையாசிரியர்களாக இருப்பின், அவர்களின் குடும்பம் அன்றாட நடைமுறை வாழ்நிலையில் பெருத்த இன்னல்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் உள்ளாகும் அபாயம் பயிற்சியினால் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்பச் சூழ்நிலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேண்டுகோளை ஏற்று, உண்டு உறைவிடப்பயிற்சியை ரத்து செய்து, தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், 9.30 முதல், 4.30 மணி வரையிலான கால அட்டவணையைக் கொண்டு அந்தந்த வட்டார வளமையத்தில் பணியடைப் பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3687 காலியிடங்களுக்கு 3.75 லட்சம் பேர்: குரூப் 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு 12-ந் தேதி நடத்தியது.   நகராட்சி ஆணையர் சார்பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முது நிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் காலியாக இருந்த 3,687 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது.   தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடந்தது.   தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர்.   தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படும் என்று ஆவலோடு பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முடிவு வெளியாகவில்லை.   இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், குரூப்-1 தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருவதால் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே அடுத்த வாரம் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.