இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 10, 2013

ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் : பிப்., 8 க்குள் வழங்க கல்வித்துறை உத்தரவு

  தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல், தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள். முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும்.

பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்: பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம். பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை. பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர். பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி. பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை. இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

குரூப்-1 தேர்வு முடிவு வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உட்பட 162 காலி பணியிடத்திற்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 முதல் 5 -ம் தேதி வரை நேர் காணல் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற ‌இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவு

தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வித்துறை உத்தரவு மாலை சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடிக்க வேண்டும

பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை 5 மணிக்குள் முடித்து மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார் செய்ய காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி மாலைநேர சிறப்பு வகுப்புகளை மாலை 5 மணிக்குள் முடித்து அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Wednesday, January 09, 2013

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; புதிதாக 22 லட்சம் பேர் சேர்ப்பு!

    தமிழகம் முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட  இறுதி வாக்காளர் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது.புதிதாக விண்ணப்பித்தோருக்கு வருகிற 25 ஆம் தேதி  அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, 2013 ஆம் ஆண்டு ஜனவரி  1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு நடந்து முடிந்தது.அதன்பின், வரைவு  வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் புதிதாக  பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம்  தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், புதிதாக பெயர் சேர்க்க 23 லட்சத்து 37,934 பேர், பெயர் நீக்க 2 லட்சத்து  38,617 பேர், திருத்தம் செய்ய 2 லட்சத்து 66,225 பேர், பெயர் முகவரி இடம்  மாற்ற ஒரு லட்சத்து 12,596 பேர் விண்ணப்பித்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரமும்  கணினியில் பதிவு செய்யப்பட்டு, கள விசாரணைகள் மேற்கொள்ள்ப்பட்டன.

இந்நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழகம் முழுவதும்  வெளியிடப்பட்டது.மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள்,இறுதி வாக்காளர் பட்டியலை  வெளியிட்டனர். சென்னையில் ரிப்பன் மாளிகையில் ஆணையர் விக்ரம் கபூர்,சென்னை மாவட்டத்தில்  உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த மண்டல  அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக  விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25  ஆம் தேதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில்,"தமிழகம்  முழுவதும் 5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சுமார் 22 லட்சம் பேர்  வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர்  தினமான வரும் 25 ஆம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும்.

புதிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த  மண்டல அலுவலகங்கள்,தாலுகா அலுவலகங்களில் பெற ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன" என்றார்.

வங்கித் துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்ப

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக 22 ஆயிரம் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன. எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்

   தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரையைச் சேர்ந்த முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்துவந்தது.

இப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலனை நியமித்து, தமிழக ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார். இவர் மதுரை பசுமலையைச் சேர்ந்தவர். பியுசி படிப்பை பாத்திமா கல்லூரியிலும், பி.எஸ்சி., பட்டத்தை மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியிலும், எம்.எஸ்சி., பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பெற்றவர்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ்!

  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ்  வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அரசுக்கும், மக்களுக்கும்  இடையே பாலமாக செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று  சொன்னால் அது மிகையாகாது.

அரசின் நலத் திட்டங்களுக்கும், நாட்டின்  முன்னேற்றத்திற்கும் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 1. 2011-2012 ஆம் ஆண்டிற்கு, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 30 நாட்கள்  ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

  2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து  சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும்  முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்,  சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி  பணியாளர்கள்,  கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்  துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து  உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த  அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில்  பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்  பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு  போனஸ் வழங்கப்படும

். 3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு /  அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின்  கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்தப் போனஸ் வழங்கப்படும். 

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக  அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல்  பரிசாக வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம், அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 311 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் கட்டணம் 20% அதிகரிப்பு; 21 ஆம் தேதி முதல் அமல்

  பயணிகள் ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர்,10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ரயில் கட்டணம் உயர்tத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சரக்கு ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறிய அவர், இந்த கட்டண உயர்வின் மூலம் 12,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட முடிவு செய்யப்ப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கட்டண உயர்வு விவரம்  தூங்கும் வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 6 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.சாதாரண வெளியூர் ரயில்களுக்கு கி.மீ.க்கு 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.நகர்ப்புற ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 ஆம் வகுப்பு கட்டணம் கி.மீ.க்கு 4 காசும்,ஏ.சி.3 டயர், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

21 ஆம் தேதி முதல் அமல் இந்த கட்டண உயர்வு வருகிற 21 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலாவதாக அவர் மேலும் கூறினார். கட்டண உயர்வு ஏன்? மேலும் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு ஏதும் இருக்காது என்று தெரிவித்த அவர், 6 ஆவது ஊதிய கமிஷன் செலவினம், ரயில்வே பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

GO 5. Pongal gift for Teachers & govt Employees

GO.6 Pongal gift for Pensitioners

Tuesday, January 08, 2013

1167 மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை

  தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

HSC 2013 Time table

HSC 2013 General Instractions

Monday, January 07, 2013

1,060 காலி பணி இடங்கள்: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க தனி அதிகாரி -

   அரசு கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,060 உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 1,060 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெக்ட, நெட் தேர்ச்சி அவசியம் இல்லை. ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. பட்டம், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு நடத்தப்படுவதால் உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பழைய நடைமுறையின்படியே நியமனம் நடைபெற உள்ளது.

தனி அதிகாரி நியமனம் உதவி பேராசிரியர் நியமன பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், உதவி பேராசிரியர் நியமன பணிகள் அனைத்தும் தனி அதிகாரி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு

   நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த 75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12 டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.

On upgradion Kallar Reclamation of schools

Sunday, January 06, 2013

ஓராண்டில் இரட்டை பட்டப்படிப்பு : தகுதியில் சேர ஆசிரியர்களுக்க தடை ு

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆக.,14ல் தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப் படிப்பு மூலம் ஓராண்டில் (2 டிகிரி) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.