இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 17, 2019

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் மாணவிகளை மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் குறைந்தபட்சம் ஒன்றரை மணி (90 நிமிஷங்கள்) நேரம் வீதம் வாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும்.

கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பதுடன், மாணவிகளுக்கு பேரீச்சம் பழம் உட்பட ஊட்டச்சத்து பொருள்களும் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment