இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 20, 2019

கோரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வுகாண வேண்டும்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

கடந்த 1.1.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய பங்களிப்பு ஊதியத்தை பங்குச் சந்தையில் செலுத்தும் போது, பங்குச் சந்தைலாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும்.  பங்குசந்தை நஷ்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்பதைஅரசு புரிந்து கொள்ள வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56- ஐ பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தி ஆள்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறியாக்கி விட்டது.

மேலும் அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளோடு அவற்றை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கன்வாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பாதிக்கும் செயல்பாடுகளை விடுத்து உடனடியாக அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப்  போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படி அழைத்து பேசி தீர்வு காணா விட்டால்   செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவளித்து அதில் பங்கு பெறும் என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment