இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 06, 2018

MORNING PRAYER 7-11-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.18
திருக்குறள்

அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்:

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

பழமொழி

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்பாடு

* முடிந்த அளவு தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பேன்.
* மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே வாங்கி என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன்.

பொன்மொழி

மனிதன்

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

     - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு

1. கியூபா நாட்டை கண்டு பிடித்தவர் யார்?

கிறிஸ்டோபர்
கொலம்பஸ்

2. பியானோ என்பதன் அர்த்தம் என்ன?

மெல்லிசையாக இசைக்க வேண்டியது

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கடுக்காய்



1.  கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும்.

2. காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

English words and meaning

Wight ( Human ) மனிதன்
White.      வெண்மை
Whimper. தேம்பி அழுதல்
Whittle.
துண்டாக்கு( செதுக்கு)
Whim.     விருப்பம்

அறிவியல் விந்தைகள்

* கம்பளி பூச்சிகள் தாங்கள் பிறந்த இடத்தில் உள்ள இலைகளை மட்டுமே உண்ண வேண்டும். வேறு இடம் சென்று உண்ண ஆரம்பித்தால் அழிவுதான்
* அட்டை பூச்சிகளுக்கு 300 பற்கள் உண்டு
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மருத்துவர்கள் அந்த இடத்தில் அட்டை பூச்சியை கடிக்க வைத்து இரத்த ஓட்டம் சரி செய்வது உண்டு.
* வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களினால் உணவை ருசி பார்க்கும்.

நீதிக்கதை

தலைவன்

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது' என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.

அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.

(எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.)

இன்றைய செய்திகள்

07.11.18

* ஜிப்மர் செவிலியர் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவிகள் 13வது ஆண்டு தீப ஔி ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழா, அப்துல் கலாம் கலையரங்கில் நடந்தது.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

* அவசர தேவைக்கு எண் 100-ஐ அழைப்பதை வேகமாக பொதுமக்களுக்காக உதவிடும் காவலன் ஆப் செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

* இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று டி20 கிரிக்கெட் தொடரை வெல் லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

* வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே.

No comments:

Post a Comment