இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 25, 2020

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்: சாப்ட்வேர் மூலமே பட்டியல் அனுப்ப உத்தரவு: சர்வர் பிரச்னையால் அலுவலர்கள் தவிப்பு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. 

இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூறியதாவது: தற்போது, அளிக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன், ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை.  மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாதுஎன சாதாரணமாக கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது, சம்பள பட்டியலை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25ம் தேதிக்குள் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு விடும்.

சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, February 23, 2020

ப்ள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், அவரவா் மாவட்டத்தில் உள்ள ஆசிரியா், மாணவா் பணியிட நிா்ணயப் பிரிவு கண்காணிப்பாளா் மற்றும் பணியிட நிா்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக்கல்வி அதிகாரியை தேவையான புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு

அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன.

 நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோ்வு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோ்வு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.

25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வெகுமதி


அரசுப் பள்ளிகளில் 25 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெகுமதி வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களை சிறப்பிக்கும் வகையில் கல்வித் துறை சாா்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் தொடா்ந்து 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணிபுரிந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. தகுதியான ஆசிரியா்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவா்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் ‘அப்சா்வேஷன் மொபைல் ஆப்’  அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவா்.

பள்ளி ஆய்வின்போது இந்தச் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Saturday, February 15, 2020

16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்


பழைய வாக்காளா் அட்டைகளை வைத்திருப்போா் புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தோ்தலில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை பத்து எண்கள் கொண்ட அடையாள அட்டையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 16 எண்கள் கொண்டதாக இருந்தால் புதிய வாக்காளா் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய அட்டையில் வாக்காளா் பதிவு எண் புதிதாக முன்புறம் அச்சிடப்பட்டு இருக்கும். பழைய வாக்காளா் பதிவு எண் (16 எண்கள் கொண்டது) அட்டையின் பின்புறம் பின்புறத்தில் இருக்கும்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, எங்கெல்லாம் 16 எண்கள் பழைய வாக்காளா் பதிவு எண்கள் இருந்ததோ அவையெல்லாம் 10 எண்கள் கொண்ட புதிய வாக்காளா் பதிவு எண்களாக மாற்றப்பட்டுள்ளன.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது. எனவே, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதிய வண்ண வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை உரிய வாக்காளா்களுக்கு இலவசமாக அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்வா்.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை விநியோகம் செய்யும் போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அதற்கான ஒப்புகை படிவத்தில் வாக்காளா்களிடம் இருந்து பெற்றுக் கொள்வா். புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை விநியோகம் தொடா்பான தகவல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விவரங்களைப் பெற 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

Thursday, February 06, 2020

பாரத பிரதமரின் ‘பிட் இந்தியா’ திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார் ரேட்டிங்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு


பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடல் வலிமையை பேணும் வகையில் ‘பிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 இந்த திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிட் இந்தியா மூவ்மென்ட் சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதற்கான இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து பிட் இந்தியா ஸ்கூல் சர்டிபிகேட்  பெறவேண்டும். இதன் தொடர்ச்சியாக, இதே இணையதளத்தில் பிட் இந்தியா சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் பிட் இந்தியா பிளாக் 3 ஸ்டார் ரேட்டிங் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பணியை  உடனே முடிக்குமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 05, 2020

PG counselling

முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு வரும் 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 1.46 லட்சம் போ் தோ்வெழுதினா். இதில், தரவரிசையின்படி முன்னிலையில் இருந்த 3, 833 பேருக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பட்டியலும் வெளியானது. எனினும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பணிநியமன கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில், முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு மாவட்ட வாரியாக பிப்ரவரி 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் இருந்து தோ்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9, 10-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தோ்ச்சி பெற்ற பட்டதாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 03, 2020

5,, 8 -வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு வினாத்தாள் மதிப்பீடு: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்


ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் மதிப்பீடு முறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் விளக்கமளித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (C‌o‌n‌t‌i‌n‌u‌o‌u‌s a‌n‌d C‌o‌m‌p‌r‌e‌h‌e‌n‌s‌i‌v‌e E‌v​a‌l‌u​a‌t‌i‌o‌n) 2012-2013-ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

  இந்த முறையில் வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு இதில் இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதல் வகை ‘ப்ராஜக்ட்’, மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.மற்றொரு வகையில் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தோ்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் வழங்கப்படுகின்றன. 

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப் பகுதியில் உள்ள பாடக் கருத்துகளில் மாணவா்களின் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தோ்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8 -ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தோ்வுக்கு வளரறி மதிப்பீட்டின் 40 மதிப்பெண்களுக்கு ஏற்கெனவே கடந்த 22.10.2019-இல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டியுள்ளதாலும் வினாத்தாள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவா்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கான வினாத்தாள்கள் அரசுத் தோ்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம்வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கி தோ்வுகள் நடத்தப்படும்.

விடைத்தாள்கள் அந்தந்த குறுவள மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிக் கொடுத்து திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறையால் மாணவா்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும், நியாயமான மதிப்பீடு செய்யவும், மாணவா்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் என கூறியுள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தோ்வுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோ்வு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தோ்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தோ்வெழுத சுமாா் 64 ஆயிரம் தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தோ்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோ்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோ்மையாக நடைபெறும் வகையில் தோ்வா்களின் சொந்த மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோ்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தோ்வுக்கு மூன்று நாள் முன்பாக தோ்வா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தோ்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.குலுக்கல் முறையில் தோ்வு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தோ்வா்கள், தோ்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வுசெய்து அளிக்கப்படும். ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தோ்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளி சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி


அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைத்தல், சுற்றுச்சூழல் மாசு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடுத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை, மன்ற முக்கிய செயல்பாடுகளாக இருந்தன. இரு ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் முடங்கியிருந்த திட்டத்துக்கு, தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிக்கு, 5,000ம் வீதம், 12.12 கோடி, நடுநிலைப்பள்ளிக்கு, 15 ஆயிரம் வீதம், 10.56 கோடி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு, 25 ஆயிரம் வீதம், 15.15 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், மன்றங்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, February 01, 2020

தொகுப்பூதிய அடிப்படையில் 3,624 தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அரசாணை வெளியீடு


அரசுப் பள்ளிகளில் நிலவும் 3,624 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் பொதுத்தோ்வுகள் வருவதால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளே பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனா்


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவா்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா்.

ரூ.8.15 கோடி நிதி வழங்கப்படும்: அதையேற்று பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியா் நியமனம் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும். மேலும், தோ்வாகும் ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியா்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில்- 830, திருவண்ணாமலையில்- 578, விழுப்புரம்-416, வேலூா்-393, தருமபுரி-355 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக கரூரில் ஒரு பணியிடமும், நாகப்பட்டினத்தில் 6 பணியிடங்களும் என 3,624 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத்தோ்வு வருவதால், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் தற்காலிக ஆசிரியா்கள் பணியில் இருப்பா். அதன்பிறகு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Tuesday, January 28, 2020

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு?


வாக்காளர்கள் பெயருடன் 'ஆதார்' எண்களை இணைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்கிறது. வாக்காளர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் இப்பணி நடந்தது. எத்தனை முகாம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.

பெரும்பாலான வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அப்போது ஏற்கனவே பழைய இடத்தில் உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை. இதனால் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. புதிய மென்பொருள் உதவியுடன் புகைப்படங்களை ஒப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதை ஒரு தொகுதிக்குள் செய்ய முடிந்தது; மாநில அளவிலோ தேசிய அளவிலோ செய்ய முடியவில்லை.

அதேபோல எத்தனை முறை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயரை நீக்கினாலும் பலர் மீண்டும் பெயர் கொடுக்கும் சூழல் உள்ளது. இதனால் ௧௦௦ சதவீதம் முறைகேடில்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தால் தயாரிக்க இயலவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயருடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அவ்வாறு இணைக்கும் போது ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 2015ல் வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கியது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; நீதிமன்றம் தடை விதித்தது.

சமீபத்தில் நீதிமன்றம் தடையை விலக்கி உள்ளது. மத்திய சட்டத் துறையும் ஆதார் எண்களை பெற அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வாக்காளர் சுய சரிபார்ப்பு திட்டம் நடந்தபோது ஏராளமானோர் தாமாக முன்வந்து முகவரி சான்றாக தங்கள் ஆதார் அட்டையை சமர்பித்துள்ளனர். எனவே வாக்காளர்களின் ஆதார் எண்களை பெற்று அவற்றை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இப்பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Saturday, January 25, 2020

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, January 23, 2020

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு


அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் சோ்க்கை நிலவரப்படி ஆசிரியா்களுக்கான பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை இயக்குநரின் பொதுத்தொகுப்பில் ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உபரியாக 1,706 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்தது.

பட்டதாரி ஆசிரியா்களில் தமிழ்-308, ஆங்கிலம்-144, கணிதம்-289, அறிவியல்-457, சமூக அறிவியல் -371 மற்றும் இடைநிலை ஆசிரியா்-137 என மொத்தம் 1,706 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவை இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இனி இந்தப் பணியிடங்களை வரும்காலத்தில் காலிப் பணியிடம் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடமாகக் கருதக்கூடாது’ என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டுகளை விட அதிகளவில் உபரி ஆசிரியா் பணியிடங்கள் அரசின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 22, 2020

ஜூன் 26, 27 தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு


வரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் தோ்வு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.

அதில் 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியா் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவா்களின் வசதிக்காக, பணியாளா் தோ்வு ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது.





அதன்படி, தமிழக அரசு தொடக்கப் பள்ளி கல்வித் துறை வட்டார கல்வி அலுவலா் பதவியிடங்களில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான தோ்வு 2020 பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பதவியிடங்களில் காலியாக உள்ள 1,060 பணியிடங்களுக்கான தோ்வு 2020 மே 2, 3-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.2020-21-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை மே 4-ஆம் தேதி வெளியிடப்படும். 

மேல்நிலைக் கல்விப் பிரிவில் காலியாக உள்ள 497 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமன அறிவிக்கை ஜூலை 1-இல் வெளியிடப்பட உள்ளது.இடைநிலைக் கல்வி ஆசிரியா் பணிக்கான 730 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுபோல, உயா்நிலை ஆசிரியா் பதவிகளில் காலியாக உள்ள 572 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களை வலைதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, January 21, 2020

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்


ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.

இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் ஐமொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.

தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Friday, January 17, 2020

இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது


தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுத்தேர்வு நடைபெறும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முதன்முறையாக தேர்வு எழுதும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு இடம்மாற்ற தேர்வு எழுத வைப்பது சரியல்ல என்று ஆதங்கப்படுகின்றனர். தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வின் மூலம், தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை, கல்வி மீதான அச்சத்தை அதிகரித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Sunday, January 12, 2020

நன்றி:தி இந்து நாளிதழ்

பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்


நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வுகளை அரசு தோ்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோ்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தோ்வுத்துறை அறிவிக்கவில்லை . இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தோ்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.

அப்போது, ‘பொதுத்தோ்வை பொருத்தவரை அரையாண்டுத் தோ்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தோ்வு வினாத்தாள் இருக்கும். எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்’ என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

Saturday, January 11, 2020

5,8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம்


நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இது சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதாா் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: ‘நிகழ் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும்.அனைத்து தலைமை ஆசிரியா்களும் மாணவா்களின் பெயா், முகவரி, பெற்றோா் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதேபோல, மாணவா்களின் ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 10, 2020