இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 25, 2019

தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 42 சேவை மையங்கள்இணையதள முகவரியும் வெளியீடு


தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், பி.இ. மற்றும் பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, விண்ணப்பிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பானை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு 2019-2020-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக https://www.tne-a-o-n-l-i-ne.in, htpp://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மே 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், நெட்பேங்கிங் வாயிலாகவும் செலுத்தலாம்.

என்ஜினீயரிங் சேவை மையம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலுமாக 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம்.

அதேநேரம் ஆன்லைன் மூலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்களும், “செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து இந்த மையங்களில் அளிக்கலாம்.

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை போன்றவை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய நாட்களில் விண்ணப்பப்படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டும் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டும் நடைபெறும்.

42 சேவை மையங்கள்

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை மாவட்டம் - சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி. கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சீபுரம் - பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம். ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை. திருவள்ளூர் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி.

திருவண்ணாமலை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யார். வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம். விழுப்புரம் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம். கோவை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு. அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர். கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை.

சேலம், தேனி

தர்மபுரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை. ஈரோடு - சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை. கிருஷ்ணகிரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர். நாமக்கல் - என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல். நீலகிரி - அரசு கலை கல்லூரி, உதகமண்டலம்.

சேலம் - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர். திருப்பூர் - சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர். கரூர் - அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை. மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம். தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம். ராமநாதபுரம் - அரசு கலை கல்லூரி, பரமக்குடி. தேனி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி

திண்டுக்கல் - ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல். அரியலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர். நாகப்பட்டினம் - வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி. பெரம்பலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய். புதுக்கோட்டை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி. தஞ்சாவூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி. திருச்சி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை. அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம்.

திர

Wednesday, April 24, 2019

தேர்தல் பணியில் இறப்பு நிவாரணம் உயர்வு


தேர்தல் பணியின்போது இறக்கும், ஊழியர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் பணியின்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை, தற்போது, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் பணியின்போது, பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட, 20 லட்சம் ரூபாய் நிவாரணம், 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.பலத்த காயமடைவோருக்கு வழங்கப்பட்ட, ௫ லட்சம் ரூபாய் நிவாரணம், தற்போது, 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தேர்தல் ஆணையம் பிறப்பித்துஉள்ளது.

Monday, April 22, 2019

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்: பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது.

இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். இதேபோன்று பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்


பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கின. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் கடந்த 19-இல் வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது. தொடர்ந்து, தேர்வு முகாம்களில் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பெரும்பாலான தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றன. வேலுôர் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 21, 2019

பொறியியல் கலந்தாய்வு


மே 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங் சேர்க்கைக்கான தற்காலிக அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

பி.இ., பி.டெக். படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பெறப்பட்டன. அதேபோன்று கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது. கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.

மாணவ-மாணவிகள் மே 2-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப மே 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் 3-ந் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் செயல்படும் 42 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறும். இதன்பின்பு, ஜூன் 17-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப் படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 20-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 21-ந் தேதியும், விளையாட்டு வீரர் களுக்கு 22-ந் தேதியும் நேரடி சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. தொழிற் கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வை பொறுத்தமட்டில் நேரடியாக நடத்தப்படுகிறது.

அதேபோன்று துணை கலந்தாய்வு ஜூலை மாதம் 29-ந் தேதியும், அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டு காலி இடங்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30-ந் தேதியும் நேரடியாக நடக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக் கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதனால் நேரடி கலந்தாய்வை பொறுத்தமட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட உள்ள உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். உதவி மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்களது இ-மெயில் முகவரியை தெரிவிக்க வேண்டும். எனவே, மாணவ-மாணவிகள் முன்னதாகவே இ-மெயில் முகவரியை உருவாக்கி தயாராக வைத்துக்கொள்வது நல்லது. அதேபோன்று மாணவ-மாணவிகள் தங்களது செல்போன் எண்ணையே விண்ணப்பிக்கும் போது தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் குறிப்பிடும் செல்போன் எண், இ-மெயில் முகவரிக்கு தான் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடு, கலந்தாய்வு போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

செல்போன் எண், இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கும்பட்சத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.,யில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, 2019-20ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 22ம் தேதி முதல் வரும் மே., 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் மாணவர்களின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆண்டு வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் தொழில், ஆதார் எண், மொபைல் எண் விபரம் இடம்பெற வேண்டும்.

Friday, April 19, 2019

மூடல்

#மாணவர்கள் இல்லாத அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டும்"

* "மாணவர்கள் இல்லாத பள்ளிகளுக்கு மானியம் வழங்க இயலாது"

* "அங்கீகாரத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

* ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்


நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தில் முதன்முதலாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் இணைந்தது. இந்நிலையில் 20 மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், நாகாலாந்து உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இப்போது, அனைத்து செல்லிடப்பேசிகளிலும், அவசர அழைப்புக்கான பொத்தான் உள்ளது. அதை கிளிக் செய்யும்போது, தானாக அவசர உதவி மையத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும். கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், உதவி தேவைப்படுபவர்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவர்கள். ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில் இது மிகவும் எளிது. அதில் உள்ள ஜிபிஎஸ் மூலம் ஒருவரது இடத்தை உடனடியாக அறிந்து அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். இதுமட்டுமன்றி, பெண்களின் பாதுகாப்புக்காக, 112 இந்தியா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 112 இந்தியா செயலியில் ஷெளட்(சத்தமிடுதல்) என்னும் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பெண்களின் இடத்தை கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. அவசர உதவி தேவைப்படும் பெண்கள் இந்த சத்தமிடும் அம்சத்தை கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ, அவசர உதவி மையத்திடம் பதிவு செய்திருக்கும் தன்னார்வலர்களுக்கோ அவசர உதவி மையத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, April 17, 2019

அரசுப் பள்ளிகளின் தரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு


தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கடந்த 1-ஆம் தேதி முதல் அதற்கான பணிகளைத் தொடங்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 22-ஆம் தேதி முதல் இந்தப் பணியில் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து கிராமப்புறங்களில் உள்ள பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது:

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத் திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், புத்தகப்பை ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இருப்பதை எடுத்துக் கூறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு


ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட்' எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட்' தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்பக் கல்வி வகுப்புகள் வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். இந்நிலையில் நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சின்னம் ஒதுக்குவது?

எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம்  கட்சிகள் உள்ளன. அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னம் கொண்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அந்த கட்சிகள் தேர்தலில் நின்றால் சுயேட்சை வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களம் இறங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 530 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களின் கொள்கையை உணர்த்தும் வகையிலோ அல்லது மக்களை கவரும் வகையிலோ சின்னங்களை உருவாக்கி ஆணையத்தில் அனுமதி பெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்கள் மூன்று சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். அதிலிருந்து ஒரு சின்னம் ஒதுக்கப்படும். சின்னம் ஒதுக்கிய பிறகு வேறொரு கட்சியினர் அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் சின்னங்கள் மக்கள் அன்றாடம் புழங்கும் பொருட்களாக இருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பூட்டு, சாவி  கத்தரிகோல், டார்ச் லைட்,  துடைப்பம், பேன், பானை, பலூன், பழக்கூடை பெல்ட், டார்ச் லைட், கேஸ் அடுப்பு, சப்பாத்தி கட்டை ஆகியவை சின்னமாக இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் களம் இறங்கும் 530 சுயேட்சை வேட்பாளர்களில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 33 பேரும் தென் சென்னையில் 31 பேரும் போட்டியிடுகின்றனர்.

அவர்களுக்கு தொலைபேசி, மின்கம்பம், காலிபிளவர், கப் அண்ட் சாசர், பொரிக்கும் சட்டி, வேர்க்கடலை, செருப்பு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சின்னங்களுக்கு வாக்காளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வேட்பாளர்கள் கருதுவதால் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் வீட்டு உபயோக பொருட்களையே பெற்றுள்ளனர். சில வேட்பாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக ஆணையம் கூறியுள்ளது. ஏசி, பேஸ்ட் வாக்கும் கிளீனர் போன்ற 200 க்கும் மேற்பட்ட சின்னங்களை தேர்வு செய்ய சுயேட்சைகள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிதாக சின்னம் கேட்பவர்களுக்கு உயிருடன் உள்ள விலங்குகளையோ பறவைகளையோ ஒதுக்கப்படுவதில்லை.

ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற சின்னத்தை வாங்கியவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் 1950 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, மக்களிடம் சின்னங்களை கொண்டு செல்வது பெரும் சவாலாகவே  இருந்துள்ளது. சின்னங்களை மக்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளும் வகையில், அப்போது  ஆணையத்தில் பணியாற்றிய எம். எஸ். சேத்தி ( M. S. Sethi) என்கிற ஓவியர் உருவாக்கியதுதான் நாம் அழுத்தும் ஒவ்வொரு சின்னமும். அவரது பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது தேர்தல் ஆணையம். சின்னங்கள் எளிமை மிக்கதாக உள்ளன. ஆனால் தேர்தல்தான் ஒவ்வொரு முறையும் கடும் சவாலாக மாறிக் கொண்டிருக்கிறது.