இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 18, 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. கோபியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஜூன் மாதம் கோபியில் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அதன்மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.கோயில் நிலங்களில் மைதானம்: பேட்டியின்போது, `பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் கோயில் நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு


புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, March 17, 2018

பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் திருத்த அனுமதி


பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, விரும்பிய மையங்களில் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசந்தராதேவி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ்1, பிளஸ்2 பொதுதேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஒரு கல்வி மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் தான் சார்ந்த கல்வி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு அனுமதியளிக்கலாம். இதனால் அந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழ்நிலை ஏற்படுமேயானால், திருத்தப்பணி நிறைவுறாத மையத்தில் சென்று பணியாற்றி விடைத்தாள் திருத்தும் பணியினை குறித்த தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அகமதிப்பீடு: தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு அகமதிப்பீடு மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவேற்றும்போது கூடுதல் விவரங்களைச் சேர்ப்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்போது கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட நாள்கள் வருகை புரியாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏதேனும் ஒரு மாணவருக்கு வருகைப்பதிவு, உள்நிலைத்தேர்வு, ஒப்படைவு ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் இருந்தால் அந்த இடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டதாக பதிவு செய்ய வேண்டும்.

மொழிப்பாட விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, விலக்கு பெற்ற மொழிப் பாடத்துக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் ஜீரோ என பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைத்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

தேர்தல் பணியில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிப்பு


ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக, ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணி, செயலாளர் முத்துச்சாமி வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடிகளில், நிலை அலுவலர்களாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் என பணிகள் வழங்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக, மத்திய, மாநில அரசு பணியாளர்களை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தும், ஆசிரியர்களையே முழுமையாக பயன்படுத்துவதால், கற்றல், கற்பித்தல் பணிகள் முழுவதும் பாதிக்கப்படுகிறது.எனவே, மத்திய, மாநில அரசு பணியாளர்களை நியமிக்கவும், விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு


புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2018

பட்ஜெட்

தமிழக பட்ஜெட்-பள்ளிக் கல்வித்துறை

2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது​போல பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19 நிதி​நிலை அறிக்​கை​யில் பள்​ளிக் கல்​வித் துறைக்​காக மட்டும் ரூ. 27 ஆ​யி​ரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாக தமி​ழக அர​சின் நிதி​நிலை அறிக்​கை​யில் வெளி​யி​டப்​பட்​டுள்ள அறி​விப்​பு​கள்:

2018-19 ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும். பள்​ளிக்​குச் செல்​ல​வில்லை எனக் கண்​ட​றி​யப்​பட்​டுள்ள 33,519 குழந்​தை​களை 2018-2019-ஆம் ஆண்​டில் பள்​ளி​க​ளில் சேர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.
​உள்​கட்​ட​மைப்பு வச​தி​க​ளுக்கு நிதி​: பள்​ளி​க​ளில் உள்​கட்​ட​மைப்பு வச​தி​களை மேம்​ப​டுத்த நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 333.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

​சீ​ரு​டை​கள், சைக்​கிள் வழங்​கும் திட்டங்​க​ளுக்கு ரூ. 1,600 கோ​டி:​ பள்ளி மாண​வர்​க​ளுக்கு நான்கு இணை சீரு​டை​கள், புத்​த​கப் பைகள், கால​ணி​கள், பாடப் புத்​த​கங்​கள், நோட்டுப் புத்​த​கங்​கள், வடி​வி​யல் பெட்டி​கள், சைக்​கிள் மற்​றும் பேருந்​துக் கட்ட​ணச் சலு​கை​கள் விலை​யில்​லா​மல் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தத் திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்​டில் ரூ.1,653.89 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும், பள்ளி இடை​நிற்​ற​லைக் குறைப்​ப​தற்​காக பத்​தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாண​வர்​க​ளுக்​கான ரூ. 5000 ஊக்​கத் தொகைத் திட்டத்​துக்​காக நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 313.58 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​ம​டிக்​க​ணினி திட்டத்​துக்கு ரூ. 758 கோ​டி:​ பள்​ளி​க​ளில் கற்​பிக்​கும் முறையை மேம்​ப​டுத்​தும் வகை​யில் இணை​ய​வழி மூலம் கற்​கும் வகுப்​ப​றை​கள் ஏற்​கெ​னவே 770 பள்​ளி​க​ளில் நிறு​வப்​பட்​டுள்​ளன.
இந்த நிதி​யாண்​டில் 3,090 உயர்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும், 2,939 மேல்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும் ரூ. 462.60 கோடி செல​வில் 10 முதல் 20 கணி​னி​க​ளு​டன் கூடிய உயர் தொழில்​நுட்ப ஆய்​வ​கங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பள்ளி மாணவ, மாண​வி​க​ளுக்கு மடிக்​க​ணினி வழங்​கு​வ​தற்​காக இந்த நிதி​யாண்​டில் ரூ. 758 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அனை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​துக்கு ரூ.1,750 கோ​டி​யும், அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்வி இயக்​க​கத்​துக்கு ரூ. 850 கோ​டி​யும் இந்த நிதி​யாண்​டில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. குழந்​தை​க​ளுக்​கான இல​வச மற்​றும் கட்டா​யக் கல்வி உரி​மைச் சட்டத்தை' திறம்​ப​டச் செயல்​ப​டுத்த ரூ.200.70 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​மொத்​தம் ரூ. 27,205.88 கோ​டி:​ பள்​ளிக் கல்​வித் துறை​யில் பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்​கை​யில் ரூ. 27,205.88 கோ​டியை தமி​ழக அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ள​து.

மாணவர்களுக்கு புத்தகப்பை பள்ளி கல்வித்துறை அறிமுகம்


அடுத்த கல்வியாண்டில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க, புதிய வடிவம் மற்றும் நிறத்தில், புத்தகப்பையை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், காலணி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வியாண்டு துவங்கும் முன் உத்தேச மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு புத்தகப்பை தயாரிக்கப்படும்.கடந்த ஆண்டு பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலரில் புத்தகப்பை வழங்கப்பட்டது. வரும் கல்வியாண்டில், புத்தகப்பையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. நீலம் மற்றும் ஆரஞ்சு நிறுத்தில், புத்தகப்பை புதிய வடிவம் பெற்றுள்ளது. அதில் ஒரு புறத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன

புத்தக வங்கி திட்டம் தகவல் சமர்ப்பிக்க கெடு


புத்தக வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள் குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:டில்லி, பசுமை தீர்ப்பாய கோர்ட் அறிவுறுத்தல்படி, பள்ளிகளில் புத்தக வங்கி திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், ஏராளமான மரங்களை அழிக்க வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாணவர்கள் படித்த, பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, வரும் கல்வியாண்டில், புதிய மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் பெறப்பட்ட, பழைய புத்தகங்கள் குறித்த தகவல்களை, 23ம் தேதிக்குள், deesections@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும், அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, March 13, 2018

புதிய வடிவில் பாடபுத்தகம்

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அமல்

புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும், லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.

செய்முறை

அதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.

Sunday, March 11, 2018

அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்


அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்.இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும், குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

Saturday, March 10, 2018

பூலுவபட்டி ஆண்டுவிழா செய்தி தி இந்து&தினமலர்


மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணி வரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தென்னக ரயில்வே அறிவிப்பு

இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு

   தவிர்க்க முடியாத காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. 

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதே போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.