இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 27, 2017

ஆசிரியர் பணிக்கு அவகாசம்


அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு பள்ளிகளில், 1,114 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், ஏற்கனவே, 'டெட்' தகுதித் தேர்வு முடித்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேராதவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, மே, 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பதவிக்கு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்கள் மற்றும் சுயவிபரங்கள் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அவர்கள், மீண்டும் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு எனப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. தளத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தேர்வுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து 38 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி 38 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்றும் அனுமதி வழங்கவில்லை என்றால்,சி.பி.எஸ்.இ. இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அகவிலைப்படி உயர்வு அரசாணை -4%

Click below

https://app.box.com/s/i5ugh3el9weq6s8dbf2uqrwb9zh5y6q9

Wednesday, April 26, 2017

TNPSC GROUP-2A NOTIFICATION


உத்தரவை மீறி விடுப்பில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளி ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்


மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செயல்படாது.

இது குறித்து ஏற்கெனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகும் இயங்குவதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. மேலும் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனுப்பிய சுற்றறிக்கை ஆகியவற்றை மீறி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி பள்ளிகள் செயல்பட்டால் அது தொர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை காட்டுவதாக இருக்கும். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு


தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, 'மாடரேட்' முறை பின்பற்றப்படுகிறது. இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், 'கிரேஸ் மார்க்' என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது. அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன. பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில்,

''தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை. விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,'' என்றார். சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ''பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

D.A

Tuesday, April 25, 2017

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பருவ மழை பொய்த்தது மட்டும் காரணமா?260 டிஎம்சி மழைநீர் வீணானதற்கு தடுப்பணை கட்டாத அரசே காரணம் : பொதுப்பணித்துறை அறிக்கையில் அம்பலம்


தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 அணைகளில் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதே போன்று தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் ஏரிகளில் 10 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால், பாசனம் மற்றும் குடிநீர் தட்டுபாட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இதற்கு பருவமழை பொய்த்தது முக்கிய காரணம் என்றும், கர்நாடக, ஆந்திர, கேரள அரசுகள் காரணம் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால் முக்கியமான காரணம் தமிழக அரசுதான் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2015ல் தமிழகம் முழுவதும் சராசரி மழையை காட்டிலும் 190 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. இந்த மழை நீரை ஆற்றில் குறுக்கே தடுப்பணை மூலம் தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தண்ணீர் நிலத்தில் ஊறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தே இருந்து இருக்கும். ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக தூங்கி வருகிறது. இதனால், கடந்த 2015ல் பெய்த மழையில் 260 டிஎம்சி வரை வெள்ள நீர் வீணாக கடலில் கலந்தது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2015ல் வடகிழக் பருவமழையை 1120 மி.மீ அதாவது சராசரியை காட்டிலும் 190 சதவீதம் பெய்தது. ஆனால், இந்த மழை நீரை சேமிப்பதற்கு தடுப்பணை கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 260 டிஎம்சி வெள்ள நீர் கடலில் கலந்தது. குறிப்பாக, 5524 சதுர கி.மீ பரபரப்பளவை கொண்ட கொசஸ்தலையற்று படுகையில் சராசரியாக 1215 மீ.மீ சராசரி மழை அளவு ெபய்தால் 31.4 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இதில், 6.4 டிஎம்சி உபரியாக கடலில் கலக்கிறது. இதே போன்று 10.656 சதுர கி.மீ பரபப்பு கொண்ட பாலாற்று படுகையில் 1165 மி.மீ மழை பெய்தால் 76 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில், 24.4 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது.

இதே போன்று 5969 சதுர கி.மீ பரபரப்பளவு கொண்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 889 மி.மீ மழை பெய்தால் 60 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில் 24 டிஎம்சி வீணாகிறது. 44,016 சதுர கி.மீ பரபரப்புளவு கொண்ட காவிரி ஆற்றுப்படுகையில் சராசரியாக 1000 மி.மீ மழை பெய்தால் 249 டிஎம்சி கிடைக்கிறது. இதில் 103 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி துறை சந்திக்கும் சவால்கள்!


பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன. அதன் விபரம்:

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் உட்பட, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும்

* பல ஆசிரியர்கள், வகுப்பில் பெயருக்கு பாடம் நடத்திவிட்டு, தாங்கள் நடத்தும் அல்லது பணியாற்றும், 'டியூஷன்' மையத்துக்கு மாணவர்களை வரவழைக்கும் நிலையை மாற்ற வேண்டும்

* தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* குறுநில மன்னர்கள் போல் செயல்படும், முதன்மை கல்வி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், ஆசிரியர்களுக்கு, செயல்திறன் அறிதல் திட்டம் கொண்டு வர வேண்டும்

* புதிய பாடத்திட்டம் தயாரிக்கவும், வெளி மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படும் கற்பித்தல் முறைகளை, தமிழகத்தில் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதியாண்டு மாற்றம்: 10 அம்சங்கள்


டில்லியில் கடந்த ஏப்., 22ம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, ' தற்போது, நாம் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கடைப்பிடித்து வருகிறோம். இதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டாக மாற்ற முன் வர வேண்டும்' என, கூறினார்.

இந்த நிதியாண்டு மாற்றம் குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:

1. இந்தியாவில், ஏப்., - மார்ச் நிதியாண்டு, 1867 ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

2. இதை, ஜன., - டிச., நிதியாண்டாக மாற்ற வேண்டும் என்றால், அது தொடர்புடைய ஏராளமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக தற்போது ஆண்டுதோறும் பிப்., மாதம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டை, ஆண்டுதோறும் நவ., மாதம் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். வரி ஆய்வு ஆண்டை மாற்ற வேண்டும். வரி கட்டமைப்பை மாற்ற வேண்டும். பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களையும் மாற்ற வேண்டி இருக்கும்.

3. நிதியாண்டை மாற்றினால், ஏற்கனவே அந்த நடைமுறையை பின்பற்றி வரும் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவும் இடம் பெறும். இது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். உலக பொருளாதாரத்துடன் இந்தியா இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும்.

4. இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது இரண்டு நிதியாண்டுகளை கடைப்பிடிக்கின்றன. ஒன்று, இந்தியாவிற்கு, மற்றொரு நிதியாண்டு,அவர்களின் தலைமை அலுவலகம் உள்ள நாட்டிற்கு ஏற்றவாறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் நிதியாண்டு மாற்றப்பட்டால், அவர்களின் சிரமம் குறையும்.

5. பொருளாதார ஆலோசனை வழங்கும் சர்வதேச நிறுவனமான, 'கிறிசில்' என்ற நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி கூறுகையில்,'' இந்தியா சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இன்னமும் காலனி ஆதிக்கம் கொண்டு வந்த நிதியாண்டை பின்பற்றுவதில் என்ன நன்மை இருக்க முடியும். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்த மாற்றம் உதவும்,'' என்றார்.

6. வழக்கமாக பிப்., இறுதியில் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதை இந்த ஆண்டு முதல் பிப்., 1ம் தேதி, என, மோடி அரசு மாற்றி அமைத்துள்ளது. இதற்கு முன்பே நிதியாண்டை மாற்றுவது குறித்தும் ஆலோசனை தொடங்கி விட்டது.

7. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சாரியா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தான் நிதியாண்டை மாற்றவேண்டும் என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிக்கை அளித்தது.

8. அந்த குழு அளித்த அறிக்கையில், ' நிதியாண்டை மாற்றுவதன் மூலம், நாட்டின் பருவமழை காலத்துடன் இணைந்து செயல்பட முடியும். ராபி, காரீப் பருவத்திற்கான பாசனத்தை முன் கூட்டியே திட்டமிட முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. தற்போது மத்திய பட்ஜெட், பிப்., மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், புதிய நிதியாண்டுக்கான பருவ மழை முன் அறிவிப்பு ஏதும் பிப்., மாதம், மத்திய அரசுக்கு கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் தொடர்பான வருவாய் - செலவு குறித்த பட்டியல் தயாரிக்க முடிவதில்லை. நிதியாண்டை மாற்றினால், இப்பிரச்னை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. நிதியாண்டை மாற்றுவதால் பல நன்மைகள் ஏற்பட்டாலும், மத்திய அரசு, மாநில அரசுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களிடம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஒரே ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த செலவு தொகை சற்று அதிகம் என்பதால், மத்திய அரசின் ஆலோசனைக்கு சில எதிர்ப்புகள் இருக்க செய்கின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன. இத்துடன் தற்போது தான் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி மாற்றம் வர உள்ளது. இத்துடன், நிதியாண்டு மாற்றத்தையும் மேற்கொண்டால் ஏகப்பட்ட குழப்பம் ஏற்படும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

RTE 25% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம்

Click below

https://app.box.com/s/97l714r4uglw6bfsgv9t8ac9f769a22t

Monday, April 24, 2017

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  சொந்த வீடு என்பது கனவு. போராடினாலும் பலருக்கும் கைகூடாத காரியம்தான். காலம் முழுக்கச் சேமித்தாலும் 45 வயதில் நகரத்தைவிட்டுப் பல கிலோமீட்டர் தாண்டிதான் ஃப்ளாட் ஒன்றை வாங்க முடியும். பணத்தைத் திரட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். மத்திய அரசு ஏற்கெனவே, 'எல்லோருக்கும் வீடு' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தத் திட்டம் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றியமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிக்கடன்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் பி.ஃஎப். நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பி.ஃஎப். தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பி.ஃஎப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது. தற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, பி.ஃஎப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை பி.ஃஎப் அலுவலகம் விதித்துள்ளது.

அதன்படி, பி.ஃஎப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் பி.எஃப். கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பி.ஃஎப். நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும். Advertisement பயனாளர்களிடம் நேரடியாகத் தொகை வழங்காது. ஏப்ரல் 21-ம் தேதி முதல் இந்தச் சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 பேர் கூட்டாகச் சேர்ந்து ஃபிளாட் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தினால் வீடு வழங்க முடியாமல்போனால், 15 நாள்களுக்குள் எடுத்த பணத்தை பி.ஃஎப் நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், '' இந்தத் திட்டத்தின்படி நான்கு கோடி பேர் பயனடைவார்கள். ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வீடு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டியை உருவாக்கி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் இந்தியரும் சொந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு” என்றார். பி.ஃஎப் கமிஷனர் வி.பி.ஜாய், ''தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை பி.ஃஎப் பயனாளர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை'' என, கடந்த ஜனவரி மாதம் குறைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

TNGEA வேலைநிறுத்தம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

ஊதிய குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியத்தில் கால பணி இடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.கிரிஜா வைத்தியநாதன் காரணம்
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் கூறியதாவது:–

தமிழ்நாடு அரசு ஊழியர்களுடைய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந்தேதி மாநில முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 15–ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் நடத்தினோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 25–ந்தேதி(இன்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று அரசுக்கு அறைகூவல் விடுத்து இருந்தோம்.

அதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் அவரை பேச்சுவார்த்தை நடத்தவிடாமல் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுத்து விட்டார்.

5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு
எனவே நாங்கள் திட்டமிட்டபடி நாளை(இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்துக்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்பட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி வரை இழப்பீடு ஏற்படும். அரசு நிர்வாகமும் முற்றிலும் முடங்கும். இந்த போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமையும்.

26–ந்தேதி மாநில முழுவதும் வட்ட கிளைகளில் ஆர்ப்பாட்டமும், 27, 28 ஆகிய தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டமும், 29, 30 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டங்களும், மே.2–ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்படும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.