இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 12, 2016

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு


பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து விடுப்பு எடுத்து பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுபள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத்திட்டம் நடைமுறையில் இருப்பதால் தமிழக அளவில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி மாவட்ட அளவில் மொத்தமுள்ள 85-அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 38-அரசு மேல்நிலைப்பள்ளிகள்,10-அரசு உயர்நிலைப்பள்ளிகள் 1-ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் என 50-பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இதற்காக சம்மந்தப்பட்ட பள்ளி கனிணி ஆசிரியர்களுக்கு, கனிணி இயக்குபவர்களுக்கு தேசிய தகவல் மைய ஊழியர்களால் செயல்முறை விளக்கம் தெரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு தமிழக அளவில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.இது சோதனை அடிப்படையில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட திட்டம் தற்போது 100-மாணவர்களுக்கு கீழ் தம்பிரான்பட்டி, முருக்கன்குடி,வரகூர்,அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 200-மாணவர்களுக்கு கீழ் காடூர், கூடலூர்,வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 300-க்கும் மேல் உள்ள துங்கபுரம்,பேரளி அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 8-பள்ளிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் மாவட்ட முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு கொண்டுவரப்படவுள்ளன.

இதுகுறித்து குரும்பலூர் அரசு கல்லூரி பேராசிரியர் சந்திரமெளலி கூறும்போது,இந்த நடைமுறை மூலம்,கட்டைவிரல் ரேகை பதிவு செய்த நேரத்தைக் கொண்டு தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,அலுவலர்களோடு இனி மாணவர்களின் தாமத்தையும் கண்காணிக்க முடியும்.தொடர்ந்து விடுப்பு எடுத்த பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

புத்தகம் படிப்பது எப்படி?


சா.கந்தசாமி

புத்தகம் படிப்பது எப்படி?

ஐரோப்பியக் குடும்பங்களின் தின நிகழ்வு இது. குழந்தைகளின் 3 வயதில் இருந்து 12 வயது வரையில் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, தாயோ, தந்தையோ அல்லது பணம் வசதி படைத்தவர்கள் தாதிகளையோ வைத்து புத்தகத்தைப் படித்துக் காட்டுகின்றனர். அது பாடப் புத்தகம் இல்லை. கதை, கட்டுரை, கவிதை போன்ற புத்தங்கள். அதைக் கேட்டுக் கேட்டு படிப்பின் மீது ஒரு ருசியை குழந்தைகள் தங்கள் மனதில் ஏற்றிக் கொள்கின்றனர். 12 வயதுக்கு மேல் அந்தச் சிறுவர்கள் தாமே இதரப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்தப் பழக்கத்தை இங்கும் பின்பற்றினால், புத்தகம் படிப்பது எப்படி என்ற கேள்விக்கு இடம் இருக்காது.

சிறந்த புத்தகத்தைத் தேர்வு செய்வது எப்படி?

ஆரம்பக் காலத்தில் நான் நூலகங்களுக்குச் சென்று, பல புத்தகங்களைப் படித்து, அதன் பிறகே எனக்கான புத்தகத்தைக் கண்டறியத் தொடங்கினேன். கொஞ்சம் சிரமப்பட்டு சில புத்தகங்களைப் படித்துவிட்டால், உங்கள் சொந்த அறிவே சொல்லும் எது சிறந்த புத்தகம், எது தரமில்லாதது என்று.

புத்தகம் புரியாவிட்டால் என்ன செய்வது?

புத்தகம் புரியாமல் இருக்காது. மொழியைத்தான் புரியவில்லை என்கிறீர்கள். ஆனால் உண்மையில் ஒரு புத்தகம் என்பது மொழியிலேயே இல்லை. மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும், புத்தகத்தில் மொழி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உங்கள் அறிவு கண்டுபிடிக்க முடியாதது. அறிவுக்கு மொழியில்லை. மொழியை அறிவு கிரகித்துக் கொள்ளும். மேலும் எந்த மொழியில் இருந்து ஒரு படைப்பு மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும், அந்தப் படைப்பை மனசு மொழிபெயர்த்துக் கொள்வதை நீங்கள் உணரலாம்.
எனினும் படிப்பது கடினமான வேலை. அதில் ருசி உண்டாக்கிக் கொண்டால் போதும். புத்தகம் புரியும்.

வாழ்நாளுக்குள் எல்லாப் புத்தகங்களையும் படித்து விட முடியுமா?

முடியாது.அனைத்தையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

பாடப்புத்தகத்தை விட, இதரப் புத்தகங்கள் பயனளித்துவிடுமா?

மதிப்பெண் வாங்குவதற்காக நினைவில் இருந்து எழுதுவதுதான் பாடப் புத்தகம். ஆனால் இதரப் புத்தகங்கள்தான் மனதுக்குள் சென்று யோசிப்பதற்குத் தூண்டும். எந்தத் தொழிலிலும் சொந்த அறிவின்படி முடிவு எடுப்பதற்கு இதரப் புத்தகங்களே பயன்படும்.

ஒரு படைப்பு சாகாவரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியமா?

அவசியம் ஒன்றுமில்லை. ஆனால் நல்ல புத்தகம் என்றால் இருக்கும். நம்முடைய முப்பாட்டனார், பாட்டி தற்போது இல்லை. எனினும், நம்முடைய மனைவியாக,பேத்தியாக இருந்துகொண்டே உள்ளனர். பேச்சு அவர்கள் கொடுத்ததுதான். எனவே நல்ல புத்தகம் இருக்கவே செய்யும்.

ஒரே ஒரு புத்தகமாக உங்கள் தேர்வு?

சங்க இலக்கியப் பாடல்கள். குறிப்பாக குறுந்தொகை. அதில் உள்ள 400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள்.

5மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக்குழு:அரசு ஊழியர்கள் அதிர்ச்சி


புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா,அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அறிக்கைப்படி பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது.

வல்லுனர் குழு செயல்பாடு குறித்து திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் சில விபரங்களை பெற்றுள்ளார்.

அதன்படி வல்லுனர் குழு மார்ச் 28 ல் ஒருமுறை மட்டும் கூடியுள்ளது. அதிலும் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. மேலும் 5 மாதங்களில் இதுவரை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியை கூட சந்திக்கவில்லை. மேலும் அந்த குழுவிற்கு தகவல் தெரிவிக்க 'இமெயில்' கூட இல்லாதது தெரியவந்துள்ளது.

பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: 2016 ஜூன் 22 வரை புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு 1,433 பேர் விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு

மட்டுமே பணப்பலன்

கிடைத்துள்ளது.

இதனால் வல்லுனர் குழுவின் முடிவை எதிர்பார்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் வல்லுனர் குழு முறையாக செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது, என்றார்.

பி.எட் கலந்தாய்வை முன் கூட்டியே நடத்தத் திட்டம்?


பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் படிப்பான பி.எட். கலந்தாய்வு வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு, அக்டோபரில் முடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு விரைவாக நடைபெற உள்ளது.

ஆசிரியர் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காக பி.எட். படிப்பை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு, வகுப்புகளும் தாமதமாகவே தொடங்குவதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்க முடியாமல் போவதோடு, 3-ஆம் பருவத்தில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய 4 மாத ஆசிரியர் பயிற்சியும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுமட்டுமின்றி, இந்த 4 மாத ஆசிரியர் பயிற்சிக்கு பெரும்பாலான பள்ளிகள் அனுமதியை மறுத்து வருகின்றன. அதிகபட்சம் 2 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், கலந்தாய்வை முன்கூட்டியே நடத்துவதோடு, 4 மாத பயிற்சிக்கு பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என உறுதியான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்திவந்தனர்.

முன்கூட்டி தொடங்கத் திட்டம்? இந்த நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் திட்டிமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஜூலை இறுதி வாரத்தில் விண்ணப்பங்களை விநியோகிக்கவும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் கலந்தாய்வை நடத்தி முடித்து, உடனடியாக முதலாமாண்டு வகுப்பகளைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கி ஊழியர்கள் 29ல் வேலை நிறுத்தம்


நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வரும் 29-இல் (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

""வங்கி சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 9 ஊழியர் சங்கங்கள் ஜூலை 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக நிர்வாகத்துக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டது என்றும் சென்னையில் ஊழியர் சங்கங்கங்களின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில்

வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

NHIS card get new method

Click below

http://tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx

Spouse certificate, mutual transfer form, dist transfer form

Spouse certificate
Click below

https://app.box.com/s/lwx2yuqc8cmif3d3b7rfxx8xn9l9tmid

Mutual transfer form
Click below

https://drive.google.com/file/d/0ByAIJo2ODgwFT2hUbDZaRVNfVkk/view

Dist transfer form
Click below

https://app.box.com/s/yr3owr4w3yddi2tj18tna81tq4f68qbo

News 7 transfer news


News 7

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். 

இதற்காக தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தப்பட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறுவதும், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். 

இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், கடந்த கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் நடப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் கடுமையான விதிமுறைகள் அரசாணையாக வெளியிடபட்டுள்ளது.

Monday, July 11, 2016

Primary CRC postponed to 23-07-2016

அடுத்த மாத இறுதிக்குள் பஸ் பாஸ்


பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் சி.வி.சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்கிட, அனைத்து பேருந்துகளையும் தினமும் சரியான நேரத்தில் இயக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட அனைத்து வழித்தடத்திலும் தடையில்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-17ம் கல்வி ஆண்டிற்கான இலவச பயண அட்டைகளை மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தூய்மைப் பள்ளிகளுக்கு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான பள்ளிகள் இயக்கம்(Swachh Vidyalaya  Puraskar)

துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இந்த விருதை பெற, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பள்ளியினை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து தண்ணீர், கழிவறை, கைகழுவும் வசதி, இயக்குதலும் மற்றும் பராமரித்தலும், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.

அதன்படி விருதுக்கு விண்ணப்பித்த பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர், 3 ஆசிரியர்கள், ஒரு பொறியாளர், மாவட்ட உடல்நல அலுவலர் மற்றும் இரண்டு தன்னார்வலர்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

அதைத்தொடர்ந்து இந்த விருதுக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இந்த விருதை பெற விரும்பும் பள்ளிகள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்: புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக...: தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறை

யில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது. இதனால், பள்ளிகள் துவங்கி, சில மாதங்களான பின், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வுக்கு பிறகே, காலியிடங்களில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் இட மாறுதல் பெற முடியும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடப்பு மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கலந்தாய்வுக்காக புதிய விதிகளை, பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

ஓரிரு தினங்களில்... : 'இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியாகும்; முறைகேடு, தில்லுமுல்லுக்கு இடம் அளிக்காமல், அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு, அதிகாரத்தை தள்ளி வைத்து விட்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கிகள் வேலைநிறுத்தம்


வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டேட்பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட 5 வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே போல் வராக்கடன் வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளையும், நாளை மறுநாளும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வேலைநிறுத்தம் காரணமாக வங்கி பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Sunday, July 10, 2016

புரஸ்கார் விருதுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள்

Click below

https://app.box.com/s/7p9aj0lra2fyjg4rsy3o89ahcll60czj

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்


அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

7வது ஊதியக்குழு அறிவிக்கை எப்போது?


7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், குறைந்தபட்ட ஊதியம் ரூ.18,000 என்பதை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதையடுத்து இந்த கோரிக்கைகளைப் பரிசீலிக்க உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதனால், 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வருமா? அல்லது காலதாமதமாகுமா? என்று கேள்வி எழுந்தது. முக்கியமாக, ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியத்துடன் 7-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் கிடைக்குமா அல்லது காலதாமதமாகுமா என்ற குழப்பம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவது தொடர்பான அரசு அறிவிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Saturday, July 09, 2016

Online text books

Click below

http://www.textbooksonline.tn.nic.in/

transfer forms

Click below

https://app.box.com/s/ej2jju1nqxk1ujj2zdv5lq30i80lyjk1

TNPTF

Click below

http://www.tnptf.org/index.php/tnptf

Forms

M.L form
Click below

https://app.box.com/s/gmmpza7qfh1l8844h93kff7jqt62q05g

C.L form
Click below

https://app.box.com/s/6ry21hknvnic3zyo8quf7rlggbui8l77

E.L form
Click below

https://app.box.com/s/ubw88hh8h5ls6lsc99wmdqlvcgjav1qa

Madurai kamarajar university B.ed notification 2016-18

Click below

https://mkudde.org/csp/Adv_B.Ed._2016.pdf

https://app.box.com/s/ldphaev4qx9od7ry9xj4jgyh54aztik7

ஜெயமோகன் கதைகள்

Click below

http://www.jeyamohan.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2#.V4Gp9JjhXJs

மூன்று சுழி “ண” , இரண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? :-


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் த மட்டும்
(பந்து)

Cps account slip

Click below

http://218.248.44.123/auto_cps/public/