இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 13, 2016

'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்கும் புதிய 'ஆப்' அறிமுகம்


மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது:

வழக்கமாக, மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை, 'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதனால் பலர் கல்வித்திறனில் பின்தங்கியுள்ளனர்.

அவர்கள் 9, 10 வகுப்புகளில் தோல்வி அடைகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பில் சிறப்பு தேர்வு நடத்தி, கல்வித்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.

அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் காலை, மாலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன. அதே போல் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

Friday, June 10, 2016

டிடிஎட் விண்ணப்ப தேதி நீட்டிப்பு


தொடக்க கல்வி பட்டயப் படிப்பு ஆசிரியர் பயிற்சியில் (டிடிஎட்) சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவ, மாணவியர் ஒற்றை சாளர முறையின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வருகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250, மற்றவர்களுக்கு 500க்கு வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வினியோகிக்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு


பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், பல கல்லுாரிகளில், இரண்டு வித பட்டப் படிப்புகள் ஒரே முறையில் கற்றுத் தரப்படுகின்றன. உதாரணமாக, சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., படிப்புடன் எல்.எல்.பி.,யும் சேர்த்து, ஐந்து ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது.

இதே படிப்பை தனித்தனியாக படித்தால், ஆறு ஆண்டுகளாகும். ஆனால், இரண்டையும் இணைத்து படிக்கும் போது, ஒரு ஆண்டு குறையும். இதேபோல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நேரடியாக பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என, ஒருங்கிணைந்த, நான்கு ஆண்டுகள் படிப்பாக நடத்த, பல ஆசிரியர் கல்வியியல் பல்கலைகள் முயற்சித்தன. ஆனால், 'பி.ஏ., - பி.எஸ்சி., போன்றவை கலை, அறிவியல் படிப்பாக இருப்பதால், அதை கல்வியியல் கல்லுாரி அங்கீகார விதியின் படி கற்பிக்க முடியாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி மறுத்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லுாரி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஒருங்கிணைந்த பி.ஏ., -- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - - பி.எட்., என்ற புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக் கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும் விண்ணப்பித்தோம். எனவே, நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் மனுவை பரிசீலிக்க ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவுப்படி, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'எந்த கல்லுாரியிலும், நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புக்கு, தமிழக கல்வியியல் பல்கலை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏதாவது கல்லுாரி, நான்கு ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்பு நடத்துவதாக விளம்பரம் மற்றும் அறிவிப்பு செய்தால், அந்த கல்லுாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Thursday, June 09, 2016

1 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம் : தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2016-17 கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.

மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016-17 கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 “இ”- சேவை மையங்களிலும் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி பாடநூல்கள் 48மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் வந்து சேரும். இ-சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, June 08, 2016

Student enrollment form

Click below

https://app.box.com/s/vzec28gmenubrk0e9qeg29ixdhouwnpt

பி.இ ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியீடு


பி.இ. படிப்பில் (2016-17) மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-இல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 24-ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை மே 31 வரையில் 2.53 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களில் 1,34,722 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், கலந்தாய்வு தேதிகள் குறித்து பதிவாளர் கணேசன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

ஜூன் 27 முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூன் 20-ஆம் தேதி ரேண்டம் எண்ணும், 22-இல் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படுகின்றன. 24-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அழைப்புக் கடிதம்: கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

பெயர், பிறந்த தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

இரண்டு முறை கட்டணம் செலுத்தியிருந்தால்...: விண்ணப்பதாரர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அவ்வாறு கூடுதல் முறை கட்டணம் செலுத்தியவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அவர்கள் செலுத்திய கூடுதல் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்றார்.

வெளியூர் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடு

கலந்தாய்வுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவிகள் தங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தாய் அல்லது சகோதரிகளுடன் வரும் மாணவிகள் இந்த வசதியைப் பயன்படுத்திகொள்ளலாம். இதற்கான கோரிக்கையை பல்கலைக்கழக வாயில் பாதுகாவலரிடமோ அல்லது கலந்தாய்வு அலுவலகத்திலோ தெரிவிக்கலாம். உடனடியாக மாணவியர் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை (நேஷனல் எலக்டர் ரோல் பியூரிபிகேஷன்) ஜூன் 11ல் துவங்க வேண்டும்' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் அது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த மே 16ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக அதற்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செம்மைப்படுத்தும் பணி தற்போது இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை ஜூன் 11ல் துவங்க வேண்டும். இதை வாக்காளர் பதிவு அலுவலர்களாக(எலக்ட்ரோல் ரிட்டர்னிங் ஆபீஸர்)உள்ள ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்து அந்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின் செம்மைப்படுத்தும் பணிகள் துவங்கும்.

இறுதிபட்டியல்: பின், செப்டம்பர் இறுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலில் பேரில் வெளியிடப்படும். இதற்கான உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலெக்டர் ஹரிஹரன், நேர்முக உதவியாளர் அருண்சத்யா, தேர்தல் தாசில்தார் சுரேஷ்கண்ணன் பங்கேற்றனர். கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்


ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வழக்கமாக, மே மாதம் நடத்தி முடிக்க வேண்டிய கவுன்சிலிங், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தேர்தல் முடிந்தும், பணி மாறுதலுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.

இம்மாதத்திற்குள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டாலும், அனைவரிடமும் மனுக்களை பெற்று, அதை பரிசீலனை செய்து, கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற, இரு மாதங்கள் ஆகிவிடும். இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம், ஏராளமான தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், பல பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் நிர்வாகத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. அந்த பணியிடத்திற்கு கவுன்சிலிங் மூலம் ஆட்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, இதை சரிப்படுத்த முடியும். இது ஒருபுறமிருக்க, பணி மாறுதலை எதிர்பார்த்துள்ள பல ஆசிரியர்கள், இன்னும் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பணி மாறுதல் கவுன்சிலிங் குறித்து, அரசு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tnpsc group 2A results released nw

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-g2a2015rank.html

Tuesday, June 07, 2016

செய்முறை வகுப்பிற்கு இன்று முதல் பெயர் பதிவு : 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை வகுப்பிற்கு இன்று முதல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்கக நெல்லை மண்டல துணை இயக்குனர் மகத்தாப்பானு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2016 - 17ம் கல்வியாண்டில் மார்ச் 2017ல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள் வரை பெயர் பதிவு செய்யாத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (8ம் தேதி) முதல் 30.6.2016க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2016-17ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 8.6.2016 முதல் 30.6.2016 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 30.6.2016க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

International yoga day celebration

Click below

https://app.box.com/s/dmxxogi57zutm749hphyesuc8ucuxylm

National student compaign

Click below

https://app.box.com/s/wp13owjbcj1pizmznfxqgxbcw32w6or6

Sunday, June 05, 2016

பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு இனிமேல் முதுநிலை பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதுடன்,  பதவி உயர்வு மூலமும் பட்டதாரிகளை  நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. அதை மாற்றி பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

TNPSC annual planer 2016-17

Click below

http://www.tnpsc.gov.in/annual-planner.html

Saturday, June 04, 2016

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்

'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவில், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து முடிவு செய்யும் புதிய கல்வி கொள்கை, கடைசியாக, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் வெளியிட்டார்.

அதன் பின் வந்த அரசுகள், அதில் மாற்றங்களை மட்டுமே செய்துள்ளன. கல்வித்துறை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், அதன் தரம் குறித்த விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதையடுத்து, புதிய கல்வி கொள்கையை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, முன்னாள், மத்திய அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இந்த கமிட்டி தனது அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. எனினும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டது. 'ஆன்லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என, பல தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பரிந்துரைகளை பெறுவதாக, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்; அதன்படியே செயல்படுவோம். மாநில அரசுகளின் பரிந்துரைகள் பெற்ற பின்பே இது வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Friday, June 03, 2016

பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்


தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்ற வேண்டும்.

ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். மாறுதல் பெற்ற பிறகும் ஒரு ஆண்டு அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளின் இடையே, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்களை பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகள் வழங்கி வருகின்றன. பாரபட்சமில்லாமல், ஒளிவுமறைவு இல்லாத வகையில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கே பணியிட மாறுதல் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பிரச்னையின்றி பணியாற்ற முடிகிறது.

கடந்த மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடக்க வேண்டிய மாறுதல் கவுன்சலிங் தேர்தல் காரணமாக நடக்கவில்லை. அதனால் ஜூன் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆனால், பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு, பாடம் நடத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உடனடியாக பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஜூன் 3வது வாரத்தில் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக, மாறுதல் கவுன்சலிங் குறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட உள்ளது.

Thursday, June 02, 2016

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்கு அனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் இலவச பஸ் பாஸ் வழங்குகிறது.

நடப்பு கல்வியாண்டு துவங்கிய பின்பும், இதற்கான பணி வேகமெடுக்கவில்லை. அதனால், பஸ் போக்குவரத்து செலவுக்கு, பெற்றோர் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். விரைவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு எத்தனை மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது? இந்தாண்டு மாணவர் சேர்க்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய மாணவர் சேர்க்கையால், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே மாற வாய்ப்புள்ளது. இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு; ஏழு முதல் பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 ஆகிய வகுப்பு பட்டியலில் மாற்றம் இல்லாததால், பழைய பட்டியலில் சில மாற்றங் கள் மட்டும் செய்தால் போதும். மாணவர்களின் தகவல்களை சேகரித்து, விவரங்களை 'சிடி' யாக மாற்றி வரும், 10க்குள் போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். முதல்கட்ட பட்டியல் கொடுத்தபின் மாற்றங்கள் இருந்தால், தொடர்ந்து தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.