இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 29, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு


'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்ட வணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி நேற்று வெளியிட்டார். இந்த அட்டவணைப்படி இந்த ஆண்டில், மொத்தம், 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, 35 தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், 23 தேர்வுகள் மூலம், 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒன்பது தேர்வுகள், 2015 தேர்வு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட்டு, மழை, வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் நடக்கவில்லை.

இந்த தேர்வுகள் மூலம் இந்த ஆண்டு, 4,531 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள, குரூப் - 2 நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகள், குரூப் - 2 நேர்முகத் தேர்வு அல்லாத பதவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் அரசிடம் இருந்து வந்ததும் அறிவிக்கப்படும். அதிக காலிப் பணியிடங்கள் கடந்த, 2015 தேர்வு திட்ட அட்டவணையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் மூலம், 6,652 இடங்கள்; புதிய ஆண்டில், 2,401 இடங்கள் என, 9,000 இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, அதை விட கூடுதலாக, மொத்தம், 10 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வில் மாற்றம் வருமா?

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி அளித்த பேட்டி: * உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி அரசு விதிகளின்படி, தேர்வுகள் மற்றும் அதற்கான முடிவு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது * குரூப் 4 தேர்வில், 4,931; குரூப் 1ல், 45; உதவி ஜெயிலர், 65; வட்டார சுகாதார புள்ளியியலாளர், 177 இடங்கள் நிரப்பப்படும்

* இந்த ஆண்டு முதல், சுற்றுலா துறை அதிகாரி பணியிடத்துக்கு, ஐந்து; 'எல்காட்' துணை மேலாளர் பதவிக்கு, 12 இடங்களுக்கு, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வு நடத்தப்பட உள்ளது * மூன்று மாதங்களில், 12 வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தி, 6,054 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன * தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர, புதிய திட்டம் தயாரிக்கப்படுகிறது. தேர்வர்கள், கவுன்சிலிங்குக்கு சென்னை வரும்போது ஏற்படும் சிரமத்தை போக்க புதிய வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்


டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு, அவர்களின் பயிற்சி நிறுவனங்களில், பிப்., 1 முதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் படி, தேர்வு முடிவுகளை அறியலாம்' என, கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்


சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.

400 மி.கிராம் ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி.லி,, திரவ மருந்து , 2 முதல் 19 வயது வரையுடையவர்களுக்கு 400 மி.கி., மாத்திரை வழங்கப்பட உள்ளது. சுகாதாரத்துறை செவிலியர்கள் அரசு, தனியார் பள்ளிகளில் சென்று இவைகளை வழங்க உள்ளனர். இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பர். பிப்.,10ல் மாத்திரை சாப்பிடாதவர்களுக்காக பிப்.,15ல் மீண்டும் வழங்கப்பட உள்ளது. ரத்த சோகை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாணவர்களும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்,” என்றார்.

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்


ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். போராட்டத்தின், மூன்றாவது நாளான பிப்., 1 பள்ளி வேலை நாள். தமிழகம் முழுவதும், 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால், அன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அரசு கிடுக்கிப்பிடி வகுப்புக்கு வராமல் போராடும் ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சம்பளப் பிடித்தம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

'தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தால் அதை ஏற்கக் கூடாது; போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியலை அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு என்ன? பிப்., 1ல், பள்ளிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆசிரியர்கள் மறியல் செய்யச் சென்றால், வகுப்புகள் முடங்கி விடும். எனவே, அந்த நாளில் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ.,வில் பணியாற்றுபவர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வகுப்புகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, அரசு அழைத்து பேசுவதுடன், வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை உடனடியாக, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும்.

புதிய வாக்காளர்களுக்கு 'கார்ட்டூன்' புத்தகம்


தமிழகத்தில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு, ஓட்டு போடுவது எப்படி என்பது தொடர்பான, கார்ட்டூன் புத்தகத்தை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளில், தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. கடந்த, 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், முதல் ஓட்டை அவர்கள் பதிவு செய்ய இருப்பதால், தயக்கம், தடுமாற்றமின்றி ஓட்டு போடும் வகையில், கார்ட்டூன் வடிவிலான புத்தகம் ஒன்றை, தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. அதில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் குழந்தைகள் ஓட்டை பதிவு செய்வது போலான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை நகல் எடுத்து, புதிய வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

TNPSC annual planner 2016

Click below

http://www.tnpsc.gov.in/annual-planner.html

VAO exam application status

VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

29.02.2016 அன்று நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களின் "Application Status" விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையளத்தில் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைக்கொண்டு தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

Thursday, January 28, 2016

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை


'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.

தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் Advertisement விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை


தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினர். மேலும், தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மென்பொருள் மற்றும் தேர்தல் நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜாக்டோ தொடர்பு மறியல் காரணமாக 1.2.2016 அன்று பள்ளியை பார்த்துக் கொள்ள மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்

TNPSC group II tentative answer key by tnpsc

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys.html

Monday, January 25, 2016

பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு


ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணம் செய்ய தேசிய விருது பெற்ற விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், தேர்வு எழுதச் செல்லும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன் என்ற சலுகையை பெற பெண்களுக்கு 58ம் , ஆண்களுக்கு 60ம் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணக்கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் என்றால் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே கட்டணச்சலுகை. ஆனால் மூத்த குடிமகன்கள் எந்த காரணத்திற்காக பயணம் மேற்கொண்டாலும் இந்த கட்டண சலுகை உண்டு. அப்படி பயணம் செய்யபவர்கள் பயணச்சீட்டு வாங்கும் போதோ, முன்பதிவு செய்யும் போதோ வயது சான்று ஆவணங்கள் எதையும் காட்டத்தேவையில்லை. ஆனால் பயணத்தில்போது வயதை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய உண்மை சான்றை காட்ட வேண்டியது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை என 10 வகையான ஆவணங்களை வயது சான்றாக பயணத்தின் போது, கேட்கும் போது காட்ட வேண்டும்.

வயதுக்கான சான்று காட்டாவிட்டால், அவர்களுக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதிப்பார். அதாவது மூத்த குடிமகன்கள் சலுகையாக பெற்ற கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இனி மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணம் செய்பவர்கள் வயதுச் சலுகைக்கான சான்ைற காட்டாவிட்டால், அதவாவது தவறான வயதை காட்டி சலுகை பெற்று பயணிப்பவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருதப்படுபவர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்து இருக்கை அல்லது படுக்கை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் தவறான வயதைக்காட்டி சலுகை பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படி தவறான வயதைக் குறிப்பிட்டு சலுகை பயணம் மேற்கொள்பவர்கள் பிப்ரவரி 1ம் தேதி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருத்தப்பட்டு அதற்கான அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு


பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால உத்தரவிட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, விலக்கு கோரிய மாணவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்

Sunday, January 24, 2016

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 16.18 லட்சம் வாக்காளருக்கு அடையாள அட்டை


வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 16.18 லட்சம் வாக்காளருக்கு இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 ஆக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட்டபோது தமிழகத்தில் 5,62,06,547 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, புதிதாக 16,18,526 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான இன்று முதல் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்குகிறது. புதிய வாக்காளர்களுக்கு ஆளுநர் ரோசையா வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி தொடங்கி வைக்கிறார். மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கே நேரில் வந்து புதிய வாக்காளர் அட்டை வழங்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை


'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது. 8.5 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில், சில தேர்வு மையங்களை பார்வையிட்ட, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறுகையில், ''பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம், தகுதியானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு மவுசு கூடி விட்டது. வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என்றார்.

TNPSC GROUP II(A) NON INTERVIEW KEY ANSWER 24.01.2016:

Click below

http://doozystudy.blogspot.in/2016/01/tnpsc-group-2a-non-interview-answer-key.html?m=1

Saturday, January 23, 2016

தமிழகம் முழுவதும்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் : ஜன 31, பிப்.7ல் நடக்கிறது


தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதி மற்றும் பிப். 7ம்தேதி சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக 1.1.2016 தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியல் தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் மாற்ற படிவம் 8ஏ ஆகியவை தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி ஜன.31, பிப்.7 ஆகிய ஞாயிறு விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஒரே தொகுதிக்குள் மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்பவர்களும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர். இதன் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் இவர்கள் ஓட்டு போடலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படிவத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதில், ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருப்பின், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என, மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரும் பட்சத்தில், அவை இயக்குனருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்பே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும்.

போலிச்சான்றிதழ் கொடுத்து பல ஆசிரியர்களும் தலைமறைவாகி வரும் சூழலில், வெளிநாடு செல்ல இயக்குனரின் அனுமதி அவசியம் வேண்டும் என, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது