இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 06, 2014

வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

  "மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.

சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில், பாட புத்தகங்களின் வாசிப்பு திறன் சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது. மற்றபடி, அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதல் 15 இடங்களை பிடித்த, மாவட்டங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில் கூட வாசிப்பு திறன் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எச்சரிக்கை: திறன் குறைந்த தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக கவனத்துடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

அடுத்து, பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும் போது, மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது; கல்வித்துறை இணை இயக்குனர் தகுதியில், கண்காணிப்பு அலுவலர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் தோறும் ஆய்வு செய்ததில், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் மிக குறைவாக உள்ளது. தமிழ் பாடத்தை வாசிப்பதில் கூட பின்தங்கி உள்ளனர். மாநிலத்தில் வாசிப்பு திறன் குறைந்த மாவட்ட பட்டியலில், சிவகங்கை 26வது இடத்தில் உள்ளது. மாவட்ட, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், சிறந்த பள்ளியை தேர்வு செய்வது குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:

மாவட்ட வாரியாக, தொடக்கக்கல்வி அலுவலர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கொண்ட குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும். குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத்திறன், கணிதத்தில் அடிப்படைத் திறன், செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை, தேசிய விழாக்களில் மாணவர்களின் ஈடுபாடு, பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்க வேண்டும். மாவட்ட அளவில், மூன்ற சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வரும்,10ம் ?ததிக்குள் விவரத்தை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திங்களன்று விசாரனைக்கு வரும்தகுதிதேர்வு சம்பந்தமானவழக்குகள்.


திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான
வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.

WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
AND
WA.1038/2014
AND For Stay
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
AND For Direction
MP.3/2014 - DO -
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI
REDDY WA.707/2014
S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
WA.776/2014 M/S.DAKSHAYANI
REDDY CHENNAI
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.857/2014 M/S.DAKSHAYANI
REDDY CHENNAI
S.SUREKHA
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.944/2014 M/S C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
For Stay
MP.1/2014 - DO -
TO For Direction
MP.3/2014 - DO -
AND
WA.972/2014 M/S DAKSHAYANI
REDDY CHENNAI
S.SUREKHA
AND
WP.22498/2014 M/S.B.BALAVIJAYAN
V.SHIVALINGAM
AND
WP.22499/2014 M/S.B.BALAVIJAYAN
V.SHIVALINGAM
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.22503/2014 M/S.B.BALAVIJAYAN
SALEM
V.SHIVALINGAM
AND
WP.22504/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.18587/2014
M/S.G.SANKARAN M/
S.P.RAJALAKSHMI GOVTADVOCATE
S.NEDUNCHEZHIYAN TAKES NOTICE
FOR RESPT
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.20040/2014 M/S.G.SANKARAN
S.NEDUNCHEZHIYAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND II SET NOT FILED
WP.21488/2014 M/S.DAKSHAYANI
REDDY
(SERVICE) S.SUREKHA
AND
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND II SET NOT FILED
WP.21566/2014 M/S.C.UMA
(SERVICE) N.R.R.ARUN NATARAJAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.22177/2014 M/S.R.PARTHIBAN
(SERVICE) STALIN ABHIMANYU
C.VIGNESWARAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.23094/2014 M/S.M.UDHAYA
KUMAR M/S.D.KRISHNAKUMAR
(SERVICE) SPL GOVT PLEADER
(EDUCATION)
TAKES NOTICE FOR RR
1.TO 4
SERVICE AWAITED REG R5
AND TO DISPENSE WITH
MP.1/2014 DO
AND FOR STAY
MP.2/2014 DO

TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 -3 PAPERS RESULTS PUBLISHED

Friday, September 05, 2014

கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது

: நமது நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் உள்ள பள்ளிகளில்தான் பணியாற்றுகின்றனர். எனவே, கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளைப் போல சாலை இணைப்புகள், மின்னணு சாதன இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, ஒருங்கிணைந்த கற்றல் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதோடு, கிராமங்களிலேயே இருக்க விரும்பும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதிய பொருளாதார வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட காரணங்களால் நகர்ப்புறங்களுக்குப் பணிமாறுதல் கோருவது இயல்பானதுதான். அதேபோல, அவர்கள் தங்களது அறிவையும் மேம்படுத்திக்கொள்ள நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளே ஏற்றதாக இருக்கும் என நம்புகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இந்த நிலை தொடர்பாக அரசும், சமூக நிறுவனங்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் பெரும் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும். அணுகுண்டு சோதனைக்கு உதவிய கல்லூரி வகுப்புகள்: எனது கல்லூரி நாள்களில் பேராசிரியர் சின்னதுரை அணு இயற்பியல் உள்ளிட்ட வகுப்புகளை எடுத்தார். பொக்ரானில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்திய ஒரு நாளில் அணு குண்டு சோதனை நடத்தி, அணு ஆயுத நாடாக இந்தியா மாறியது. அந்தச் சோதனைக்கு எனக்கு உதவிப் புரிந்தது பேராசிரியர் சின்னதுரையின் வகுப்புகள்தான். அந்த நாளில் அவருக்கு நான் நன்றி செலுத்தினேன். மாணவர்கள் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் இருப்பார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுவதும், ஊக்கப்படுத்துவதும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. உலகில் வேறு எந்த வேலையையும் விட சமூகத்துக்குப் பயன்தரும் மிக முக்கியப் பணி ஆசிரியர் பணி ஆகும். அவர்கள் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் பணியைச் செய்கின்றனர். ஆசிரியர்கள் ஏணிகளைப் போன்றவர்கள். பலர் முன்னேறுவதற்குப் பயன்படுவர். ஆசிரியர்களிடம் இருந்து நாம் கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும், ஒழுக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் கலாம்.

Thursday, September 04, 2014

ஆசிரியர் நியமனத் தடையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தகவல்


் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 பேர் தாக்கல் செய்த மனு மீது அவர் இவ்வாறு உத்தரவிட்டார். தகுதிகாண் மதிப்பெண் முறையில் மதிப்பெண் வழங்கும்போது, 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜரானார். அவர், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காகக் கருதி உடனே விசாரிக்குமாறும் வேண்டினார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தால் பட்டியலிடப்பட்டு முறையாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமுதாய சிற்பிகள் :இன்று ஆசிரியர் தினம்

   
    ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். "எழுத்தறிவித்தவன் இறைவன்', "மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள் சிற்பிகள்' போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப் படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவே தான் ஆசிரியர்கள் இரண்டாவது தாய் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர் களுக்கு உண்டு.

மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி. உலகில் ஆசிரியர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம் மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பை உணர்த்தும் விதத்திலும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது. சிறந்த ஆசிரியரின் பண்புகள் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி, அவர்களது மனதில் அப்படியே பதிகிறது. ஆசிரியரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். தோன்றியது எப்படி:

சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார். இதன் காரணமாக அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவர்களின் மனதில் நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்றார்.

ஆசிரியரும் ஒரு மாணவரே:தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி சிறப்பானது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல. மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதியே விருது வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 கோடி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், என, பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக்கேட்டது. மாணவர்கள் புகைப்படம், சுயவிவரம், குடும்பத்தினர் பற்றிய விபரம், பள்ளி விடுமுறை நாட்கள், உறுதிமொழி எடுக்க வேண்டிய நாட்கள், பள்ளி மற்றும் வகுப்பில் பின்பற்றப்படும் மாதிரி கால அட்டவணை, முக்கிய தினங்கள், தினமும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையொப்பமிட தனியிடம், உடற்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு, முன்னேற்ற கருத்துகள் ஆகியவை இடம் பெற அறிவுறுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் டைரி தயாரித்து, காலாண்டுத்தேர்வு முடிவுக்குள் வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி.,

'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. புதிய ஆசிரியர் நியமன விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு, நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல், தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால், ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட, தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.

கற்பித்தல் என்பது பணியல்ல; தர்மம்!


  ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மோடி பேசியதாவது : மாறி வரும் சூழ்நிலையில், மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்பித்தல் வெறும் கடமை ஆகாது.

அது ஒரு பணியல்ல; வாழும் முறை. கற்பித்தல், வாழ்வின் தர்மம். ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின், ஒரு ஆசிரியர் இருக்கிறார். நான் குஜராத் முதல்வரானதும், என் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தேன். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு மாணவனும், தன் ஆசிரியரை மதிக்க வேண்டும். ஆசிரியருக்கு ஓய்வு என்பதே கிடையாது. மற்ற எந்தப் பணியை செய்யும் நபரும், குறிப்பிட்ட வயதில், பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், ஒரு ஆசிரியர், எத்தனை வயதானாலும் தன் அறிவாற்றலையும், தன் அனுபவத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் மத்தியில் மோடி இன்று உரை : இன்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை, நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தனியார் பள்ளிகளும் மோடி உரையை மாணவர்களுக்கு காட்ட ஆர்வமாக உள்ளன. எனினும், மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில், இதற்கான முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் அவர்களின் ஆசிரியர்தின வாழ்த்துச்செய்தி

Wednesday, September 03, 2014

TNTET PAPER-1: கலந்தாய்வில் கலந்துக்கொண்டு பணிஒப்புகை ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படாது, சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும

் கடந்த 01.09.2014 & 02.09.2014 நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பணி ஒப்புகை ஆணை வழங்கப்பட்டது.... அவர்கள் அனைவரையும் நாளை ( 04.09.2014 ) அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடைவிதித்தது.

இதனால் நாளை பணி நியமன ஆணை வழங்கப்படாது. ஆனால் பணி ஒப்புகை பெற்ற அனைவரும்   மாவட்டத் தொடக்கக்கல்வி  அலுவலகதிற்கு செல்லவும். அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும். எனவே அனைவரும் கலந்தாய்வின் போது கூறியபடி அணைத்து அசல் மற்றும் நகல்  சான்றிதழ்களுடன் செல்லவும.. இயக்குனரின் மறுஉத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும்.

10-ஆம் வகுப்பு தனித் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் வியாழக்கிழமையும் (செப்.4), வெள்ளிக்கிழமையும் (செப்.5) விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த மையங்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர் ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500-ஐ செலுத்த வேண்டும். ஏற்கெனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அந்த மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை எடுத்துவர வேண்டும். நேரடித் தனித் தேர்வர்களாக எழுதுவோர் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒரு வகுப்பின் மாற்றுச் சான்றிதழின் நகல் அல்லது எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்

. அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று சிறப்பு மையங்களுக்கு எடுத்து வர வேண்டும்.

சுருக்க திருத்த பணிகள் தீவிரம் : அக்டோபரில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தற்போது நடந்து வரும், தொடர் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிந்ததும், வரும் அக்டோபர் மாதம், வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆன் லைனில் : கடந்த மே 16ல், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து, வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள், தாலுகா அலுவலகங்களில் பெறப்படுகின்றன.

தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் லைனிலும் விண்ணப்பிக்கப்படுகிறது. இத்தொடர் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிந்ததும், அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. தேர்தல் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 15ல், இப்பட்டியல் வெளியிடப்படலாம் என, தெரிகிறது. அதற்கேற்ப அனைத்துப் பணிகளும் மிக விரைவாக நடந்து வருகிறது. வெளியிடும் தேதி, முடிவு செய்யப்படவில்லை. வரும் 2015, ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பியோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பெயர் சேர்ப்பு : மாவட்டங்களில், இன்ஜினியரிங் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலம், அங்கு படிக்கும் தகுதி உள்ள மாணவர்களிடம், பெயர் சேர்ப்பு விண்ணப்பப் படிவம் தரப்பட்டு, நிரப்பி வாங்கப்படும். பின், அப்படிவங்கள் தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டு, விவரங்களை சரிபார்த்து, அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மாணவர்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு, அவர்களது விண்ணப்பம் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.