click below
Wednesday, August 13, 2014
Tuesday, August 12, 2014
ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக, ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இடமாறுதலில் மறைக்கப்பட்ட பணியிடம், முறைகேடுகளை கண்டித்தும், கல்வித்துறையில் நீண்ட கால கோரிக்கைகள் நிறை வேற்றாததை கண்டித்துதான் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறைபாடு இல்லாவிட்டால் எதற்காக ஆர்பாட்டம் நடத்துகிறோம்,” என்றார்.
Monday, August 11, 2014
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பழங்குடியினப் பிரிவில் அதிக காலியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் பழங்குடியினப் பிரிவில் 45 சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதனிடையே அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்தது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆசிரியர் நியமனத்தில் பழங்குடியினப் பிரிவினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் பின்னடைவு காலிப்பணியிடங்கள், இப்போதைய காலிப்பணியிடங்கள் என பழங்குடியினப் பிரிவினருக்காக மொத்தம் 182 காலியிடங்கள் உள்ளன. இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் பழங்குடியினத்தவர்களுக்கான பிரிவில் 86 இடங்களுக்குத் தகுதியான தேர்வர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் கூறியது: பழங்குடியின மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு, பழங்குடியினப் பிரிவில் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் இந்தப் பிரிவினருக்கு கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் 40 காலியிடங்கள்: இந்தத் தேர்வுப் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 29 காலிப்பணியிடங்கள் உள்பட தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.
புவியியல் பாடத்தில் 225 காலியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 225 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இப்போதைய காலியிடங்களின் எண்ணிக்கை 890 ஆக இருந்தது. புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 25 சதவீத அளவுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள்கூட பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதால் புவியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்குப் போதிய எண்ணிக்கையில் தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்
தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது
டி.இ.டி., சீர்மரபினர் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது. கள்ளர் சீரமைப்பு துறையில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள்-1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்., பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்,என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக., 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள், என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.--
பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர் (SEC.GR.TEACHER) பெறும் சம்பளம் எவ்வளவு?
PAY BAND PB3 : 5200 - 20200+2800 + PP :750
PAY : 5200+GRADE PAY 2800 +PP 750 +DA100%+MA+HRA
PAY = 5200
GRADE PAY = 2800
PP = 750
TOTAL = 8750
100% DA = 8750
HRA = 440
MA = 100
TOTAL GROSS = RS.18040
பணி நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?
PAY BAND PB2: 9300-34800+4600
PAY:9300+
GRADE PAY: 4600
DA 100% : 13900
HRA : 880
MA : 100
TOTAL : 28780
(PAY :9300 +4600=13900+100%DA=27800+880+100=28780)
M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
PAY = 9300
GRADE PAY = 4600
TOTAL = 13900
INCENTIVE 6% = 834 ROUNDUP 10RS 840
TOTAL PAY = 14740
100%DA = 14740
HRA = 880
MA = 100
NET TOTAL = 30460
Sunday, August 10, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம
: ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும் செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள் இப்பணி நடக்கிறது. பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்ற சான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.
பஸ்வசதி இல்லாத பகுதி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
;தமிழகத்தில் பள்ளி, பஸ் வசதி இல்லாத 813 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 11,002 மாணவர்கள் உள்ளனர். இவர்களில், தொடக்கப்பள்ளிகளில் 8,035 பேர், நடுநிலைப்பள்ளிகளில் 2,967 பேர் வெளியூர்களுக்கு சென்று பயில்கின்றனர்.இவர்கள் ஆட்டோ, வேன், ஜீப் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு சென்றுவர, ஒவ்வொரு மாணவருக்கும் போக்குவரத்து நிதியாக மாதம் ரூ.300 வீதம், ஆண்டிற்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியை, மாணவரின் பெற்றோரிடம் பயனீட்டு சான்று பெற்று வழங்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 6,145 பேருக்கு ரூ.1.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
12,000 ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு
் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. மொத்தம் 12 ஆயிரம் பேர் கொண்ட இந்தப் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து முதன்மைத் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால், வழக்குகள் காரணமாக, பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான 11 ஆயிரம் பேரைக் கொண்ட முதன்மை தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: இதுபோல, ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான 1,236 பேரைக் கொண்ட முதன்மைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழ், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள் காரணமாக எஞ்சிய பாடங்களுக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான முதன்மை தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNTET-2013 PAPER-2 தேர்ந்தோர் பட்டியல் CUT OFF
ENGLISH (2846 POST)
ST WOMAN : 54.06
ST GENERAL : 55.07
SCA WO : 62.45
SCA GE : 62.48
SC WO : 63.16
SC GE : 63.17
MBC WO : 65.18
MBC GE : 65.21
BCM WO : 62.92
BCM GE : 62.87
BC WO : 65.35
BC GE : 65.41
MATHS (987 POST)
TAMIL MEDIUM SCA WO : 60.86
SCA GE : 60.67
ENGLISH MEDIUM SCA WO : 62.42
SCA GE :62.64
TAMIL SC WO : 63.52
SC GE : 63.36
ENGLISH SC WO : 64.44
SC GE : 64.49
TAMIL MBC WO : 66.64
MBC GE : 66.91
ENGLISH MBC WO : 69.34
MBC GE :69.43
TAMIL BCM WO : 63.15
BCM GE :
ENGLISH BCM WO : 66.93
BCM GE :66.93
TAMIL BC WO : 66.36
BC GE : 66.42
ENGLISH BC WO : 70.37
BC GE : 70.40
இதற்குமேல் CUTOFF MARKS வாங்கி
LIST-ல் பெயர் வராதவர்கள்
TRB- ஐ அணுகவும்.
Saturday, August 09, 2014
1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது.
இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 அல்லது 5 பள்ளி மேல்நிலையாகவும் 2 உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேல்நிலைக்கு தலைமை ஆசிரியர் உட்பட 10 புதிய காலியிடமும், உயர்நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 6 புதிய ஆசிரியர்களும் என, 1,300 பேர் நியமிக்கப்படுவர். கவுன்சிலிங் மூலமே தரம் உயரும் பள்ளிகளின் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டுள்ளது
. அதே நேரத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் இல்லாத பட்சத்தில் மாறுதல் கவுன்சிலிங் ஆக., இறுதி வாரம் அல்லது அடுத்தமாதம் நடத்தப்படலாம் என கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு
வாக்காளர்கள் வாக்களித்தவுடன் அவர்கள் எந்தச் சின்னத்தில் வாக்களித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்குப் பதிவு செய்தவுடனேயே ஒப்புகைச் சீட்டு வரும் முறையை விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை சோதனைக்காக சில தொகுதிகளில் அறிமுகப்படுத்திப் பார்த்தோம். புகார் எதுவும் வரவில்லை. அதேபோல, வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும் சம்பத் தெரிவித்தா
அனுமதியின்றி படிக்கும் படிப்பிற்கு தடை
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது.
ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட்.
உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியான இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒரு பட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும்.
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள் மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்அனுமதி இல்லாமல் படித்த படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
Friday, August 08, 2014
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.
Thursday, August 07, 2014
பாஸ்போர்ட் விண்ணப்ப ஆவணங்கள்: அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் கையொப்பம் இனி தேவையில்லை
பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்படும் திருமண பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் விண்ணப்பதாரர்கள் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் (எஹக்ஷ்ங்ற்ற்ங்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) கையொப்பம் பெற வேண்டியதில்லை என பாஸ்போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசு துறைகளிடம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அந்த விண்ணப்பங்களில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் பெறும் நடைமுறையை நீக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளத
ு. மத்திய அரசின் தற்போதைய இந்த அறிவிப்பை பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் கடந்த 2000 -ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றில் விண்ணப்பதாரர்களின் சுய கையொப்பம் மட்டும் இருந்தால் போதுமானது. அவற்றில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் கோரப்படுவதில்லை. இந்த ஆவணங்களின் வரிசையில் தற்போது 18 வயது நிரம்பாத பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அவரது பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்கள், திருமண பதிவுச் சான்று, ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் கோரப்படும் அவரின் ஓய்வூதிய ஆணையின் நகல் ஆகியவற்றிலும் இனி விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயகையொப்பம் மட்டும் இட்டால் போதுமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.