இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 29, 2014

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம-tnkalvi


தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.
பதவி உயர்வு தாமதமாக� வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள�ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)
1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.
3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.
4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.
5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.
6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.
7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.
10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.
11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.
12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.
14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.
15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.

பொதுத் தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி: அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கமளிக்க உத்தரவு


ு. பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் தலைமையில் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் திருவள்ளூர், விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தைக் கடந்தது. பத்தாம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 90.6 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளில் 80 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 97 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டு இதேபோன்ற மண்டல ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகுதான் அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டி கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கு இந்தக் கையேடுகளும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில வழிப் பிரிவுகள், தமிழ் கற்றல் சட்டம்: 2014-15 ஆம் ஆண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம், கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை குறித்தும் இந்தக் கூட்டங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதோடு பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் மண்டல கூட்டங்களில் ஆய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல்

  இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கல்வித் துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல், 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்து உள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை, 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்து உள்ளது. '

மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், 'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு, கணிசமாக குறைந்துவிட்டது' என, கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது. இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது

: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும், பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித் துறை அல்லாத பிற அமைப்புகளிடம், முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என, தெரியவில்லை. இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே, பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை, உறுதியாக கூற முடியாது. எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால் தான், மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு, பிரின்ஸ் தெரிவித்தார்.

TNPTF Election Form

Monday, July 28, 2014

சிந்திக்கும் திறனை மேம்படுத்த பள்ளிக்கூடங்களில் சதுரங்க போட்டிகள் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கூடங்களில் சதுரங்கபோட்டியை நடத்தும்படி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஜெயலலிதா
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி பள்ளிக்கூட மாணவர்கள், மாணவிகள் திறமையையும் ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும் அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 7 முதல் 17 வயதுள்ள பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சதுரங்கபோட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த வருடமும் போட்டிகள்
அதுபோல இந்த வருடமும் பள்ளிக்கூடம் முதல் மாநில அளவில் வரை சதுரங்க போட்டியை நடத்த வேண்டும். இந்த மாதம் 21–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் பள்ளிக்கூட அளவில் போட்டியை நடத்துங்கள். 25–ந்தேதி பள்ளி அளவில் முதல் 2 இடங்கள் பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக ஒரு பிரிவுக்கு 2 பேர் வீதம், உரிய நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து குறுவட்ட செயலாளர் அல்லது உதவி தொடக்க கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 31–ந்தேதி குறுவட்ட போட்டிகள் நடத்தலாம்.

ஆகஸ்டு மாதம் 7–ந்தேதி குறுவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்களின் விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 19–ந்தேதி கல்வி மாவட்ட அளவில் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களின் விவர பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

செப்டம்பர் மாதம் 2–ந்தேதி மண்டல அளவில் போட்டி நடத்த வேண்டும். இதில் கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக பங்கேற்கலாம். செப்டம்பர் மாதம் 9–ந்தேதி மண்டல அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

மாநில அளவிலான போட்டி
அக்டோபர் மாதம் மாநில அளவிலான போட்டியை நடத்த வேண்டும். அனைத்து போட்டிகளையும் முறையாக நடத்தி ஒவ்வொரு நிலையிலும் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வி.சி.ராமேஸ்வர முருகன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக.,1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி., தகவல்

'ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது. இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியாகும். பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது

வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை


பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர். இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.  இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

INSPIRE award online entry

Sunday, July 27, 2014

தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை சலுகை, வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலம் உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்

போதிய கல்வி தகுதி இருந்தும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால், பல்வேறு சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தனிநபர் விளையாட்டுக்களான ஓடுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குழு விளையாட்டுகள் வரிசையில் ஹாக்கி, கால்பந்தாட்டம், வாலிபால், பேஸ்கட் பால் என அனைத்து விளையாட்டுகளின் வரலாறு, விதிமுறைகள், ஆடும் முறை ஆகியவற்றை கற்று கொடுக்கின்றனர்

. இதுதவிர, மைதானத்துக்கு அழைத்து சென்று பயிற்சியும் கொடுக்கின்றனர். ஆனால், இவர்கள் நான்-டீச்சிங் ஊழியராகத்தான் இன்று வரை கருதப்படுகின்றனர். இந்த துறையில், பி.எச்.டி.பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான். பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என்ற பெயரெல்லாம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. அதற்கு பதிலாக, இவர்கள் பிசிகல் டிரைனிங் இன்ஸ்ட்ரக்டர் என்று அழைக்கப்படுகின்றனர். எம்.பில், பி.எச்டி. பட்டம் பெற்று இருந்தும், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் விதிப்படி இவர்கள் டீச்சிங் ஸ்டாப் என்ற வரையறைக்குள் இடம் பெறவில்லை. வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு போர்டு, சாக்பீஸ் ஆகியவற்றை கொண்டு பாடம் நடத்துபவர்கள்தான் டீச்சிங் ஸ்டாப் என்றும், இவர்கள் சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்தாத காரணத்தால், நான்-டீச்சிங் ஸ்டாப் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதனால், இவர்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வரையறுத்த கல்லூரி பேராசிரியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு, சம்பளம் மற்றும் விடுமுறையுடன் கூடிய படிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் எதுவும் பெற முடியாமல், பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

ஆனால், நூலகர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் போன்ற நான்-டீச்சிங் ஸ்டாப் ஊழியர்கள், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். மேலும் துறை சார்ந்த தேர்வுகள் எழுதி, படிப்படியாக, ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பிரடென்ட், பர்சர் என பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், வகுப்பறையில் பாடம் எடுக்காததை காரணம் காட்டி, பிசிகல் டிரைனிங் இன்ஸ்டிரக்டர்களுக்கு எம்.பில், எம்.பி.எட். போன்ற தேர்வுகள் எழுத வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால், இவர்கள் தங்களுடைய தகுதிகள் மற்றும் திறமைகளை வளர்த்து கொள்ள முடிவதில்லை. மேலும், இவர்கள் மிகவும் குறைவான கிரேடு சம்பளமான ரூ.2,800க்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: எங்களிடம் முழு கல்வி தகுதி இருந்தும், கடந்த பல வருடங்களாக நான்-டீச்சிங் ஸ்டாப்பாகவே பணிபுரிந்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகிறோம். எங்கள் துறை சார்பில் இருந்து வந்த கோடை வகுப்பான எம்.பிஎட். படிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் ஆசிரியர்கள் ஆகும் நிலை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு எம்.பில்., எம்.பிஎட்., படிக்க சம்பளத்துடன் கூடிய வாய்ப்பும், அனுமதியும் தர வேண்டும்.

மேலும், பி.டி. ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.9,300 வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1,500 ரூபாயும், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாயும், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்தத் தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு, மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்ததும், வழங்கப்படுகிறது

. l 2011 - 12ல், 313 கோடி; 2012 - 13ல், 353 கோடி; 2013 - 14ல், 381 கோடி ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில், முறையே, 19 லட்சம், 21 லட்சம் மற்றும், 23 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர். l நடப்பு, 2014 - 15ம் கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.l பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த மாதம் இறுதியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிப்ப

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.  

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.  பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய்ஸ்ரீக்ங் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.