இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 21, 2013

தமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு ஜூன் 28ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 04362 - 227782, 226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செயல் வழிக்கற்றல் முறை நடைமுறைப்படுத்தல்


பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின்படி தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும்  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை

Thursday, June 20, 2013

நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது


பள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்
முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் சங்கத்திற்கு மூவர் வீதம் அழைக்கப்பட்டனர்,
பின்னர் உயர்நிலைப்பள்ளி சார்ந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.இதில் தொடக்கக்கல்வியோடு இனணந்து பணியாற்றும் சாஸ்திரா பட்டதாரி ஆசிரியர் கூட்டணி,பட்டத◌ாரி ஆசிரியர் சங்கம்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டன.பின்னர் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்டன
பின்னர் கல்வித்துறைஅமைச்சுபணியாளர்அனைத்து சங்க பிரதிநிதிகள், உ.தொ.க.அ. சங்க பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசணை நடத்தப்பட்டது.

வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில(அனைத்தும் சங்கங்களின் கருத்து தொகுப்பாக) முழுமையான விபரங்கள் இல்லை.

1.இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 ஆக உயர்த்துக
2.சி.பி.எஸ் முறையை கைவிடுக
3.Dual degree -க்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது
4.1-5,6-10,6-12 என்கிற முறையில் வகுப்புகள் கொண்ட பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்( உயர்,மேல்நிலைப்பள்ளி சங்கங்கள்)
5.அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக்காவலர் நியமனம் செய்க
6.அலகுவிட்டு அலகு விட்டு மாறுதல் தருக

இவற்றில் ஒரு சில கோரிக்கைகள் தவிர மற்றவை திரு

courtesy:annadurai velusamy

பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்

.அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசி ரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.

எனவே இவ் அரசாணையை உட்பட அனைத்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி

டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம். வேலையில் ஏதாவது பிரச்னை நடந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கலாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பள்ளிகள் மீது எடுக்க முடியாது. அதனால் தான், அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்குகிறோம். விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தெளிவாக கூறியுள்ளோம். "கிளார்க்'குளை மட்டுமே, இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம்.இவ்வாறு சுர்ஜித் கே. சவுத்ரி கூறினார்.

CRC RP Training

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை

பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில், நேற்று மாலை, 4:00 மணியில் இருந்து, ஒவ்வொரு சங்க நிர்வாகிகளையும் அழைத்து, அவர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, சங்க நிர்வாகிகள், கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், பேட்ரிக் ரைமாண்ட், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க தலைவர், ரவிச்சந்திரன், பொதுச்செயலர், தேவி செல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில், விளையாட்டுக்கென, தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தலா, ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம் என, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், "

"மாவட்ட கல்வி அலுவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், 14 வகையான இலவச பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் பணியை கவனிக்க, தனி ஊழியர் நியமனம், நிலுவையில் உள்ள சிறப்புக் கட்டணத்தை, உடனடியாக வழங்க கோருதல், கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். முதல்வருடன், ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்,'' என்றார்.

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tuesday, June 18, 2013

TNPSC Group IV notification

TNPSC Group IV Vacancies 3469 Jr Assistant 1738 Typist - June 2013

Post And Vacancies :
Junior Assistant (Non - Security)  : 3469 posts
Junior Assistant (Security) : 62 posts
Bill Collector Grade-I : 19 posts
Typist : 1738 posts
Steno-Typist Grade-III : 242 posts
Field Surveyor : 06 posts
Draftsman : 30 posts
Important Dates :

Date of Notification 14.06.2013 - 
Last date for submission of applications 15.07.2013 - 
Last date for payment of Fee through Bank or Post Office 17.07.2013 - 
Date of Written Examination 25.08.2013 10:00 A.M. to 1:00 P.M.
Required Qualification : 
Candidates should possess the following or its equivalent qualification : Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.

 TECHNICAL QUALIFICATION:

(a) FOR TYPIST:

Must have passed the Government Technical Examination in Typewriting:- 
(i) by Higher / Senior Grade in Tamil and English (or)
(ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
(iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.

(b) FOR STENO-TYPIST, GRADE III :

Must have passed the Government Technical Examination both in Typewriting and in 
Shorthand:- 

(i) by Higher / Senior Grade in Tamil and English (or)
 (ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)
(iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.
 Computer Qualification (for Typist and Steno-Typist, Grade III):-

Candidates should have passed the “Certificate Course in Computer on Office Automation” awarded by the Technical Education Department. 

Selection by a written test on 25/08/2013. 

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கல்லூரி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூன் 19 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

இத்தேதிகளில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். மஎஇ,இநஐத, ஒதஊ, சஉப, நகஉப தேர்ச்சி அல்லது பி.எச்.டி. பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பெற்றுச்செல்ல வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளின் படி ரூ. 250, ரூ. 500-க்கான செலுத்துச்சீட்டுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  

TNPSC Group IV advertisement

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ( TNPSC ) Advertisement June 2013

Vacancies :

3469 Junior assistant

1738 Typist

242 Steno Typist

View advertisement : http://bankexamrecruitment.blogspot.in/2013/06/tnpsc-group-iv-vacancies-3469-jr.html

Gk Updates like General knowledge

கல்லூரிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், நாளை, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை : அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்புத் துணைத்தேர்வு புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் 98 ஆயிரத்து 500 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்ட மாணவர்களுக்கு செங்கல்பட்டில் உள்ள செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு கௌடி மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

சென்னை தெற்கு கல்வி மாவட்ட மாணவர்கள் அந்த மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே (டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில்... மத்திய சென்னை கல்வி மாவட்ட மாணவர்கள் மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியிலும், கிழக்கு சென்னை கல்வி மாவட்ட மாணவர்களுக்கு ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், வட சென்னை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வேப்பேரியில் உள்ள பெனடிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்படுகின்றன. அதே நாளில் அந்தந்தப் பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

  சான்றிதழ் வழங்கப்படும் வியாழக்கிழமை முதல் 15 நாள்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதிக்கான பதிவு மூப்பே வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். இதன்மூலம், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Letter No. 28079 Dt: June 14, 2013 Issuance of certificate for tax deducted at source in Form 16/16A with the provisions of section 203 of the Income-tax Act 1961-regarding

Monday, June 17, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை?

் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம் பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ.

ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

கணிதம்–இயற்பியல் பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு) பி.எஸ்சி.

இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்)

தாவரவியல்–விலங்கியல் பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்) பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

வரலாறு பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்) மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Allogation of periods pri&upper primary

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன

. தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல் தாளுக்கு 6 ஆயிரம் விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்களும் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான விண்ணப்ப மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. திங்கள்கிழமை காலையில் மட்டும் பல இடங்களில் வரிசையில் நின்று தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

கடந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாலும், இரண்டு தாள்களுக்கும் ஒரே விண்ணப்பம் என்பதாலும் முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்பனையாகின. சில இடங்களில் விண்ணப்பங்களும் தீர்ந்துவிட்டன. இந்த ஆண்டு விண்ணப்ப விநியோக மையங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தாலும்,  முதல் நாளில் விற்பனை சற்றுக் குறைவாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், ஓரிரு நாள்களில் விண்ணப்ப விற்பனை அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டாலும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 5,600 விண்ணப்பங்கள் விற்பனை: சென்னை மாவட்டத்தில் முதல் தாளுக்கு 2,107 விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 3,517 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 1 வரை விநியோகம்: அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அன்று மாலையே கடைசி நாள் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

Sunday, June 16, 2013

Ele director&Minister arange all federation meeting on 20-6-13 at5.30pm


மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயதுஉயர்த்தப்படாது என அறிவிப்பு

ி:"மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை, 62 ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் தற்போதைய அரசில் இல்லை' என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான, நல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, மத்தியப் பணியாளர் நலத் துறை வசம் உள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட புகார்கள், பென்ஷன் தாரர்களின் கோரிக்கைள் ஆகியவற்றை இந்த துறை தான் கவனித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 60 ஆக உள்ளது.

இதை, 62 ஆக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தும்படி, பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாயின.இது குறித்து, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. இது பற்றி, எவ்வித குறிப்பும், பிரதமருக்கு அனுப்பப்படவில்லை; அப்படியொரு திட்டம் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை' என்றார்.மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்றால், பல்வேறு துறைகளிடும் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், நிதி அமைச்சகத்தின் ஆலோசனை இல்லாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுத்துவரும் நிலையில், இது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பங்கள் ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ஸீ50, தேர்வுக் கட்டணம் ஸீ500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ஸீ250 செலுத்தினால் போதும். பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது

. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.