இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 22, 2012

24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல

் :இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்' குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது.

கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது: மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களில் உள்ள மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும் டிச., 15க்குள் வெளியிடப்படும். அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக, ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை செயலர் ஸ்ரீதர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டி.இ.ஓ., காலியிடங்கள் 70 ஆக உயர்வு : பதவி உயர்வு அறிவிப்பு எப்போது -Dinamalar news

தமிழகத்தில் 70 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு தாமதமாவது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

அரசு திட்டங்களை செயல்படுத்துவது, கல்வி பணிகளை ஆய்வு செய்வது மற்றும் களப்பணிகள் ஆற்றுவது என, டி.இ.ஓ.,க்கள் பங்கு அதிகம். மாநிலத்தில் 70 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. 35 சி.இ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், டி.இ.ஓ., பணிமூப்பு பட்டியலும், பள்ளி கல்வி துறையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி கல்வி துறை இயக்குனராக தேவராஜ் பொறுப்பேற்றதும், காலி சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பியது, "ஆன்லைன்' கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு அலைச்சலை தவிர்த்தது போன்ற நடவடிக்கைகள் எடுத்தது, வரவேற்பை பெற்றது.

டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை அறிவிப்பதில் மட்டும் "தொய்வு' நீடிக்கிறது. பதவி உயர்வு மூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: டி.இ.ஓ.,க் கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் 25 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 40 சதவீதம், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 35 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்படும். தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.,) மற்றும் "கான்பிடன்ஷியல்' சான்று பரிசீலிக்கப்படும். தலைமையாசிரியர்கள் ரகசிய அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது.

தலைமையாசிரியர் ஒருவர் பணிக்காலத்தில் எத்தனை டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் பணியாற்றினாரோ அவர்களின் ரகசிய அறிக்கைகளையும் பெற்று, இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பல அதிகாரிகள் ஓய்வு மற்றும் காலமானதையடுத்து, அந்த அறிக்கைகள் பெறமுடியவில்லை. இதனால், பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஆகிறது. பணிமூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர், கடைசியாக அதிகாரியிடம் பணியாற்றியவரின் ரகசிய அறிக்கையை மட்டும் பெற்றால் போதும், என விதியை தளர்த்த வேண்டும், என்றார்.

அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்

  தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும். அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்.

Wednesday, November 21, 2012

இணைய வழியில் 6,500 பேர் பணி நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்@கற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும்.

இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Tuesday, November 20, 2012

பள்ளிகளில் ஆய்வு நடத்த வருகிறது "அன்னையர் குழு'

  "அனைத்து பள்ளிகளிலும், "அன்னையர் பள்ளி பார்வை குழு' ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்' என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அன்னையரை, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும். இந்த குழு, வாரம் ஒரு நாள், பள்ளி வேலை நாட்களில் ஆய்வு மேற்கொள்வர். வாரந்தோறும் இக்குழுவினர் மாறிக் கொண்டே இருப்பர். பள்ளியில் வகுப்பறை வசதி உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்வர்.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிப்பர். அன்னையர் கூறும் குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். இக்குழுவில், அனைத்து மாணவர்களின் அன்னையரும், இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்தது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவர்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

வரும், 2013ம் ஆண்டில், 24 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
விடுமுறை நாள் தேதி கிழமை

ஆங்கில புத்தாண்டு ஜன.1 செவ்வாய் பொங்கல் ஜன.14 திங்கள் திருவள்ளுவர் தினம் ஜன.15 செவ்வாய் உழவர் திருநாள் ஜன.16 புதன் மிலாது நபி ஜன.25 வெள்ளி குடியரசு தினம் ஜன.26 சனி புனித வெள்ளி மார்ச் 29 வெள்ளி ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) ஏப்.1 திங்கள் தெலுங்கு புத்தாண்டு ஏப்.11 வியாழன் தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14 ஞாயிறு மகாவீர் ஜெயந்தி ஏப்.24 புதன் மே தினம் மே 1 புதன் ரம்ஜான் ஆக.9 வெள்ளி சுதந்திர தினம் ஆக.15 வியாழன் கிருஷ்ண ஜெயந்தி ஆக.28 புதன் விநாயகர் சதுர்த்தி செப்.9 திங்கள் அரையாண்டு வங்கி கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) செப்.30 திங்கள் காந்தி ஜெயந்தி அக்.2 புதன் ஆயுதபூஜை அக்.13 ஞாயிறு விஜயதசமி அக்.14 திங்கள் பக்ரீத் அக்.16 புதன் தீபாவளி நவ.2 சனி மொகரம் நவ.14 வியாழன் கிறிஸ்துமஸ் டிச.25 புதன் மொத்தம், 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் விடுமுறை, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அரசு தெரிவித்துள்ளது.

Ignou B.ed hall ticket

TN Govt Public holidays G.O 981

Monday, November 19, 2012

டி.இ.ஓ.,க்கள் 7 பேருக்கு சி.இ.ஓ., "புரமோஷன்'

:மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஏழு பேர், முதன்மைக் கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் சபிதா பிறப்பித்த, பதவி உயர்வு உத்தரவு: பெயர் தற்போதைய

-1. தனபாலன் டி.இ.இ.ஓ., - திருவள்ளூர் துணை இயக்குனர், மாற்றுத் திறனாளிகள் நல துறை, சென்னை.

2. முருகன் டி.இ.ஓ., - சேரன்மாதேவி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - திண்டுக்கல

்3. சண்முகம் டி.இ.ஓ., - செய்யாறு கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - ராமநாதபுரம

்4. அருண்பிரசாத் டி.இ.ஓ., - ஈரோடு சி.இ.ஓ., - திருவண்ணாமலை

5. சாந்தமூர்த்தி டி.இ.ஓ., - உசிலம்பட்டி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., கரூர

்6. விஜயன் டி.இ.ஓ., - பழனி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - தூத்துக்குட

ி7. மகாலிங்கம் டி.இ.ஓ., - தருமபுரி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - வேலூர் திண்டுக்கல் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ், திண்டுக்கல் சி.இ.ஓ.,வாகவும், ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சிவகாமசுந்தரி, ராமநாதபுரம் சி.இ.ஓ.,வாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அரசாணை எண் 290 நபார்டு வங்கியின் கட்டமைப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 131 மேல்நிலைப்பள்ளியின் பட்டியல்

Saturday, November 17, 2012

குரூப்-1 போட்டி தேர்வு டிசம்பர் 30ல் நடக்கிறது

இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி வாகனங்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவம்பர் 19) பள்ளி வாகனங்கள் ஓடாது என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக பள்ளி வாகனங்களுக்கு 21 புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த 21 விதிமுறைகளில் 8 விதிமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை. எனவே இந்த 8 விதிமுறைகளை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறினார்.

பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: பள்ளி கல்வி இயக்குனர்

் பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். மாணவ - மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும்  தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ, மாணவியர்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, November 16, 2012

TNPSC Group I Notification.Last date 6.12.2012

ஜன., 10 ல் வாக்காளர் பட்டியல் : தேர்தல் ஆணையர் உத்தரவு

  இறுதி வாக்காளர் பட்டியலை, ஜன., 10 ல் வெளியிட, தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், அக்., 1 முதல் நவ., 20 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நவ., 10 வரை சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் தொகுப்பு, வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை இருப்பின், பட்டியல் பெற்ற ஏழு நாட்களுக்குள், அப்பகுதி தாசில்தார், ஆர்.டி.ஓ., விடம் புகார் தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 10 ல் வெளியிட உள்ளதாக, தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

National Integration Pledge

Thursday, November 15, 2012

அரசுபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு

அரசு பள்ளிகளில், 5,000 ஆய்வக உதவியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும், '81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி எழுந்தது

. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது: அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும். மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை

  "டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள், இன சுழற்சி வாரியாக, விவரமாக, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆனால், அக்., 14ல் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை, இன சுழற்சி வாரியாக, எந்த விவரங்களையும், டி.ஆர்.பி., வெளியிடவில்லை.

மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற, 19 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இன சுழற்சி வாரியான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். டி.இ.டி., தேர்வு வழியாக, தேர்வு செய்யப்பட உள்ள, 22 ஆயிரம் ஆசிரியர்களையும், இன சுழற்சி வாரியாக பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன், இன சுழற்சி பட்டியலை வெளியிட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிட்ட பின், இன சுழற்சி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவை தெரிவித்தன.

பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைப்பு!

   பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்  குறைக்கப்படுவதாகவும்,இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு  வருவதாகவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இந்த விலை குறைப்பை தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.1.20 ஆக குறைக்கப்படும்.கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 1.19  ம்,டெல்லியில் 95 காசுகளும் குறைக்கப்படும். அதே சமயம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ரூ. 1.25 குறைக்கப்படும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்திய  எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்,15 தினங்களுக்கு ஒருமுறை பெட்ரோல்  விலையை மாற்றியமைத்து வருகின்றன். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால்,இந்த  விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.  

Wednesday, November 14, 2012

வீட்டுக் கடன் பெற ஆண்டு வருவாய் உச்சவரம்பு அதிகரிப்பு

  பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள் ஆகியோருக்கு, வீட்டுக் கடன் பெறுவதற்கான, ஆண்டு வருவாய் உச்சவரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டில்லியில், "ஹட்கோ' சார்பில் நடைபெற்ற "பில்ட்டெக்' 2012 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் அஜய் மக்கான், கூறியதாவது:

""பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்களுக்கு, தற்போது, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடன் பெற, ஆண்டு வருவாய், 60 ஆயிரம் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு உள்ளது. இனி, இந்த உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அதுபோல், குறைந்த வருவாய் பெறுபவர்களுக்கு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்கள், "ராஜிவ் அவாஸ் யோஜனா' என்ற இத்திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெறலாம். இதன் மூலம், போலியான வருவாய் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, வங்கிகளில் கடன் பெறுவது தவிர்க்கப்படும்.

இத்திட்டம் மூலம், 20 லட்சம் பேர், பயன்பெறுவார்கள். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இப்புதிய உச்சவரம்புகள் குறித்து, வங்கிகள் மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக B.ed சேர்க்கை அறிவிப்பு

Tuesday, November 13, 2012

குழந்தைகள் - நாட்டின் மன்னர்கள் : -இன்று தேசிய குழந்தைகள் தினம-Dinamalar article

் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இவரது பிறந்த தினம் (நவ.,14), தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது இவர் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை "நேரு மாமா' என அழைத்தனர். இத்தினத்தில், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1889 நவ., 14ல் அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சரியான அடித்தளம்நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தை பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே உதவும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்து கொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

வட்ட, மாவட்ட தலைநகர்களில் ஆங்கில பயிற்சி மையங்கள்:ஒரு மாணவனுக்கு ரூ.2,800 ஒதுக்கீடு

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின், ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், வட்ட, மாவட்ட தலைநகரங்களில், ஆங்கில பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 10 மாதம் அளிக்கப்படும் பயிற்சிக்கு, ஒரு மாணவனுக்கு 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.83 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.

மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டான, 2012-13ல், இப்பயிற்சி துவங்குகிறது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள, 96 பிற்படுத்தப்படுத்தப் பட்டோர் நல விடுதிகள், 47 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 13 சீர்மரபினர் நல விடுதிகள், 5 சிறுபான்மையினர் நல விடுதி என, 161 கல்லூரி விடுதிகளின் மாணவர்கள், இதில் பயிற்சியை பெற உள்ளனர். ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.80 கோடி ரூபாய், மாநில அரசு சார்பில் செலவு செய்யப்பட உள்ளது.சென்னையில், 500 மாணவர்கள், திருச்சியில் 475, தஞ்சாவூரில் 475, காஞ்சிபுரத்தில் 250, திருவண்ணாமலையில் 150, திருவள்ளூரில் 100 மாணவர்கள் என, 32 மாவட்டங்களை சேர்ந்த, 6,550 மாணவர்கள், இந்தப் பயிற்சி மூலம், பயன் பெற உள்ளனர்.

10 மாதங்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, அடுத்த மாதம் துவங்குகிறது. ஒரு மணி நேரம் அளிக்கப்படும், இப்பயிற்சியில், பணிசார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, நடைமுறையில் பயன்படுத்தும் அடிப்படை சொற்கள், வாக்கியங்களை புரிந்து கொள்ளுதல், தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை விவரித்தல் மற்றும் பேச்சு, இலக்கணம், உச்சரிப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பயிற்சி மையங்கள்:இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களின் உயர் கல்விக்கும், படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள், வேலையில் சேர எதிர் கொள்ள கூடிய தகுதி தேர்வு, குழு உரையாடல் மற்றும் நேர்காணல் உள்ளிட்டவைகளை, எளிதில் சமாளித்து வெற்றி பெறுவதற்கும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.முதல் கட்டமாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பயன் பெற்றவுடன், அடுத்த கட்டமாக, வட்ட, மாவட்ட தலைநகர்களில் பயிற்சி மையங்களை அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.