இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 11, 2015

Regular b.ed counsling dates

பி.எட் கலந்தாய்வு செப் 28ல் தொடங்குகிறது

16ம் தேதி முதல் அழைப்புக்கடிதம் அனுப்பப்படும்

அட்டவணை

செப்.28-உடல் ஊனமுற்றோர்,முன்னாள் ராணுவத்தினர்

செப்29,-கணிதம்

செப்30-இயற்பியல்,வேதியியல்

அக் 1-தாவரவியல்,விலங்கியல்

அக் 3-தமிழ்,ஆங்கிலம்,கணினி அறிவியல்

அக் 5- வரலாறு,புவியியல்,வணிகவியல்,
பொருளாதாரம்,மனையியல்

கலந்தாய்வு மொத்த இடம் -1777

ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்

Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு செய்யப்பட்டு அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.

ஆனால் மாவட்ட மாறுதல் ஆணை பெற்ற ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டாததால் இடமாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்க முடியாத சூழல் நிலவுகிறது.சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தூர மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியேற்கும் வகையில் உடனடியாக பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டுமாய் பணிவுடன் மாவட்ட மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கேட்டுக்கொள்கிறோம்
Grievance Category SERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYME Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - ELE.EDN DIR
Reply அரசு விதிகளின்படி ஈராசிரியர் பள்ளிகளின் பதிலி ஆசிரியர் பணி ஏற்கும் வரை பணிவிடுப்பு செய்ய இயலாது என தெரிவிக்கலாகிறது. இவ்வலுவலக ந.க.எண்.185/அ6/2015 நாள்.11.09.2015

கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி


கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த 2011-12 கல்வியாண்டில் தமிழகத்தில் 3,769 மெட்ரிக். பள்ளிகள் இருந்தன. இவற்றில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 2014-15 ஆண்டு நிலவரப்படி, 36 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் படிக்கின்றனர். இதில், 2014-15 கல்வியாண்டில் மட்டும் 156 புதிய மெட்ரிக். பள்ளிகளுக்கும், 195 மெட்ரிக். பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு தாற்காலிக அங்கீகாரமும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. நிகழ் கல்வியாண்டில் (2015-16) அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை டிசம்பரில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி கடன் வட்டி சலுகை: இறுதி நாள் எதுவரை?


கல்வி கடன் வட்டி சலுகையை, 2014 - 15ல், கடன் பெற்றவர்கள் செப்., 15ம் தேதிக்குள்ளும்; 2009 - 2014 வரை கடன் பெற்றவர்கள், அக்., 10ம் தேதிக்குள்ளும் பெற வேண்டும்.'இந்த இறுதி வாய்ப்பை தவறவிட்டால், வட்டிச் சலுகையை பெற முடியாது' என, இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கை: வங்கிகள் அளிக்கும் கல்வி கடனுக்கு, வட்டிச் சலுகை அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த காலங்களில், வட்டிச் சலுகை பெறுவதில் பெரும் குழப்பம் நிலவியது. பல மாணவர்களுக்கு முழுமையாக வட்டிச் சலுகை கிடைக்கவில்லை.

'அரசு அறிவித்த வட்டிச் சலுகையை மாணவர்களுக்கு முழுமையாக அளிக்க வேண்டும்' என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையேற்று, '2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரையில், கல்வி கடன் பெற்றோருக்கு, வட்டிச் சலுகை அளிக்க வேண்டும்' என, இந்தியன் வங்கிகள் சங்கத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.இந்த கோரிக்கையை ஏற்று, வட்டிச் சலுகை அளிப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த மாதம், 26ம் தேதி, இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு அனுப்பியது. இதில், முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு, வட்டிச் சலுகை விவரங்களை, பிற வங்கிகள் அளிக்க வேண்டும். இவற்றைத் தொகுத்து, மத்திய அரசுக்கு கனரா வங்கி அளிக்கும். இதன்பின், வங்கிகள் அளித்த வட்டிச் சலுகையை, மத்திய அரசு, வங்கிகளுக்கு திருப்பி அளிக்கும். வட்டிச் சலுகையை தொகுத்து, கனரா வங்கிக்கு அளிக்க வேண்டிய இறுதி நாளையும், வங்கிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்வி கடன் பெற்றவர்களுக்கான, வட்டிச் சலுகை விவரங்களை, அக்., 10ம் தேதிக்குள்ளும்; 2014 - 15ல் கடன் பெற்றவர்களுக்கான வட்டிச் சலுகை விவரங்களை வரும், 15ம் தேதிக்குள்ளும், கனரா வங்கிக்கு வங்கிகள் அளிக்க வேண்டும். மாணவர்கள் வட்டிச் சலுகை பெற, இது தான் கடைசி நாள். இதுகுறித்து, கல்வி ஆலோசனை குழு அமைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:'வட்டி சலுகை அளிப்பதற்கான இந்தியன் வங்கிகள் சங்கத்தின் சுற்றறிக்கை பல வங்கி கிளைகளுக்கு செல்லவில்லை' என, புகார் எழுந்தது. தொடர் வற்புறுத்தலுக்கு பின், அந்த சுற்றறிக்கை வங்கி கிளைகளுக்கு சென்று விட்டதாக, சில வங்கி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. உரிமை உண்டு: கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தங்களின் கணக்கு விவரங்கள் கனரா வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை, வங்கி கிளைகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். வட்டி சலுகை பெற, விண்ணப்பங்களையும் அளிக்கலாம்.

இதற்கான உரிமை, மாணவர்களுக்கு உண்டு. தகவல் தெரிவிக்க மறுக்கும் வங்கி கிளைகள் குறித்து, சம்பந்தப்பட்ட வங்கித் தலைவர் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கு புகார் செய்யலாம். தொழிற்கல்வி படிப்புக்கு...: கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தொழிற்கல்வி படிப்புகளுக்கு, கடன் பெற்றிருக்க வேண்டும்; இந்திய வங்கிகள் சங்க கல்வி கடன் திட்டத்தின் கீழ், இந்தியாவில் படிக்க கடன் வாங்கியிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், 4.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

25 வயதுக்கு பின் வாக்காளராககேள்விக்கு பதில் சொல்லணும்!


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால், 'இதற்கு முன் ஏன் விண்ணப்பிக்கவில்லை' என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2016 ஜன., ௧ம் தேதி, 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிக்கும், 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர, மற்றவர்கள் அவர்களின் முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தாலும் கூட, இப்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவு; முன்னர் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க இயலாத காரணம் அல்லது இப்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம் ஆறில், பாகம் நான்கை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். இதுகுறித்து, தேர்தல் அதிகாரி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், பதிவாகி உள்ள பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் வாக்காளர்கள், முகவரி மாறி செல்லும்போது, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்காமல், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.

இதனால், இரண்டு இடங்களில், அவர்களின் பெயர் பதிவாகிறது. இதை தவிர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம், 'ஏன் இதுவரை பெயர் சேர்க்க வில்லை' என, விளக்கம் கேட்கப்படுகிறது. ஏற்கனவே வேறு முகவரியில் பெயர் இருந்தால், படிவம் நான்கை பூர்த்தி செய்து தரும்போது, தானாக வேறு இடத்தில் உள்ள, அவர்களின் பெயர் நீக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருங்கால வைப்பு நிதி புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம்


தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, மாதம்தோறும் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறும்.

அன்றைய தினம் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்தின்படி, இம்மாதத்துக்கான குறைதீர்வு முகாம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

Click below

http://218.248.44.123/auto_cps/public/

விவேகானந்தரின் அமெரிக்க சொற்பொழிவு

செப் 11( 1893): சிகாகோவில் விவேகானந்தர் நிகழ்த்திய எழுச்சியூட்டும் உரை

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார் என்றும் வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.



* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள்.

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.



* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள்,ஆனால் கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள்

Thursday, September 10, 2015

வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளிக்க மாவட்டத்துக்கு 4 பேர் பரிந்துரை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களில் 400 பேருக்கு மட்டும் தலைமைப் பண்பு பயிற்சி சென்னையில் அளிக்கப்பட உள்ளது. இதை அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன. இந்தப் பயிற்சியை வழங்க மாவட்டத்துக்கு 4 பேர் வீதம் மாநில கருத்தாளர்களாக தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களை அவர்களின் தகுதி, திறமை, பணியில் அனுபவம், புதுமையான முயற்சிகளில் ஈடுபாடு ஆகிய தர அளவீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுத்து, செப்டம்பர் 10-க்குள் அனுப்பிட, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மாவட்டத்துக்கு 4 பேர் வீதம், பயிற்சி வழங்கும் மாநில கருத்தாளர்களாகப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல் வியாழக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Ignou B.ed hall ticket 2016

Click below

https://studentservices.ignou.ac.in/Hall_BEDMED/2015/BEDEntrance15.asp

மாணவர்களை பள்ளி வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்பதற்கான செயல்முறைகள்

Wednesday, September 09, 2015

பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகிறது

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு : பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது; ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.  கிராமப்புறங்களில் இந்த உத்தரவு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்ற அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், கடந்த ஜூன் 8ஆம் தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு ஜூன் 18ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது சமூக ஆர்வலர் நிம்மு வசந்த் ஆஜராகி, பெண்கள் மற்றும் குழந்தைகள், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் பறிமுதல் செய்யும் உத்தரவை திரும்பபெற வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார். நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

* சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனை மாற்றும் விதமான உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்க முடியாது. சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடும் போது கோர்ட்டை மனுதரார் குறைகூற முடியாது.

* அரசியல் அமைப்பில் குடிமக்களை காப்பாற்றும் கடமை ஒரு அரசின் கடமை. அதனை மனுதரார் மறந்து விட்டார். கட்டாய ஹெல்மட் அணிந்து செல்வதால் விபத்து குறைய வில்லை என்பதை ஏற்க முடியவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் மனுதராரிடம் இல்லை.

* பெண்கள், குழந்தைகள் கட்டயாம் ெஹல்மட் அணிய வேண்டும். இதை மாற்ற முடியாது.

* புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கிராமங்களில் முறையாக ஹெல்மட் விதிகளை அமல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் அமல்படுத்தாக மாவட்ட எஸ்.பி.க்கள் நேரில் ஆஜராக நேரிடும்.

* இந்தச் சட்டம் மாநிலம் முழுதும் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

‘உங்கள் மனுவும் தள்ளுபடி ஆகியிருக்கும்’

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் ஆஜராகி, ‘எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, ‘நீங்கள் மனுத்தாக்கல் செய்யாமல் ஆஜராகி வாதிட்டீர்கள், அதனால் உங்களுக்கு உத்தரவு ஏதும் இல்லை; மனுத்தாக்கல் செய்திருந்தாலும் தள்ளுபடிதான் ஆகியிருக்கும்’ என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் ெஹல்மட் கட்டாயம் என்ற உத்தரவு எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ததால் தற்போது நான் பிறப்பித்த உத்தரவு நீடிக்கிறது என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

மூத்த பெண்மணி என்பதால் அபராதம் விதிக்கவில்லை

‘அரசின் நடவடிக்கைக்கு பிறகு  விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ள நிலையில் இவ்வாறு வழக்கு  தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோர்ட்டின் நேரத்தை மனுதரார்  வீண்டித்துள்ளார். அதிகப்படியான அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய  உகந்த வழக்காக இருந்தாலும், வழக்குத் தொடர்ந்தவர் மூத்த பெண்மணி மட்டுமல்ல,  சமூக ஆர்வலர் என்பதாலும் அபராதமில்லாமல் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றும் நீதிபதி தெரிவித்தார்.