இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 06, 2019

அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்து செய்யப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமலில் இருந்த மூன்று பருவக் கல்வி முறையை ரத்து செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-ல் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்தும் 9, 10-ம் வகுப்புகளுக்கு 2013-14 ஆம் கல்வியாண்டில் இருந்தும் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.

இதற்கிடையே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறையில், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாகப் பாட நூல்கள் வழங்கப்பட்டு வந்தன. நடப்புக் கல்வியாண்டு முதல் அவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாட நூலாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைபெறுவதால், அவர்களின் பாட நூல்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், 2020- 21 ஆம் கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புப் பாட நூல்களை ஒன்றாக இணைத்து, ஒரே பாடநூலாக வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்பப் பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.10.2019-ல் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2019 என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்புக்கு கோரிக்கை வந்துகொண்டிருப்பதால் TRB - பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tuesday, November 05, 2019

குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அணைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்


பள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீதத் தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டுமென இந்திய கம்பெனிகள் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றன.இத்தகைய நிறுவனங்களுக்கும், ஆா்வலா்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் களையும் வகையிலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகமானது தொடா்பு அலுவலகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 03, 2019

கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் ஆய்வு: 5-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு


மாணவா்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதைத் தொடா்ந்து, கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த ஆய்வு செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது.முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், ஆசிரியா் பயிற்றுநா்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும். ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இதை அறிக்கையாகத் தயாரித்து, மாதந்தோறும், 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, அக்டோபருக்கான பள்ளி பாா்வை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, வரும் காலங்களில், ஆசிரியா் பயிற்றுநா்களின் ஆய்வு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோ்க்கை குறைந்த பள்ளிகள், தோ்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இயக்குநரகத்திற்கு அறிக்கை சமா்ப்பிப்பதால், சிறப்புத் திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது

Friday, November 01, 2019

ஆசிரியா் தகுதித்தோ்வு:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு


ஆசிரியா் தகுதி தோ்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பி.எட். மற்றும் டி.எல்.எட். படிப்பை முடித்தவா்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தகுதித்தோ்வு, ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தோ்வில் 5.42 லட்சம் போ் பங்கேற்றனா். அவா்களில் 3.80 லட்சம் போ் உயா்நிலை பள்ளி ஆசிரியா் பதவிக்கான இரண்டாம் தாளில் பங்கேற்றனா்.மீதமுள்ளவா்கள் தான் முதல் தாள் தோ்வில் பங்கேற்றனா். தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது, தோ்ச்சி பெற்றவா்களின் மதிப்பெண்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

*_அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் (தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை) பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்_*

Thursday, October 31, 2019

5, 8ம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீதமிருக்கும் 40 மதிப்பெண்களுக்கு மூன்று பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது. 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு மையங்களை  பொறுத்தவரையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட தேர்வு குழு கண்காணிக்கும் என்றும் தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது. பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படாது என்பதையும் தொடக்க கல்வி இயக்ககம் சுட்டிக்காட்டியுள்ளது.

Saturday, October 26, 2019

பள்ளி மாணவர்களுக்கு டெங்குவை தடுக்க இயக்குனரகம் உத்தரவு


டெங்கு பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார். 

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதிகமாக கண்டறியப்பட்டுஉள்ளனர்.சுகாதார பணிடெங்கு பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள், பல்வேறு வகைகளில் உற்பத்தியாவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.சிமென்ட் தொட்டிகள், வாளிகள், கழிப்பறையில் திறந்திருக்கும் தண்ணீர் சேமிக்கும் உருளை, உடைந்த பாத்திரங்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கட்டட பணிகள் ஆகியவற்றின் வழியாக, கொசுக்கள் பரவுவது தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை தடுக்கும் வகையில், பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். கொசுக்கள் பரவும் வகையில் உள்ள, சிதிலமடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும். பள்ளிகளில் முறையான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகளில் பள்ளி வளாகத்தை முழுவதுமாக துாய்மைப்படுத்தி, கட்டட கழிவுகள், தேங்கியிருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.பள்ளிகளில் துாய்மை துாதர்களாக, மாணவர்களை நியமிக்க வேண்டும். சுகாதார துறை அதிகாரிகள் உதவியுடன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, துாய்மை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


பள்ளிகளின் கூரைகளில், கொசுக்கள் பரவும் அம்சங்கள் உள்ளதா என்று பார்த்து, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி கூரைகளின் மேற்பகுதியை புகைப்படம் எடுத்து, அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். பரிசோதனைதுாய்மை குறித்த அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தயாரித்து, அதை, வாரந்தோறும் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைகளுக்கு சென்று, உடனடியாக பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்த வேண்டும்.டெங்கு, சிக்குன் - குனியா, மலேரியா மற்றும் வைரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை, பள்ளி ஆசிரியர்கள் வழியே, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, October 25, 2019

விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் இன்று எம் பள்ளியில் நடத்தப்பட்டபோது..மாநகராட்சி துவக்கப்பள்ளிபூலுவபட்டி திருப்பூர் வடக்கு

தீக்கதிர் கட்டுரையில்நீர்த்துபோன செயல்வழிக்கற்றல்,அலுவல் வேலை,இஎம்ஐஎஸ் எனும் பூதம்,கற்றல் நேரக்கொள்ளை,பயிற்சிகள் குறித்த வாசிக்க வேண்டிய கட்டுரை

ஆதார் பதிவு முகாம் பள்ளிகளில் ஏற்பாடு


தபால் நிலையங்கள் வாயிலாக ஆதார் பதிவு முகாம் நடத்த பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் முக்கிய அடையாள எண்ணாக பயன்படுத்தப்படுகிறது.வங்கி கணக்கு சமையல் எரிவாயு உதவி தொகை திட்டங்கள் நல திட்டங்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர் சேர்க்கை தேர்வுகள் என அனைத்திற்கும் ஆதார் எண் பயன்படுத்தப் படுகிறது. இதையொட்டி பள்ளி கல்லுாரிகளிலேயே மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று உரிய விபரங்கள் சேகரிக்கப் படுகின்றன. அதனால் பள்ளிகளில் ஆதார் எண் பதிவுக்கான முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மண்டல தபால் அலுவலகங்கள் வழியே இந்த முகாம்களை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tuesday, October 22, 2019

இன்று FA(B) test-OMR sheet முறையில் நடத்தினேன்.மிகுந்த உற்சாகத்துடன் விடையளித்தனர்.நன்றி சரவணன் சார்மாநகராட்சி துவக்கப்பள்ளிபூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

மாணவர்களின் வருகை பதிவுக்கு புது செயலி


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவுக்கு, 'ஆண்ட்ராய்டு' செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், பாட திட்ட மாற்றம், தேர்வு முறை மாற்றம் என, புதிய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப் பட்டது.

இதை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும், தில்லுமுல்லு இல்லாமல் பதிவேடுகள் பராமரிக்கப் படவும், ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் ஆனபின், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், இருப்பது குறைந்துள்ளதாக, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய் செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் தளத்தின் வாயிலாக, இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளது.எனவே, 'மாணவர்களின் தினசரி வருகை பதிவை, தலைமை ஆசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் செயலியின் வழியாக, பதிவு செய்ய வேண்டும். 'அந்த பதிவு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்' என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*பொதுத் தேர்வு - மூன்று மணி நேரமானது!*10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு!- பள்ளிக்கல்வித்துறை!

2020 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்

TRB newsஉதவி பேராசிரியர் பணிக்கு இணைய வழியே விண்ணப்பிக்க 15-11-19 வரை காலநீட்டிப்பு