இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 07, 2017

கைது

7இலட்சம் பேர் கைது

ஜாக்டோ-ஜியோ அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 7 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது தொடர்பாக ஜாக்டோ-ஜியோவில் நிலவிய கருத்து மோதல் காரணமாக கணேசன், இளங்கோவன் தலைமையில் ஒரு அணியும், சுப்பிரமணி, மாயவன் தலைமையில் ஒரு அணியாகவும் ஜாக்டோ-ஜியோ பிரிந்தன. இந்நிலையில், சுப்பிரமணி, மாயவன் தலைமையிலான அணியினர் நேற்று தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் இந்த அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜெஎஸ்ஆர்க), இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (சிஏ), தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம், சமூக நல அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம், நிர்வாக அலுவலர்கள் சங்கம் என 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 8 ஆண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது என்பதால் அவர்கள் புதிய ஓய்வு ஊதிய  திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் கணேசன் அணியில் உள்ளவர்களும் சங்கத்தின் விதிகளை மீறி நேற்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. அதனால் அந்த வகை பள்ளிகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் 55 சதவீதம் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. அதனால் அந்த வகை பள்ளிகள் பாதிக்கப்பட்டன.

தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டன.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழி்யர்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இன்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. நாளை தமிழகம் முழுவதும் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நன்றி :தமிழ்முரசு

உதவித்தொகை குறைப்பு

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு!

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு!
பொறியியல், மருத்துவம், சட்டம் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிவந்த உதவித்தொகை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு இதுவரை ஆண்டு ஒன்றுக்கு 12.5 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுவந்தது. இந்த ஆண்டு முதல் ஆண்டு ஒன்றுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்படும். பொறியியல் படிப்புக்கான உதவித்தொகையும் 85,000-லிருந்து 70,000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசின் இந்த உத்தரவு எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில், 1,279 கோடி ரூபாய் அரசின் கல்வி உதவித்தொகை கொடுக்க வேண்டும். அதில் பாதியளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து கோரிய முழு அளவு நிதி வழங்கப்படவில்லை. பல மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாததால், படிப்பைப் பாதியிலேயே விட்டு விடுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரசு இதேபோன்ற உத்தரவை வெளியிட்டது. ஆனால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது ரத்துசெய்யப்பட்டது.

நிதி நெருக்கடி காரணமாகக் கல்லூரி அளவில் வழங்கப்படும் உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.1,546 கோடியை வழங்கவில்லை. அதனால் மாநில அரசே தனது நிதியை பயன்படுத்தி கல்வி உதவித்தொகையை வழங்கிவருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 06, 2017

பொதுச்செயலாளர் பேட்டி



கோரிக்கை நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்..

JACTTO-GEO உயர்மட்டக் குழு உறுப்பினர்,TNPTF பொதுச்செயலாளர் தோழர்.பாலச்சந்தர் பேட்டி..

தற்போது

Tuesday, September 05, 2017

இன்றைய தி இந்து மாயாபஜார் பகுதியில் எம் பள்ளி மாணவர்களின் இரு படைப்புகள் வந்துள்ளன நன்றி:தி இந்து


3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது:- தமிழகத்தை கல்வி கற்போரின் புகலிடமாகவும், கல்வியென்றாலே தமிழகம்தான் என்று புகழும் இடமாக மாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பயின்ற 26 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவுள்ளது. தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார் செய்யும் வகையில் 2017-18-ம் ஆண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது மாணவர், பெற்றோரிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி அவர்களின் மனச்சுமையை குறைத்திருக்கிறது. பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித்தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்


தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதி முறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.

ஹெல்மட் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச்செல் பவர்களிடமும் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். இதுபோன்ற குற்றங் களை செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். 6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.

இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும். பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு


தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வளத் துறை சார்பில், ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி முடிக்கும் வரை, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப் பங்களை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள், ஆன் -- லைனில் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு மூலம், தேர்வுத்துறை இணையதளத்தில், தேசிய திறனாய்வு தேர்வு, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

செப்டம்பர், 13 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் விபரங்களை, பள்ளி ஆவணங்களோடு ஒப்பிட்டு, பிழையின்றி பதிவு செய்வது அவசியம். மாணவர்களின் முகவரி மற்றும் பெற்றோரின், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிடுவது அவசியம். ஒரு மாணவருக்கு, 50 ரூபாய் வீதம் தேர்வுக்கட்டணம் வசூலித்து, செப்டம்பர், 18க்குள், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வு, தமிழகம் முழுவதும் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Saturday, September 02, 2017

412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்


போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தயக்கமின்றி எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பயிற்சி மையங்கள் மூலம் எந்தவிதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை சார்பில், தற்போதுள்ள பாடத் திட்டங்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு இணையாக மாற்றியமைக்கப்பட உள்ளன. அப்படி மாற்றும்போது தமிழகத்தின் தொன்மை, கலாசாரம் போன்றவற்றில் மாற்றம் இருக்காது.

2017 தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்

2017ஆம் ஆண்டின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்குத்
தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர்-5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 374 ஆசிரியர்களுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கவுள்ளார்.

நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:

1.ஏ.எடித் தேவ தயாநிதி - சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

2.சி.வாசுதேவராஜூ - பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி, அத்திமஞ்சேரி, திருவள்ளூர்.

3.டி.திருமலைவாசன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவந்தண்டலம், காஞ்சிபுரம்.

4.பி.என்.அன்பழகன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செம்பூர், திருவண்ணாமலை.

5. டி.ராமசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பண்ணல், நாகப்பட்டினம்.

6. ஜெ.மேரி வினோதினி - எம்.டி. கிரேன் நடுநிலைப்பள்ளி, நேரு தெரு, விழுப்புரம்.

7.எஸ்.தங்கசாமி - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பொன்பரப்பி, அரியலூர்.

8.எம்.ஜான் பீட்டர் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, சாணார்ப்பட்டி, திண்டுக்கல்.

9.எஸ்.வெங்கடாசலம் - பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, செந்தாரப்பட்டி, சேலம்.

10.பி.வாசுகி - சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, பெரியவெண்மணி, பெரம்பலூர்.

11.ஆர்.தாமோதரன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, செங்கமலநாச்சியார் புரம், சிவகாசி.

12.கே.நரசிம்மன் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கெட்டுப்பட்டி, தர்மபுரி.

13.எஸ்.சுமதி - மெய்ப்பொருள் ஆரம்பப்பள்ளி, துர்காலயா சாலை, திருவாரூர்.

14.ஜி.விஜயராணி சுகிர்தாபாய் - பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, பட்டர்புரம், திருநெல்வேலி.

15.ஏ.வாசுகி - பி.யு.பி. பள்ளி, சலங்கபாளையம், ஈரோடு.

16.டி.பாஸ்கரன் - சி.எஸ்.ஐ. போர்டிங் நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.

17.ஜி.ஜெ.மனோகர் - சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

18.ஆர்.சிவகுமார் - அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பட்டி, புதுக்கோட்டை.

19.பி.ஜெயச்சந்திரன் - அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தல்லாக்குளம், மதுரை.

20.டி.சிவக்குமார் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எடையன்காட்டுவலசு, ஈரோடு.

21.ஆர்.பத்மநாபன் - ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வைரிசெட்டிப்பாளையம், திருச்சி.

22. ஏ.மோகனன் - அரசு மேல்நிலைப் பள்ளி, அருமனை, கன்னியாகுமரி.

Friday, September 01, 2017

ஓவியப்போட்டி


மக்கள்தொகைக் கல்வித் திட்டம்: 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை போஸ்டர் வடிவமைப்பு போட்டி


மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்பு தயாரித்தல் போட்டி திங்கள்கிழமை (செப்.4) நடைபெறவுள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொறி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுதில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் நீங்கலாக) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டியினை மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி அளவில் இந்தப் போட்டி திங்கள்கிழமை (செப்.4) நடத்தப்பட வேண்டும்; 'உலக வெப்பமயமாதல்', 'என் பூமித்தாயை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்',' திட்டமிட்ட நகர மயமாதலின் அவசியம்', 'வாழ்க்கை விலை மதிப்பில்லாதது அதனைப் போற்று', 'முறையான சரிவிகித உணவூட்டம்: ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது', 'இளம் வயது திருமணம் இயல்பான வளர்ச்சிக்குத் தடை' போன்ற பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான சார்ட் தாள், கலர் பென்சில்கள், கிரையான்கள் போன்றவற்றை தாங்களே கொண்டு வருதல் வேண்டும். பள்ளிகளில் போஸ்டரை தயாரிக்க மாணவர்களுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.

பரிசு எவ்வளவு? மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.700, ரூ.500, ரூ.300 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவை தேசிய அளவில் தெரிவு செய்யப்படுவதற்காக புதுதில்லியில் உள்ள என்சிஇஆர்டி-க்கு அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.700, ரூ.500 வழங்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை


புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்டக் குழுவும், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஜூலை, 20ல் கருத்தரங்கம் நடத்தி பணியை துவங்கியது. சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை வல்லுனர்களிடம், ஆலோசனைகள் பெறப்பட்டன. இதை தொடர்ந்து, ஆக., 21 முதல், பாட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது.

கலைத்திட்ட குழுவின் பேராசிரியர்கள் கூடி, பொதுமக்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் அடிப்படையில், பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. வரும், 8ம் தேதிக்குள் சரிபார்ப்பு பணி முடிந்து, அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கணினிகளுக்கு பாதுகாப்பு

புளூ வேல்' இணையதள விளையாட்டின் மிரட்டலை தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில் கணினிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' இணையதள விளையாட்டை மாணவர்கள் விளையாடாமல் தடுக்க, பள்ளிகளில் கணினிகளை பாதுகாப்பாக இயக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்புகள், ஐ.சி.டி., என்ற கணினி வழி கல்வி மையங்கள் போன்றவற்றில், கணினிகளில், ஆன் - லைன் விளையாட்டுகளை, தொழில்நுட்ப ரீதியாக தடுக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு போன்ற விபரங்களை சேகரிக்கும், அலுவலக கணினிகளில், ஆன் - லைன் விளையாட்டுகள் இல்லாமல், பாதுகாப்பாக பயன்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாணவர்களுக்கான விழிப்புணர்பு போட்டி swatch bharat

ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 4-9-17