இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 22, 2017

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்


தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறைப்படி நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அல்லது நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக அரசுக்கு 10 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும், என கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அரசு செயலர் உதயசந்திரன் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

Wednesday, June 21, 2017

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3ம் தேதி பொது மாறுதல் கவுன்சலிங்


ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை 3, 4ம் தேதிகளில் பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு ஜூலை 3ம் தேதி ஆன்லைன் மூலம் மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது.

அதேபோல பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் ஜூலை 4ம் தேதி நடக்கும். பொது மாறுதல் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்கும்.

பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்


பிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்குரிய கேள்வித்தாளை வடிவமைக்க புதிய குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக இந்த குழு நேற்று டிபிஐ வளாகத்தில் கூடி கேள்வித்தாள் பற்றி ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழுவின் தலைவர் தேவராஜன் கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த வகுப்பு மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் கேள்வித்தாள் இருக்கும். பாடங்களை முழுமையாக படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும். சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இடம் பெறும். மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் தயாராகிவிடும். பின்னர் அவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதேபோலவே மற்ற பொதுத்தேர்வுக்கும் கேள்வித்தாள் வடிவமைக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. வல்லுநர்களுடன் ஆய்வு செய்து விரைவில் கேள்வித்தாள் வெளியாகும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்

டி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


தொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக் கல்வி பட்டயப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு மே 31ம் தேதி முதல் ஜூன் 21ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்ற வகையில் www.tnscert.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் அவகாசம் வழங்கும் வகையில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பி.எட்., விண்ணப்பம் வினியோகம்


தமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான, அரசின் ஒற்றைச்சாளர கவுன்சிலிங், சென்னை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக, பேராசிரியர் கலை செல்வனை, உறுப்பினர் செயலராக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி சார்பில், பி.எட்., விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகளிலும், திண்டுக்கல் லட்சுமி கல்லுாரி; சேலம் சாரதா கல்லுாரி; மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லுாரி; துாத்துக்குடி வி.ஓ.சி., கல்லுாரி; பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் மற்றும் திருவட்டாறு எஸ்.வி.கே.எஸ்.டி., கல்லுாரியில் விண்ணப்பங்களை பெறலாம். நேற்று மட்டும், ௧,௮௮௮ பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்

2017-18 நடுநிலைப்பள்ளிக்கான செயல்பாடுகள்

SIMPLE ENGLISH




Tuesday, June 20, 2017

2,536 ஆசிரியர்கள் நியமனம்


பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,536 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை வரும் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக நியமனம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மாதம் ரூ.7500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Monday, June 19, 2017

முதல்வர் அறிவிப்பு

ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியில் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) ஏற்படுத்தப்படும்.  இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும்.
* ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ரூ.60 கோடி செலவில்  3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்படுத்தப்படும்.
* பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.  இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடி செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
* ரூ.39.1 கோடி செலவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை


தமிழகத்தில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினித் திறன்களை அடைவது அவசியம். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் அளிக்கப்படும். இதற்கென அரசுக்கு ரூ.437.78 கோடி செலவு ஏற்படும்.

இயக்ககத்துக்கு புதிய கட்டடம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களைப் பயிற்றுவிக்கும் வகையில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவிடப்படும். பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்தது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் என்ற பெயரில் அழைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.39 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்

பிளஸ் 1 பொதுத்தேர்வு குழு அமைப்பு


பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி மாணவர்களால், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை. மற்ற மாநில மாணவர்களை விட, தமிழக மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில், மேல்நிலை பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 பாடங்களை சரியாக படிப்பதில்லை என, தெரிய வந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வை எப்படி நடத்துவது; அதற்கான விதிகள் என்ன; எந்த பாடங்களில், எத்தனை கேள்விகள் இடம் பெற வேண்டும்; எந்தெந்த பாடங்களில், எத்தனை மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம் பெற வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட உள்ளன.

இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளியை, ஒருங்கிணைப்பாளராக்கி, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அரசு தேர்வுத்துறையின் முன்னாள் இயக்குனர், தேவராஜன் தலைமையில், தேர்வுத்துறை மேல்நிலை இணை இயக்குனர், சேதுராமவர்மா; ஓய்வு பெற்ற இணை இயக்குனர், ராமராஜ்; துணை இயக்குனர்கள், வாசு, பூபதி மற்றும் ஷமீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு துணை இயக்குனர்களின் கீழும், ஆறு பாடங்களிலும், திறமையான வினாத்தாள் தயாரிப்பில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் அடங்கிய துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வல்லுனர் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. முதல் கட்டமாக, பொதுத்தேர்வு மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து, ஆலோசனை நடந்தது. இன்றும், நாளையும் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. மூன்று நாட்களில், விதிமுறைகள் இறுதி செய்யப்பட உள்ளது. பின், துணை குழுக்கள் மூலம், மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவை, எஸ்.சி.இ.ஆர்.டி., மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது

இன்ஜி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!


இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்திய தொழிற்நுட்பக் கல்வி கவுன்சில், தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' எனும், தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே போல், இன்ஜி., படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கோவையில், நேற்று, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவப் படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வு நடப்பது போல, இன்ஜி., படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இது, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள கவுன்சிலிங் விதிகளுக்கு, சிக்கல் ஏற்படாத வண்ணம், இட ஒதுக்கீட்டை பின்பற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். நுழைவுத் தேர்வு எழுதுவதன் மூலம், தமிழக மாணவர்களுக்கு, வேறு மாநிலங்களில் உள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள், 30 சதவீதத்துக்கும் கீழ், மாணவர் சேர்க்கை நடத்திய, இன்ஜி., கல்லுாரிகள், அடுத்த கல்வியாண்டில், மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாருக்குள்ளாகும் கல்லுாரிகள் மட்டுமல்லாமல், 'ரேண்டம்' முறையில், ஐந்து சதவீத கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பாண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பருவத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கும் முறையிலும், மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளையும் முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெறும். இதன் மூலம், பாடத்திட்டம் சார்ந்த புரிதல், மாணவர்களுக்கு ஏற்படும். இது தவிர, உயர்கல்வியில் சேரும், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் உள்ள, பயத்தை போக்கும் வகையில், ஊக்குவிப்பு திட்டம், ஜூலை இறுதியில், அனைத்து கல்லுாரிகளிலும் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, June 18, 2017

இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' : எண் நாளை வெளியீடு


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.

பி.எட்., படிப்புக்கு 21ல் விண்ணப்பம்


தமிழகம் முழுவதும், 23 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்ட படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், வரும், 21ல், துவங்குகிறது. தமிழகத்தில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில், பி.எட்., முதலாம் ஆண்டு சேர்க்கை, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் நடத்தப்படுகிறது. சென்னை, லேடி வெலிங்டன் அரசு கல்வியியல் கல்லுாரி, கவுன்சிலிங்கை நடத்துகிறது.

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், வரும், 21ல், துவங்கி ஜூன், 30 வரை நடக்கிறது. விண்ணப்பங்களை, 13 கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை, www.tndce.in,www.ladywillingdoniase.com என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். 'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 7க்குள், லேடி வெலிங்டன் கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும்' என, கல்லுாரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனாலும், நேற்று மாலை வரை, இரண்டு இணையதளங்களிலும், பி.எட்., மாணவர் சேர்க்கை விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

Friday, June 16, 2017

நாடு முழுவதும் உயர்கல்விக்கு தேர்வுகள்

உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!

உயர்கல்வி பெற நாடு முழுவதும் புதிய தேர்வுகள் அமைப்பு!
இந்திய அளவிலான உயர்கல்வி பெறுவதற்கான தகுதித் தேர்வுகளை, சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் (2017) திடீரென மருத்துவப்படிப்புக்கு அனைத்து மாநிலத்தவர்களும் ‘நீட்’ எனப்படும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற உயர்கல்விக்கான தேர்வுகளை தேசிய அளவில் நடத்திவரும் சிபிஎஸ்இ தேர்வு அமைப்புக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், சமீபத்தில் நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இது மாணவர்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்குள்ளாகியது.

இந்நிலையில் இதுபோன்ற சிக்கலில் இருந்து சிபிஎஸ்இ அமைப்பை விடுவிக்கவும், அனைவருக்கும் பொதுவான தேர்வு நடைமுறையை அமல்படுத்தவும் புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

ஆக, இந்த மசோதாவில் கூறியுள்ளதுபடி, புதிய தேர்வுகள் அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இனிமேல் நடக்கவிருக்கும் உயர்கல்விக்கான தகுதித் தேர்வுகளை நடத்த புதிதாகத் தொடங்கவிருக்கும் தேர்வுகள் அமைப்பு உதவும். இதன்மூலம் உயர்கல்வி பெற நாடு முழுவதும் ஒரே தேர்வுகள் அமைப்பு உருவாகிறது.

புதிதாக 4,084 ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


புதிதாக 4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். மாணவர்கள் பொது அறிவு, மொழித் திறன்களை வளப்படுத்த பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் அளிக்கப்படும். 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அவை வாங்கி கொடுக்கப்படும். காலிப் பணியிடங்கள்: பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியமிருப்பதால், நிகழ் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்வி, பள்ளி மேலாண்மைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற விருது அளிக்கப்படும். இந்த விருது ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை அடங்கியதாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறையில் 17 ஆயிரம் தாற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். உலகத் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்க உதவி உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்பித்தலுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ் உணர்வைப் போற்றிப் பாதுகாப்பது கடமையாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாக தமிழ்ப் பாடப் புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புதல், சிறந்த தமிழ் ஆசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், இணையதளம் வாயிலாக அவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மியன்மர், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதைத் தவிர கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும். அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்துக்கும், மலேசிய பல்கலைக்கழகத்துக்கும் பொது மக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடைமுறை: நவம்பர் வரை நீட்டிப்பு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பதில்:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையானது நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.