இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 27, 2017

அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு


ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.

'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

CPS திரும்ப பெற அரசாணை




Sunday, February 26, 2017

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேதி வரை மீசல்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி


மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி மார்ச் 14ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முடிந்த மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: மீசல்ஸ் -ரூபெல்லா தடுப்பூசி இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களது முன்னிலையில் மீசல்ஸ்- ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். வேலைக்கு செல்வதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, வரும் மார்ச் 1 ம்தேதி முதல் 14ம் தேதி வரை 2 வாரத்திற்கு அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படும்.

இது தொடர்பான விளம்பரங்கள் ரேடியோ உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க உள்ளோம். 12,500 தடுப்பூசி போடும் ஊழியர்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள், 770 பள்ளி மருத்துவ குழுக்கள் உட்பட 65 ஆயிரம் பேர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 2 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இன்றி பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 9ல், பொதுத் தேர்வு துவங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாக்லேட் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி மாணவர்களில் பலர், முதல் நிலை சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில், குளுக்கோஸ் அடங்கிய உணவு உட்கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வில், சர்க்கரை நோய் மாத்திரை, கேண்டி என்ற இனிப்பு மிட்டாய், வாழைப் பழம், ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்கள், 'சாண்ட் விச்' போன்ற உணவு மற்றும் அரை லிட்டர் குடிநீரை, தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதை கொண்டு வர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான தேவை குறித்து, டாக்டரிடம் பரிந்துரை கடிதமும், பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதமும் பெற்று வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, பிப்., 24ல் வெளியிட்டது. அதில், 'விண்ணப்ப விற்பனை, மார்ச், 6ல் துவங்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச், 23க்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற தேர்வுகளில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, குறைந்த பட்சம், ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வுக்கு, 17 நாட்களே அவகாசம் தரப்பட்டுள்ளதால், பட்டதாரிகளும், தனியார் பள்ளி ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, 'டெட்' தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் கூறியதாவது: 'சிடெட்' என்ற மத்திய அரசின், 'டெட்' தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. அதேபோன்ற, மாநில அரசின், 'டெட்' தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., போல விதிகளைப் பின்பற்றவில்லை.அறிவிக்கை வெளியாவதற்கு, ஒரு மாதத்திற்கு முன்னரே, முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், ஒரு வாரத்திற்கு முன், புதிய பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், தேர்வு தேதியை அறிவித்தனர்.

டி.ஆர்.பி., தாமதமாக வெளியிட்ட அறிவிக்கையில், விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் என, தெரிவிக்கவில்லை. விண்ணப்பங்களை தவறாக அச்சிட்டதால், மீண்டும் விண்ணப்பங்கள் அச்சடிப்பதாக கூறப்படுகிறது. டி.ஆர்.பி., செய்த தவறால், விண்ணப்பம் வழங்கும் தேதி, மார்ச், 6 வரை தாமதமாகியுள்ளது. இந்த தவறுக்கு, அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்; அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 17 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, விண்ணப்பிக்கும் அவகாசத்தை, ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், டி.ஆர்.பி., மீது வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Saturday, February 25, 2017

போலியோ தேதி மாற்றம்

போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் தவணையாக ஜனவரி 17ம் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து  9 மாதம் முடிந்த 15 வயதுக்குட்பட்ட 1.7 கோடி குழந்தைகளுக்கு பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதியும், பிப்ரவரி 21ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து மார்ச் 5ம் தேதியும், 2வது தவணை ஏப்ரல் 2ம் தேதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி பல மாவட்டங்களில் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தடுப்பூசி போடும் பணி மார்ச் 14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.   இதனால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ம் ேததி முதல் தவணையாகவும், 30ம் தேதி 2வது தவணையாகவும் வழங்கப்படும்’ என்றார்.

தேர்வு கட்டுப்பாடு


பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.

மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இந் நிலையில், தேர்வு எழுதுவோருக்கு கடும் ,
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவைவருமாறு: தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும். அதற்கு, கல்வித்துறை பொறுப்பேற்காது

* தேர்வறைக்குள் வரும் போது, காலணிகளை, வளாகத்திலேயே கழற்றி விட்டு வர வேண்டும். தேர்வறைக்குள் காலணி, உடைக்கான இடுப்பு பெல்ட் அணிய அனுமதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தொள தொள என, பெரிய சைஸ் உடைகளை, பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை, தவிர்ப்பது நல்லது

* தேர்வு அறையில் கடிகாரம் கண்டிப்பாக இருக்கும். அவை இயங்கும் வகையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலுள்ள நேரத்தின் படியே, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.

எனவே, தேர்வறைக்குள் மாணவர்கள், வாட்ச் அணிய தேவையில்லை. எந்த கூடுதல் வசதியும் இல்லாத, சாதாரண வாட்ச் மட்டும் கட்டலாம். 'ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் வாட்ச்' போன்றவை அனுமதிக்கப்படாது

* தேர்வு அறைக்குள், மாணவர்கள் ஒருவருக் கொரு வர் பேசிக் கொள்ளவோ, விவாதிக்கவோ அனுமதி கிடையாது* தேர்வு முடியும் நேரத்தில், தாங்கள் எதிர் பார்த்தமதிப்பெண் கிடைக்காது என தெரிந்து, மறு தேர்வு எழுதுவதற்காக,இந்த தேர்வில் தோல்வி அடையும் வகையில், விடைத்தாள் களில் எழுதிய விடைகளை, தாங்களே அடிக்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அடுத்து வரும் இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத முடியாது

* தேர்வறையில் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன், தேர்வர்கள் வாக்கு வாதங் களில் ஈடுபடக் கூடாது. * 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், எக்காரணத்தை கொண்டும், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டர்.இவ்வாறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Friday, February 24, 2017

திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தேர்வு பெற்று சார் ஆட்சியர் அவர்கள் தலைமையாசிரியருக்கு பரிசு வழங்கிய போது..

பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ. பிறப்பித்துள்ள உத்தரவில் அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பான வகையில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லாத வகையில் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வாகனங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறியும் வகையில், அதில், ஜி.பி.எஸ். கருவி இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் சரியாக ஏற்றி, இறக்க, ஒரு பெண் உதவியாளர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பள்ளி கல்வி வாரியம், வாகன ஓட்டுனரின் நன்னடத்தை குறித்து விரிவாக விசாரித்த பின்னரே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி வாகங்களில் இவை அனைத்தும் சரியாக உள்ளதா என, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை ஏற்பட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் TNPTF கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்ப விநியோகம்


வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து வரும் மார்ச் 6 -ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கபடவுள்ளன.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50. விண்ணப்பங்கள் மார்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

டெட்' தேர்வு விண்ணப்பம் மார்ச் 6 முதல் வினியோகம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, மார்ச், 6 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிவிக்கை: டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 6 முதல் 22 வரை வினியோகம் செய்யப்படும். மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

ஏப்., 29 மற்றும் 30ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள, மாவட்ட மையங்களின் முகவரி, விரைவில் அறிவிக்கப்படும். பி.எட்., - டி.டெட்., முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். டெட் குறித்த கூடுதல் தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச் முதல் துவக்கம்


பி.எப்., உறுப்பினர்களுக்கு எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.

4 கோடி உறுப்பினர்கள்: இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; இதில், நான்கு கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். மார்ச் முதல்.. அதன் உறுப்பினர்களுக்கு, எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மார்ச் மாதம் துவங்குகிறது.

இதன்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வீடு கட்டும் போது, முன் பணம் மற்றும் மாத தவணை தொகையை, தங்கள் பி.எப்., கணக்கில் இருந்து செலுத்த முடியும். மேலும், மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டத்திற்கான மானியங்கள் மற்றும் உதவிகள், அவர்களுக்கு வழங்கப்படும்.

காலாவதியானது CPS ஓய்வூதிய திட்ட கமிட்டி

காலாவதியானது CPS ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். 

இதில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில், 10 சதவீதத்தை, ஓய்வூதிய திட்டத்திற்கு, அரசு பிடித்தம் செய்கிறது.இதற்கு சமமான தொகையை, அரசு தன் பங்காக செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, இந்த தொகையில், 60 சதவீதம் திருப்பி தரப்படும்.

 

மீதித்தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, 14 ஆண்டுகள் ஆன நிலையில், 90 சதவீதம் பேருக்கு, ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஆசிரியர் அமைப்புகள், 2016ல் போராட்டம் நடத்தின. 

நிலைமையை சமாளிக்க, 2016, பிப்., 26ல், பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வுக்கான நிபுணர் குழுவை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குழு சார்பில், ஊழியர்கள், ஆசிரியர் களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால், இதுவரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், குழுவின் ஆயுள் காலம், 2016 டிச., 25ல் முடிந்து விட்டது. இரண்டு மாதமாகி விட்ட நிலையில், குழு தலைவர் சாந்தஷீலா நாயரும், சில வாரங்களுக்கு முன் விலகி விட்டார். அதனால், குழுவின் ஓராண்டு செயல்பாடுகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டம் தான், புதிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு. மீண்டும் புதிய குழு அமைப்பதற்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

EMIS community sub caste list

Click below

https://app.box.com/s/2e30yp6fstj8eec5f2kgn8mk1c6hf7kb

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS

Click below

http://trb.tn.nic.in/TET2017/24022017/msg.htm

Thursday, February 23, 2017

TET exam.notification

தகுதி தேர்வு விண்ணப்பம்

*TNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17.தேர்வு தாள் 1 :29/4/17 மற்றும் தாள் 2: 30/4/17*

ஆசிரியர் தகுதித் தேர்வு (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்) 

முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29 2017 
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை 

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017 
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை 

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் : 

மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை 

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள் 

விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 

விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள் 

விண்ணப்பிக்க தகுதி : 

தாள் 1 : D.T.Ed., or D.E.E.E (10 +2) 

தாள் 2 : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., + BLit(tamil) 

மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுரை


முக்கிய விதிமுறைகள்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.

68 பக்கங்கள் கொண்ட இந்த முக்கிய விதிமுறை கையேட்டில் இடம்பெற்று உள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-

செல்போன் பயன்படுத்த கூடாது

* ‘வார்தா’ புயல் காரணமாக தேர்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகளின் கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

* பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

* கேள்வித்தாள் அறையில் ஜன்னல்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதனை சிமெண்ட், கம்பி மூலம் அடைக்கவேண்டும்.

* தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் செல்போன் உள்பட எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த கூடாது. செல்போன் இருந்தால் அதை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். இதனை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணியமாக நடத்த வேண்டும்

* வினாத்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்லவேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்று வழித்தடத்தில் செல்லக்கூடாது.

* தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்கள் முன்னர், சம்பந்தப்பட்ட தேர்வு மைய அலுவலர்கள் தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

* தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்த தகவல்களை செய்தியாளர்களுக்கு பறக்கும் படை அதிகாரிகள் தெரிவிக்க கூடாது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

* தேர்வு அறையில் மாணவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.

மனநிலை பாதிக்காத வகையில்...

* மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட கூடாது.

* மாணவர்களின் மனநிலை பாதிக்காத வகையில் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

* சந்தேகப்படும் மாணவர்களை மட்டுமே சோதனை செய்யவேண்டும். அனைத்து மாணவர்களையும் சோதனை செய்யக்கூடாது.

* மாணவிகளை ஆசிரியைகள் மட்டுமே சோதனையிட வேண்டும்.

* விடைத்தாளில் எல்லா விடைகளையும் மாணவர்கள் அடித்திருந்தால் அந்த தேர்வில் இருந்து நீக்கம் செய்வதுடன், அடுத்த 2 பருவ தேர்வுகள் எழுதவும் தடை விதிக்கப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகள் அந்த உத்தரவில் இடம்பெற்று உள்ளன.