இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 10, 2017

தேசிய தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு


தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன.

இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், 2015, பிப்ரவரியில் மீண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டுக்குழு உருவானது. 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' எனக்கோரி, 2016ல், மார்ச் வரை, தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.

*மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் பயிற்சி*




தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து பொங்கலுக்கு கட்டாய விடுமுறை

TNGEA புதிய நிர்வாகிகள்


*TNGEA புதிய மாநில நிர்வாகிகள்.                                                                     மாநில தலைவர்.                                                         எம்.சுப்ரமணியன் (ஊரக வளர்ச்சித்துறை)விருதுநகர்                                                                         
மாநிலபொது செயலாளர்.                                                              எம்.அன்பரசு.                             (சமூகநலம்)சென்னை                                                                                               
மாநிலபொருளாளர்                                                           தங்கராஜ்                                                                     (வேளாண்மை.பொ)காஞ்சிபுரம்.                                                                                 மாநில துணைத்                                                               தலைவர்கள்                                                          ஞானத்தம்பி(மெடிக்கல்)மதுரை                                                       பார்த்திபன்.(வருவாய்த்துறை)தி.மலை.                                                                     குமாரவேலு                          (மோ.வா.ப.து)
நெல்லை                                                                                   செல்வம்.(பொ.ப.து)
மதுரை                                                                           சுப்ரமணியன் கருர்                                        தமிழ்ச்செல்வி.(VHN)
தர்மபுரி                                                        மாநிலசெயலாளர்கள். ஆர்.பன்னீர்செல்வம்           (வேளாண்மை)தஞ்சை                                     எம்.சௌந்தர்ராஜன்             (கூட்டுறவு)திருவாரூர்                                                            சி.ஆர்.ராஜ்குமர்.(கல்வி)கன்னியாகுமரி                                          ஜனார்த்தனன்                                              (வணிகவரி) கடலூர்                                                                             கலைச்செல்வி                       (கருவூலம்)சென்னை                                                                         A.பெரியசாமி                             (சத்துணவு)திருச்சி                             தணிக்கையாளர்கள்.                              AT.அன்பழகன்(சுகாதாரம்)நாகை                                                                    நடராஜன் ( பட்டுவளர்ச்சி)கிருஷ்ணகிரி.
💐💐💐💐💐
அனைவருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐

EMIS detail


Monday, January 09, 2017

TNPTF கண்டன அறிக்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:"தமிழர் திருநாள்"என்று உலகெங்கும் வாழும் 10கோடி தமிழர்களால் உவகையுடன் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தமிழக மக்களுக்கு மிகுந்த மனத்துயரை ஏற் படுத்தியுள்ளது.தமிழக மக்களால் சாதி,மத,இன பேதமின்றி கொண்டாடப்படும் மகத்தான திருநாள் பொங்கல் திருநாள்.இது தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா.உலகிற்கே நாகரிகத்தைப் போதித்த தமிழர்களின் உணர்வுத் திருவிழா.தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது தமிழக மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது.தமிழக மக்கள் அறுவடைத் திருநாளாகவும்,கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும்,உழவர்களுக்கு உறுதுணையாக
விளங்கும் கால்நடைகளைப் போற்றி வணங்கும் திருவிழாவாகவும் ஆயிரக்கணக்கன ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழாவிற்கு விடுமுறை மறுத்துள்ள மத்திய அரசின் இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.(செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்)

CBSE public exam date anounce

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.

Sunday, January 08, 2017

பான் எண் கட்டாயம்


வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.



உத்தரவு:

இதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: கடந்த, 2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.



வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களில், பான் எண் குறித்த தகவல்கள் தராதவர்களிடம், அதை, பிப்ரவரி இறுதிக்குள் பெற்று, அனுப்ப வேண்டும். வங்கிகள் மட்டுமின்றி, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில், 2020ல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்கள் தேவையற்றதாகி விடும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும், கட்டை விரல் ரேகையை பதிவு செய்வதுடன், 30 வினாடிகளில் முடிந்து விடும். உலகில், 100 கோடி மொபைல் போன்கள், 100 கோடி, 'பயோ மெட்ரிக்' இயந்திரங்கள் உடைய ஒரே நாடு, இந்தியா.

- அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'

Saturday, January 07, 2017

மாம்பழ வாசனையடிக்கும் உள்ளங்கை-மணிகண்டபிரபு

#இந்தவாரவண்ணக்கதிரில்

மாம்பழ வாசனையடிக்கும் உள்ளங்கை
-மணிகண்டபிரபு

புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும்.படிக்க படிக்க மனம் தெளிவடையும்.நுட்பமான எழுத்துக்களை படிக்கும்போது மட்டும் அறிவு விரிவடைகிறது.

கரடு முரடான எழுத்துக்களின் மூலம் கதை சொன்ன மேதாவிகளிலிருந்து விடுபட்டு.., மயிலிறகால் மனதை வருடி ரசிப்பு நிலையின் உச்சத்தை காணச் செய்தவர் வண்ணதாசன்.அகநிகழ்வை புகைப்படம் பிடித்துக்காட்டும் அற்புத கலைஞன்.

மனதை தொட்ட வரிகளை எழுதிவைக்கும் டைரி முழுவதையும் மனம் கமழச் செய்யும் இவரின் எழுத்துக்களை பகிர்கிறேன்

நெல்லையில் பிறக்கவில்லையே என ஏக்க பெருமூச்சு வரும்.இவரின்
முதல்கதை 1962 ல் ஏழையின் கண்ணீர்.1976ல் முதல் கதைத்தொகுப்பு கலைக்க முடியாத ஒப்பனைகள்.இவரின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாகவே வந்துள்ளது.

சாரல் மழை பெய்யும் சூழலையும்,
மழைக்கு இதமாக பருகும் தேநீர் போன்ற இவரின் விவரிப்புகள்,கவனிக்க தவறிய முகங்களை பதிவு செய்யும் இவரின் சாதனைக்கு இன்னொரு மகுடம் இந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது.

மகிழ்ச்சியையும் சோகத்தையும் எளிதில் கடத்தும் இவரின் எழுத்துக்கள்.இவரின் உரைநடை தெருவில் காற்றில் பட்டு உருண்டோடும் பூக்களை போல மனம் லயிக்கும்.இதோ ஒரு உதாரணம்

"இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து,அதன் மேல் தாள் பூ இலையை வைத்து,வலது கையை அகல விரித்து அடிப்போம்.'டொப்' என்று சத்தம் வரும்.அது ஒரு விளையாட்டு.அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

மற்றொரு முறை மழையை பற்றி கூறும்போது..

மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.

ஒரு சிறுகதையோ கட்டுரையோ அதன் முதல் வரி முக்கியமானது.அந்த வகையில் வண்ணதாசன் எழுத்தை படிக்கும்போதே ஈர்ப்பு வரும்.அவ்வாறான அவரின் துவக்க வரிகள்..

"இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டதட்ட யூகித்து விட முடியும் தினங்களில்,கனவுகள் தன் கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.

"மாம்பழ வாசனையடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்றிப் பொத்தலாம்?

*மனம் வனமிருகங்களைப் போல நுட்பமானது

அதே போல் அவரின் எழுத்துக்கள் வாசகனின் கண்களிலிருந்து இன்னும் கொஞ்சம் படிக்கலாம் என கெஞ்சும்

அவரின் இறுதி வரிகள் இவ்வாறெல்லாம் முடிந்திருக்கும்

*விடை பெறுவதற்கும் விடை கொடுப்பதற்கும் போதுமானதாக இருந்தது.

*மழை பாருங்கள்..
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

*அருவியும் ஒரு வேளை மெலிந்து இருக்குமோ?

*அகம் புறம் தொடரின் இறுதியில்

"இந்த நதி ஓடும்போது,இந்தப் படித்துறையில் குளிக்கிற நேரத்தில்,இந்தக் கல்மண்டபத்தில் அமர்ந்து இருக்கையில்,நான் அழகாக இருக்கிறேன்.உள்ளும் வெளியும் அழகு.உள்தான் வெளி.அகம்தான் புறம்.நான்தான் நீங்கள்! என்று
என்ன கவித்துவமான வரிகள்.

பார்த்தாலே இன்பம்.படித்தாலே பரவசம்.அவ்வாறாக மனம் தொட்ட இவரின் வரிகள்

*சிறுவயது தான் நம் கையை பிடித்துப் பெரிய வயதுக்குள் கூட்டிப்போகிறது

*உயிரையே அசைத்த கவிதை...👇🏿

பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்"!

*வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு
வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது

*தூக்கம் வந்தவருக்கு இரவு சுகமாகிறது.வராதவருக்கு சுமையாகிறது என்பதுபோல் விளக்கும்..

*சில இரவுகளை கழிக்கிறோம்
சில இரவுகள் வாழ்கிறோம்

*கெட்டிக்காரத்தனம் என்பது
உப்பு மாதிரி
கொஞ்சம் கூடினால்
ரொம்ப கரிக்கும்
ருசி கெட்டுவிடும்

*முகங்களை விட
கால்களையே அதிகம்
உற்றுப்பார்க்க வேண்டும்.
அதுவும் சிரித்துக்கொண்டே
-செருப்புகடை சேல்ஸ்மேன்

*சிக்கல்களின் நெரிசல்களுக்கு
இடையில் மனிதர்கள் சதா
நோன்பிருப்பது அன்பெனும்
சிறுவரத்துக்கு மட்டும்

*எளிய தீர்மானங்கள் என்பது நாமே
மணல்வீடு கட்டிக்கொள்வது போல
நாமே கட்டி நாமே
சிதைத்துவிடுகிறோம்

*பண்டம் சுடுகிற அடுக்களை மண்
அடுப்பின் உட்பக்கத்து தணலும்
தணலின் சிவப்பில் ஜொலிக்கிற
அம்மா முகமும்
எவ்வளவு ஜீவன் நிரம்பியது

*என்ன செய்ய முடியும்
உங்களால்?
ஒதுக்கி தள்ளுவீர்கள்
என்ன செய்ய முடியும் என்னால்
ஒதுங்கி கொள்ளுவேன்

*மழையின் திருவிழாவில்
குழந்தைகள் உட்னடியாகவும்
நாம் சற்று தாமதமாகவும்
தொலைந்து போவேன்

*சிரிப்பது செளகரியமான பதிலாக இருக்கிறது

*ஓய்வு சிலசமயம்
அழகு தருகிறது
இயக்கம் சில சமயங்களில்
இன்னும் அழகு தருகிறது

*தலையில் உதிர்ந்து கிடக்கும்
வேப்பம் பூக்களை அப்படியே
விட்டுவிடுங்கள்

*வெளிப்படுத்துதலை விட
சிரம்மானது எளிமையாக
வெளிப்படுத்தல்

*திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது அழகா? இரண்டாம் தடவை
பார்க்க முடியாம இப்படியே திகைக்க வைத்துவிட வேண்டும்.
அதுதான் அழகு

*எரிகிறபோது பார்க்காமல்
எப்போதும் அணைந்தபிறகுதான்
அதை சற்று அதிகம் பார்க்கிறோம்

இந்த கடைசி வரியினை படித்தால் அனைவருக்கும் உற்சாகம் கிளம்பும்

*எதுவும் தாமதமாகிவிடவில்லை
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட
இன்னும் எவ்வளவோ
உயரங்களுக்கு போய்விட முடியும்

எழுத்துக்களை போலவே எளிமையான மனிதராய் விளங்கும் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டு விருது கிடைப்பதில் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட இரு மடங்கு மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு

-மணிகண்டபிரபு

EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!


மத்திய அரசு 1995-ம் ஆண்டுக்குக் கீழே வரும் அனைத்து இ.பி.எஃப் பென்ஷன் தாரர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறி இருக்கிறது. இதன் மூலம் 2.5 கோடி பேர் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 'இ.பி.எஃப் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அப்படி ஆதார் எண் இல்லாதவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறைந்த கால அவகாசத்தில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தப் பார்க்கிறது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் புகார் அளிக்கின்றன.

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு


தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக்களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ 1 வருடத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யா விட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக்குனர், கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்ட விதி 3ன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஆண்டுக்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் 1 ஆண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு வருடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வருடத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பொதுமக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி


தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளிய பொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களை செய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும் அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.