இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 21, 2016

நீட் தேர்வு

தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!
        2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சுற்றறிக்கை போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

விழிப்புணர்வு பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் வாரம் இருமுறையாவது மாணவ–மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். அப்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துங்கள். மேலும் இதுகுறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்க வைக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடங்கள் இதற்காக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியையும் அவர் கூறியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:– போக்குவரத்து விதிகள் நான் போக்குவரத்து விதிகளை மதிப்பேன். நன்றாக பழகியபிறகே வாகனம் ஓட்டுவேன். டிரைவிங் லைசென்சு பெற்றபிறகே வாகனம் ஓட்டுவேன். என் பெற்றோர் வாகனம் ஓட்டும்போது இருசக்கர வாகனமாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவேன். பெற்றோர் கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன்.

நான் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த மாட்டேன். வாகனம் ஓட்டும்போது எனது பெற்றோரையும் செல்போன் பயன்படுத்த விட மாட்டேன். பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். அசதியாக இருக்கும்போது வாகனம் ஓட்ட மாட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை


கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இச்சேவையின் மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. 'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். www.passportindia.gov.in என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம். பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும்.

சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.

சாகித்திய அகாடமி விருது பெற்றோர் விபரம்

2016-ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கீகரிக்கப்படாத 4 மொழிகளுக்கு ‛பாசா சம்மான்' விருதுகளும் அறிவிக்கப்பட்டன.



24 மொழிகளுக்கு..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு உள்ளிட்ட படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கு நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ‛ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது வழங்கப்பட்டது.



ரூ.1 லட்சம் பரிசு :

விருது பெறும் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், தாமிரப் பட்டயம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு(2017) பிப்.,22ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது விபரம் :

* தமிழ் - வாணிதாசன் (சிறுகதை)

* தெலுங்கு - பாப்பி நனி சிவசங்கர் (கவிதை)

* கன்னடம் - கோலுவாரு முகம்மது குன்ஹி (நாவல்)

* மலையாளம் - பிரபா வர்மா (கவிதை)

* ஹிந்தி - நஸீரா சர்மா (நாவல்)

* பெங்காலி - நிரிசிங்கபிரசாத் பதூரி (கட்டுரை)

* ஆங்கிலம் - ஜெர்ரி பின்டோ (நாவல்)

* உருது - நிஜாம் சித்திக் (திறனாய்வு)

* சம்ஸ்கிருதம் - சித்தனாத் ஆச்சார்யா (கவிதை)

* அசாமி - ஜனான் புஜாரி (கவிதை)

* மணிப்பூரி - மொய்ரங்தம் ராஜன் (சிறுகதை)

* குஜராத்தி - கமல் வோரா (கவிதை)

* ஒடியா - பரிமிதா சத்பதி (சிறுகதை)

* பஞ்சாபி - சுவராஜ்பிர் (நாடகம்)

* காஷ்மீரி - அஜீஸ் ஹஜினி (திறனாய்வு)

* ராஜஸ்தானி - புலாஹி சர்மா (சிறுகதை)

* மராத்தி - அஸாராம் லொமேட் (சிறுகதை)

* நேபாளி - கீதா உபாத்யாய் (நாவல்)

* போடோ - அஞ்சு (கவிதை)

* சந்தாலி - கோவிந்த சந்திர மாஜி (கவிதை)

* சிந்தி - நந்த் ஜவேரி (கவிதை)

* டோக்ரி - சத்ரபால் (சிறுகதை)

* மைத்திலி - ஷியாம் தரிஹரே (சிறுகதை)

* கொங்கணி - எட்வின் ஜெ.எஃப். டி'சௌசா (நாவல்)



‛பாசா சம்மான்' விருது :

அங்கீகரிக்கப்படாத மொழிகளான குருக், லடாக்கி, ஹல்பி மற்றும் சவுராஷ்டிரா ஆகிய 4 மொழிகளின் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கு ‛பாசா சம்மான்' விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சவுராஷ்டிரா மொழிக்காக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர்.தாமோதரன் மற்றும் டி.எஸ்.சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருது பெற தேர்வாகியுள்ளனர்.

கண் துடைப்பாகும் சிலாஷ் தேர்வு


கண்துடைப்பாகும் 'சிலாஸ்' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!
       தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      ஒவ்வொரு ஆண்டும், தொடக்க கல்வி மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் பெற்ற, கற்றல் அடைவு திறன் (கற்றல் திறன்) தொடர்பான மதிப்பீட்டை, எஸ்.எஸ்.ஏ., மேற்கொள்கிறது. இதன்படி மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 'சிலாஸ்' தேர்வு நடத்தி அவர்கள் அடைவு திறன் குறித்து மாநில அளவில் சர்வே எடுக்கப்படுகிறது.
இந்தாண்டு இத்தேர்வு, டிச.,19ல் துவங்கி 22ல் (இன்று) முடிகிறது. இத்தேர்வு எழுத, ஒவ்வொரு ஆண்டும், ஒரே பள்ளிகளை தேர்வு செய்வதாகவும், ஒரு வகுப்பில் 25க்கு குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகளில், 'வினாவிற்கான விடையை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால், மாணவர் அடைவு திறனை சோதிக்க வேண்டும் என்ற இத்தேர்வு நோக்கமே கேள்விக் குறியாகி விட்டது' எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர, கல்வி செய்திகளை பதிவிடும் ஒருசில தனியார் 'வெப்சைட்'கள், இத்தேர்வு நடப்பதற்கு முன்பே வினாவிற்கான விடைகளை பதிவிடுகின்றன எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒரு யூனியனில் 1-5 வகுப்பில் 10 பள்ளிகள், 6-8 வகுப்பில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்து, இத்தேர்வு நடத்தி மாணவர் திறன் குறித்த சர்வே எடுக்கப்படும். மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர் கற்பித்தலில் கேள்வி எழும் என்பதால், மாணவர் விடையளிக்க ஆசிரியர் உதவி செய்கின்றனர் என பிரச்னை எழுந்தது.இதனால் 'ஒரு பள்ளியில் நடக்கும் தேர்வை மற்றொரு பள்ளியை சேர்ந்த ஆசிரியர், தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும்,' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் எந்த பள்ளிக்கு, எந்த ஆசிரியர் செல்கின்றனர் என்ற விவரம், முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி 'மாணவர்களை நன்றாக தேர்வு எழுத வைத்து விடுகின்றனர்'. ஒவ்வொரு ஆண்டும் ஒரே பள்ளிகளை தேர்வு செய்யாமல் 25 பேருக்கு குறைவாக இருந்தாலும் அந்த பள்ளியையும் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குறைபாட்டை நீக்கினால் தான் 'சிலாஸ்' மூலம் உண்மையான சர்வேயை எதிர்பார்க்க முடியும், என்றார்.

*_பள்ளிக்கல்வி - இவ்வாண்டு முதல் INSPIRE AWARD என்பது INSPIRE MANAK SCHEME என மாற்றப்படுகிறது - மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் - இயக்குனர் செயல்முறைகள்_*👆





posted from Bloggeroid

Tuesday, December 20, 2016

அரையாண்டு தேர்வு மாற்றம்


posted from Bloggeroid

பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்


வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'தானே' புயல், கடலுாரை கசக்கி விட்டு சென்றது போல, வங்கக்கடலில் உருவான, 'வர்தா' புயல், சென்னையை சின்னா பின்னமாக்கி விட்டது.

இப்புயல் கரையை கடந்த போது, 140 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசியதால், பல ஆண்டு பழமையான மரங்கள் உட்பட, ஏராளமான மரங்கள் சாய்ந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வர்தா பாதிப்பால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அதனால், பசுமையாக காட்சிஅளித்த பகுதிகள், பாலைவனம் போல மாறிவிட்டன. மரங்கள் முறிவால், பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், எதிர்காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, நோய்கள் பாதிக்கலாம் என, ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், புதிதாக மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், விழுந்த மரங்களை கணக்கிட்டு, மூன்று மடங்கு அதிகமாக மரக்கன்றுகள் நட்டு, மாணவர்கள் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில் குறைபாடுகளும்.


ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 365 நாட்கள்(365/21.47=17days)அதற்கு 17 நாட்கள் EL வழங்கப்படுகின்றது தற்போது ஒரு கல்வியாண்டில் 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால் (365-21=344,344/21.47=16days)16 நாட்கள் EL வழங்கப்படுகின்றது அதே சமயத்தில் ஒரு கல்வியாண்டில் வெறும் 3 நாட்கள் மட்டுமே ML எடுத்தவர்களுக்கும்(365-3=362,362/21.47=16.86)16.86 என்பதில் தசம இலக்கம் கணக்கில் கொள்ளப்படாமல் 16 நாட்கள் மட்டுமே EL வரவு வைக்கப்படுகின்றது,...3 நாள் Ml க்கு 1 நாள் EL கழிக்கலாமா?இதே போல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைவான மருத்துவ விடுப்பிற்கெல்லாம் (2முதல் 10நாட்கள்)1நாள் ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3முதல் 10 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு இழப்பு ஏற்படுகிறது.....21நாட்கள் மருத்துவ விடுப்புக்கு மட்டுமே 1ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சார்ந்த ஆசிரியர் கணக்கில் மீள வரவு வைக்கப்படல் வேண்டும்.

_NCERT புத்தகம் முழுவதும்_

https://www.dropbox.com/sh/daeo2ngnp47cd1i/AABH-an3yFktkDtdReYbopiOa?dl=0

_NCERT E BOOK  APP_

https://play.google.com/store/apps/details?id=com.philoid.ncert&hl=en

_கைபேசியில்  புத்தகம்  படித்தால்  கண்ணு வலிக்கா இந்த  app  பயன்படுத்துங்கோ_

https://play.google.com/store/apps/details?id=com.urbandroid.lux&hl=en

_புத்தகம்  படிக்க  எந்த  pdf READER  பயன்படுத்தலாம்  யோசிக்கவேண்டாம்  இதுதான்  பெஸ்ட்_

https://play.google.com/store/apps/details?id=com.xodo.pdf.reader&hl=en

OR

https://play.google.com/store/apps/details?id=com.foxit.mobile.pdf.lite&hl=en

வாட்ஸ்-அப் வழக்கும், நீதிமன்ற தீர்ப்பும்..!

இந்தியாவில் பல்வேறு இடங்களில், தவறான தகவலை வாட்ஸ்-அப் க்ரூப்பில் பகிர்ந்ததற்காக அந்த க்ரூப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம்,'வாட்ஸ்-அப் க்ரூப்பில் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது.' என கூறியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லியில் மட்டுமே செல்லும். வாட்ஸ்-அப் மட்டுமல்லாமல் மற்ற சமூக ஊடகங்களிலுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது


2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என்றும், பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு ஏற்றதாத தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

விழா முன்பணம் கோரும் படிவம் -PDF

Click below

https://app.box.com/s/ram4corfpt8r2rxy0ol49elfpg29e18s

விழா முன்பணம் படிவம்


posted from Bloggeroid

Monday, December 19, 2016

தேர்வு மாற்றம்


டிச. 7 மற்றும் 8-ல் தள்ளிவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஜன. 2, 3 தேதிகளில் நடைபெறும்-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்
#HSC

டிச.14-ம் தேதி #Chennai, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட +2 அரையாண்டு தேர்வு, ஜன.5-ல் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

தொழில்கல்வி பாடத்திட்டம் முடக்கம்


: கோவையில், 35 அரசுப் பள்ளிகளில், தொழில்கல்வி
ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற பின், காலிப் பணியிடங்களை நிரப்பாததால், பாடத்திட்டத்தை முடக்கியதாக புகார் எழுந்துள்ளது.

கோவையில், 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்கல்வி பாடத்திட்டம், கடந்த 1985ல் துவங்கப்பட்டது. அக்கவுன்ட் ஆடிட்டிங், டைப் ரைட்டிங், ஊட்டச்சத்து, மனையியல் உள்ளிட்ட, 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன.

இப்பிரிவுகளுக்கு, 1990ல், ஆசிரியர் பணியிடம் நிரந்தரமாக்கப்பட்டது. அதற்கு பின், புதிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடத்திட்டம் கொண்டுவரவில்லை.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடத்திட்டம், வரப்பிரசாதமாக உள்ளது. இதில், பொது இயந்திரவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜி., கவுன்சிலிங்கில், மெக்கானிக்கல் படிப்பு தேர்வு செய்ய, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், 400 மதிப்பெண்கள் வரை, செய்முறை பகுதிகள் உள்ளதால், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இதனால், உயர்கல்வியில் சிறந்த கல்லுாரிகளில், மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்கல்வி பாடத்திட்டத்தை, மற்ற பள்ளிகளில் விரிவுப்படுத்தாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்வி கொள்கை உள்ளீட்டில், தொழில்கல்வி பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், மாநில அளவில், புறக்கணிக்கும் பாடத்திட்டமாக, தொழிற்கல்வி உள்ளது.

இப்பிரிவில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தில், புதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை. இதனால், ஆசிரியரில்லாத பாடப்பிரிவுகளுக்கு, தற்காலிக பணி அடிப்படையில், ஆசிரியர்கள் நியமித்தால், ஊதியம் வழங்குவதில், சிக்கல் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ஆசிரியரில்லாத பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவு முடக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தொழிற்கல்வி பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை. கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காததால், பணி ஓய்வு பெறும் வரை, ஒரே பள்ளியில் கற்பிக்கும் நிலை நீடிக்கிறது.

மேலும், கோவையில், குறிச்சி, தொண்டா முத்துார், மதுக்கரை உள்ளிட்ட, 35 பள்ளிகளில், ஆசிரியர் ஓய்வு பெற்றதால், பாடப்பிரிவு முடக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளிலும், விரைவில் ஆசிரியர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

காலிப்பணியிடத்தை நிரப்பாமல், தொடர்ந்து கல்வித்துறை மெத்தனம்காட்டினால், தொழில்கல்வி பாடத்திட்டமே இல்லாத நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

விலை இல்லா புத்தக வழங்குவதற்கான படிவம்

Click below

https://app.box.com/s/fuzq88g19lz3lv5i8dvw5o0xsepd5p2y

பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு


பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும். இரு வகுப்புகளிலும், 20 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் நடத்தப்படுகிறது.

ஆனால், தேர்வு மையங்கள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. தங்களுக்கு தேவையான வசதிகள் வேண்டும் என்பதற்காக, அதிகாரிகளும், ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளை கண்டு கொள்வதில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில், பல தனியார் பள்ளி தேர்வு மையங்களில் காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளும், வினாத்தாள், 'லீக்' சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்கான, பல புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது.

அதாவது, முறைகேடு புகாருக்கு ஆளாகும் பள்ளியின் தேர்வு மையங்களை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்; மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; விதிமீறல் நிரூபணமானால், பள்ளி அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்


தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன. இதனால் கல்வி அலுவலகப் பணிகளும் மந்தமாகிவிட்டது.

'ஆன்லைனில்' தினமும் கற்றல் கற்பித்தல், நலத் திட்டங்கள் வழங்கல், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, உத்தரவுகள், அறிவுறுத்தல், நலத் திட்டம் தொடர்பான விவரம், புகார்கள் மீதான விசாரணை என பல தகவல் பரிமாற்றங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு 'ஆன்லைன்' மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் உடனுக்கு உடன் வேண்டிய தகவல்கள்'ஆன்லைனில்' தான் கேட்கப்படும். அதற்கு கல்வி அலுவலகங்கள் மூலம் உடன் பதில் அனுப்பப்படும்.

ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக இதுபோன்ற 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிச., 7, 8ல் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு மாற்றாக அத்தேர்வுகள் எப்போது நடத்த வேண்டும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நலத் திட்டம் வழங்குவதற்கான வழிகாட்டுதல், கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையால் கல்வித்துறை பணிகள் பாதிக்கிறது என ஆசிரியர்கள்தெரிவித்தனர். இதுகுறித்து உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் டிச., 6, 7, 8ம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்போது 7, 8ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் பின் 9ம் தேதியில் இருந்து, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய வழக்கமான அறிவிப்பு, தபால் தகவல் மற்றும் 'ஆன்லைன்' அறிவுறுத்தல்களும் குறைந்து விட்டன. சாதாரண மற்றும் பதிவு தபால்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன.இதையடுத்து வர்தா புயல் சீற்றத்தாலும் சென்னையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள், அலைபேசி டவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின. இதனால் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றங்களும் குறைந்து விட்டன. இதே சூழ்நிலை அனைத்து துறைகளிலும் உள்ளன, என்றார்.