இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 27, 2015

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்


பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதையொட்டி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, அனைவரும் தெரிந்து, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்து, கல்வித் தரத்தை உயர்த்த, 'சரன்ஷ்' என்ற இணைய இணைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை, அனைத்து பள்ளிகளும் பயன்படுத்துமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதன் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மண்டலங்களின், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதத்தை அறியலாம்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர், தனியாக, 'லாக் இன்' செய்து, தேர்வு மதிப்பெண்ணை பார்க்கலாம்.மேலும், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பின்பற்றி, பாடங்கள் நடத்த பள்ளிகள் முன்வரலாம் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

Thursday, November 26, 2015

cps account statement website

Click below

http://cps.tn.gov.in/public/

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'


கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு, தமிழக அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக, பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். அப்போது, 'எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை; ஆசிரியர்களின் பணி போதுமானதாக இல்லை' என, உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சில தலைமை ஆசிரியர்களை எழுந்து நிற்க சொன்ன, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி எச்சரிக்கை விடுத்தார். இதை எதிர்த்து, வாக்குவாதம் செய்த தலைமை ஆசிரியர்கள், வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசிய தலைமை ஆசிரியர்கள், 22 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'சஸ்பெண்ட்?' 'சர்ச்சையில் சிக்கி உள்ள தலைமை ஆசிரியர்கள், நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்; அதில் திருப்தி இல்லையென்றால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'


மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2003க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்டதும், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டன; இதனால், கணக்கு பராமரிப்பில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் நிர்வாகத்துக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கும் மாற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் சரி செய்யப்பட்டன. இதற்கிடையே, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் துாத்துக்குடி ஆகிய, ஏழு மாவட்டங்களில், தொடக்கக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான ஆசிரியர்களின், பி.எப்., கணக்கு விவரங்களை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் உள்ள, 81 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இது பற்றி விவாதிக்க, டிசம்பர், 4ல், சென்னையில் மாவட்ட கல்வி அதிகாரி கள் அவசரக் கூட்டத்தையும், அவர் கூட்டியுள்ளார்

SMC training

Wednesday, November 25, 2015

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை


அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு தேதிஅடுத்த வாரம் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை


திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது.

தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரு நாட்களாக வெயில் தலை காட்டியதால், பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த, 12 வேலை நாட்களில் வகுப்புகள் இயங்காமல் பாதிக்கப்பட்டதால், இன்று முதல், நேரத்தை வீணடிக்காமல் வகுப்புகளை நடத்துமாறும், மாணவர்களை முடிந்த வரை விடுமுறையின்றி வகுப்புகளில் பங்கேற்க வைக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நவ., 17ல் துவங்க இருந்த திருப்புதல் தேர்வுகளை, பள்ளிகளே முடிவு செய்து, திங்கள் கிழமை முதல் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாய்மொழி உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது; மழையால் பாதித்துள்ள மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளை இழந்திருந்தால் அவர்களுக்கு, இன்று முதல் மீண்டும் இலவச புத்தகம், சீருடை வழங்கப்படு கிறது. இதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டன.சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்புள்ள, 11 அரசு பள்ளிகளுக்கு மட்டும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. சீருடைகெடுபிடி இல்லை வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தும், பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள், சீருடைகளை இழந்திருந்தால், அவர்களை சீருடை அணிந்து வர, சில வாரங்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

'
தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அச்சம் '

ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும். 'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை; வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன. விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவ:

நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர்.
அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.-

Constitution day celebration

Click below

https://app.box.com/s/n0aygamt6a5qdyd2c3gybu2qat1kv9k5

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் உறுதிமொழி 26-11-15

Tuesday, November 24, 2015

பிஎப் முதலீட்டில் கிடைத்தது சொற்பம்


தொழிலாளர் வருங் கால வைப்புநிதி ஆணையம், தொழிலாளர்களின் நிதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் முதல் அக்ேடாபர் வரை 2,322.1 கோடியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

ஆகஸ்டில் 335.3 கோடி, செப்டம்பரில் 1,142.5 கோடி, அக்டோபரில் 844.3 கோடியும் முதலீடு செய்துள்ளது. இதற்கு 1.52 சதவீதம் மட்டுமே ரிட்டர்ன் கிடைத்துள்ளது. இது தொழிலாளர் யூனியன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். இது நீண்ட கால முதலீடு என்பதால் மாதந்தோறும் இதை அளவிடுவதில்லை என்று பிஎப் ஆணையர் ஜலான் கூறினார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்: பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்


வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெற்றது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பெயர் சேர்ப்பு, விவரங்கள் திருத்தத்துக்காகப் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி-மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் மீதுள்ள விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடி அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டு, விண்ணப்பதாரர்களின் இருப்பிட விவரங்களை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் ஒரு இடத்தில் பெயர் நீக்கத்துக்கான துண்டறிக்கையை வழங்குகின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை நடவடிக்கையை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

நோய் தடுப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு


பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்

பள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும்

கொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும்

நீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்

நோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி - போராடியும் பலனில்லை.

இன்றைய தீக்கதிரில் 24-11-15 வெளிவந்துள்ள எனது குறுங் கட்டுரை

Seventh (7th) Pay Commission 2016 Salary (Pay Scale) Calculation

Click below

https://www.easycalculation.com/finance/7th-pay-commission-calculator.php

Monday, November 23, 2015

தொடக்கக் கல்வி - கடந்த ஒரு வார காலமாக பெய்யும் கனமழை காரணமாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து இயக்குனர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21RUFyQkVSV1ZSaUk/view?usp=sharing

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு


பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் பணிகளை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம், 'பம்ப்செட்' மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வெள்ளப் பெருக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளின் நிலவரம் குறித்து, தினமும் மாலை 5:00 மணிக்கு, அறிக்கை தர, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி இருக்கும் இடம்; மாணவ, மாணவியர் எங்கிருந்து வருகின்றனர்; பள்ளி பகுதியிலும், மாணவர் வரும் வழியிலும் மழை நிலவரம், வெள்ள நிலைமை குறித்த தகவல்களை, அறிக்கையில் இடம் பெறச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுத்தம் செய்யப்பட்ட பள்ளி வளாகங்களில், சுகாதாரத் துறை மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாற்று கட்டடங்களில் பள்ளிகள் அபாயகர பள்ளி கட்டடங்கள், பாதுகாப்பில்லாத வகுப்பறை கட்டடங்களுக்கு பதில், அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் சமூகநல கூடங்களில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம் 2016ல் அமலாகிறது


'தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உள்ளன,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

அமல்படுத்தப்படவில்லை நாட்டின் மக்கள் தொகையில், ஏழைகள் என கண்டறியப்பட்டுள்ள, மூன்றில் ஒரு பங்கினருக்கு, மாதம்,5 கிலோ அரிசி, ஒன்று முதல், மூன்றுரூபாய் விலையில் வழங்கப்படவேண்டும் என்பது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம். வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த திட்டம் கருதப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம், முந்தைய காங்., அரசால், பார்லிமென்டில், 2013ல் நிறைவேற்றப்பட்டது. ஓராண்டிற்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இச்சட்டத்தை பின்பற்ற வலியுறுத்தப்பட்டன. எனினும், மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னும், நாடு முழுதும், இன்னமும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், டில்லி யில் நேற்று, அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மாநாட்டை கூட்டி, உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சர் பஸ்வான் விவாதித்தார். இதன்பின், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

உணவு பாதுகாப்பு சட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த, தமிழகம் தவிர்த்து, அனைத்து மாநிலங்களும் உறுதியளித்து உள்ளன. மொத்தமுள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், இந்த சட்டத்தை இதுவரை அமல்படுத்தாத, 14 மாநிலங்களில், ஆந்திராவும், சிக்கிமும், இந்த ஆண்டிற்குள் அமல்படுத்த உறுதியளித்து உள்ளன. மார்ச் மாதத்திற்குள்...உத்தர பிரதேசம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களும், அந்தமான், நிகோபார் யூனியன் பிரதேசமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த உள்ளன. குஜராத், கேரளா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள், மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதமிழக அதிகாரிகள், 'தமிழகத்தில், அனைவருக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டம், சிறப்பாகசெயல்படுத்தப்படுவதால், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வில்லை; அடுத்த ஆண்டு ஜூலைக்குள் அமல்படுத்த உள்ளோம்' என்றனர். ரூ.4,000 கோடி மிச்சம்போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதால், இரு ஆண்டுகளில், 4,000கோடி ரூபாய் மத்திய அரசுக்கு மிச்சமாகி உள்ளது. உணவு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து, மாநில அரசுகளை, நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; அது, அவர்களின் விருப்பத்தை பொருத்தது. விருந்தா ஸ்வரூப்மத்திய உணவுத் துறை செயலர் Advertisement