இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 25, 2015

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும் பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது. அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த (பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும், ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகிய பட்டப் படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும்.

மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர் பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார், அரசு கல்வியியல் கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இக் கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை w‌w‌w.cb‌s‌e.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சிபி.எஸ்.இ தேர்வில் 9வகையான மதிப்பெண்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர்.

இத்தேர்வில், பாட வாரியாக, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனியே கிரேடு முறை வழங்கப்படுகிறது. ஆங்கில எழுத்துக்களில், 'ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1, டி2, இ' என, ஒன்பது வகை கிரேடு முறை வழங்கப்படுகிறது. இந்த கிரேடு முறையில், டி2க்குக் கீழ், இ கிரேடு பெற்றால், அவர் தேர்ச்சி பெறாதவர் ஆவார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர், ஒரு மாத இடைவெளியில் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர், மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வில், அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதை மீண்டும் எழுதத் தேவையில்லை.

பழைய மதிப்பெண்ணே கணக்கில் எடுக்கப்படும். இல்லையென்றால், செய்முறை மற்றும் 'தியரி' தேர்வு இரண்டையும் மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டும். மதிப்பெண் பட்டியலுக்கான சான்றிதழில், பாடவாரியாக மதிப்பெண் மற்றும் தனியாக கிரேடு குறிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி? சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் கணிதத்துக்கு, 100; இயற்பியல், வேதியியலுக்கு தலா, 50 மதிப்பெண் கணக்கிடப்பட்டு, மொத்தம், 200க்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்கள் கணிதத்தில், 100க்கு பெற்ற மதிப்பெண் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும்.

இயற்பியல் மற்றும் வேதியியலில், அவர்கள், 100க்கு எடுத்த மதிப்பெண், தலா, 50க்கு என கணக்கிடப்படும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு கட்டாயமா?

ஆதார் எண் இணைக்கவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. வாக்காளர்களின் விவரங்களை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வாக்காளர்களின் ஆதார் எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியன வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சியை தவிர எஞ்சிய 30 மாவட்டங்களிலும் 100 சதவீத விவரங்கள் பெறப்பட்டுள்ளன. 
இந்ந்லையில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீடிக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது குறித்த முழுவிவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LAB ASST EXAM.HALL TICKET

Click below

http://www.tndge.in/appforms/labasst/labasstht.aspx

Sunday, May 24, 2015

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்சனை தீருமா?

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2006ல், தி.மு.க., ஆட்சியில், காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 2003 - 06 வரையிலான பணிக்காலம், பணி முறிவாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கு, ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைக்கவில்லை;

பணிக் காலத்தை இழந்தனர்; பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது. பணி வரன்முறை கோரி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட, பல ஆசிரியர் அமைப்புகள், அரசுக்கு, 10 ஆண்டுகளாக மனு கொடுத்தன. தமிழக முதல்வராக, மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்றதும், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, 2003 - 06ல், பணி வரன்முறை பெறாத ஆசிரியர்களின் பணிமுறிவுக் காலம் மற்றும் அதற்கான ஊதிய செலவு பட்டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''இந்த முடிவால், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணிக்காலம் கிடைப்பதுடன், அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க, கூடுதல் வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.

மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியருக்கு வலியுறுத்தல்

புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.

இலவச பஸ் பாஸ்களை விரைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பாதுகாப்பு: முக்கியமாக பள்ளி திறக்கும் முன்பே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு சென்று, பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.குறிப்பாக பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறு இருந்தால் அவற்றை மூடிபோட்டு மூடவேண்டும். பள்ளி கட்டடம் சேதமடைந்திருந்தால் அவற்றை புனரமைக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின்கம்பிகள் சென்றால், அவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகம், சுற்றுப்புறங்களில் முட்புதர் இருந்தால் அவற்றை ஆட்களை கொண்டு அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இந்த உத்தரவுகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று (மே 25) தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்துகின்றனர்,” என்றார்.

மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்.ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில், ஆசிரியர் எண்ணிக்கையை, பள்ளிக்கல்வித் துறை ஒழுங்குபடுத்தி வருகிறது.

இதனால், ஒன்று முதல் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை முதற்கட்ட மாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில் மொத்தத்தில், 30 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருப்பது தெரிய வந்து உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை, இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டு, ஆசிரியர் இடங்களை குறைக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளது.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி, மொத்த மாணவர்களுக்கும், 1:30 என்றவிகிதத்தில் ஆசிரியர்களை நிர்ணயித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், கூடுதலாக உள்ள ஆசிரியர் இடங்களை, சரண் செய்யும்படி, தொடக்கக் கல்விஇயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை அதிகம் வைத்திருப்பதால், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு தேவையின்றி கூடுதல் மானியம் வழங்க வேண்டி உள்ளது; அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அந்த இடங்களை திரும்பப் பெற்று, தேவையுள்ள அல்லது காலியான இடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், அரசுக்கு செலவு குறையும்' என்றனர்.

சி.பி.எஸ்.சி தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர, இன்னும் நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வராததால், அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர முடியுமா என, குழப்பத்தில் உள்ளனர்.

இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையும், மருத்துவ கல்வி இயக்ககமும், 'தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல், முதலில் மதிப்பெண் இல்லாமல், குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் பட்டியலை இணைத்து அனுப்பலாம்' என, சலுகை வழங்கிஉள்ளன.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான- சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானு வேல் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் ஆன் லைன் அப்ளிகேஷன்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 1,129 காலியிடங்களுக்கு, 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்வில், இந்த ஆண்டு, இரண்டு புதுமைகள் செய்யப்பட்டு உள்ளன. ஒன்று, யு.பி.எஸ்.சி., யின், தீதீதீ.தணீண்ஞிணிணடூடிணஞு.ணடிஞி.டிண இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாது. அது போல, 'ஹால் டிக்கெட்'டும், தபால் மூலம் கிடைக்காது.இரண்டாவது, ஐ.ஏ.எஸ்., பணிக்கு விண்ணப்பிக்கிறோமா, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கிறோமா என்பதை, விண்ணப்பம் செய்யும் போதே குறிப்பிட வேண்டியது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பம் அனுப்புவது, 23ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஆக., 23ம் தேதி, தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கடன் புதிய நெருக்கடி

கல்விக் கடன் புதிய நெருக்கடி

கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுயநிதி கல்வி நிலையங்களில், மொத்த முள்ள இடங்களில், 50 சதவீதம் கல்லூரி நிர்வாகத்தாலும், 50 சதவீதம், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்படுகின்றன.

இதில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் தான், புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. பொதுவாக, கல்விக் கடன், 4 லட்சம் ரூபாய் வரை பெறும் போது, எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை.
புதிய விதிகள்:

* நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றாலும், கட்டாயமாக, மூன்றாம் நபர் ஜாமின் மற்றும் சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

* ஒரு வங்கி கிளை அளிக்கும் மொத்த கல்வி கடனில், 10 சதவீதத்துக்கு மேல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு அளிக்கக் கூடாது.

* பொறியியல் கல்லூரிகளுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் குழு பரிந்துரைத்த கட்டணத்துக்கு மேல், கல்விக் கடன் வழங்கக் கூடாது. இவ்வாறு, புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் அனைத்தும், சுயநிதி கல்லூரிகளில் படிப்போருக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் கள், இதனால் பாதிக்கப்படுவர் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின், மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் இட ஒதுக்கீட்டின் படி, மாணவர் சேர்க்கை நடக்கும்போது, அதிக மதிப்பெண் பெற்றவர்களில் இருந்து தான், சேர்க்கை துவங்கும். இது, ஒவ்வொரு இனத்தின் அடிப்படையிலான, ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும்.
நன்கொடை:
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அளவுகோல் இல்லை. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கிறது.

அவர்கள், கல்லூரிக்கு நன்கொடை வழங்குவதே இதற்கு காரணம். அந்த நன்கொடை, அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை விட, பல மடங்கு அதிகம். சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டுமே, கல்விக் கடன் வழங்க, அரசின் கல்விக் கொள்கை அனுமதிக்கிறது; நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவோர், இந்த கொள்கையின் கீழ் வரமாட்டார்கள். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து, கல்விக் கடன் பெற்றவர்களின் தேர்ச்சி விகிதம், கடனை திருப்பி செலுத்தும் சதவீதம் போன்றவை, சராசரிக்கும் குறைவாக உள்ளது. எனவே, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவோருக்கு, கல்வி கடன் வழங்குவதை கட்டுப்படுத்த, வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனித்தனியாக முடிவுகளை எடுப்பதால், ஒரு சில வங்கிகளில், ‘நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கடன் வழங்க வேண்டாம்’ என, முடிவெடுத்துள்ளன. சில வங்கிகள், புதிய விதிகளை வகுத்துள்ளன. அதன்படி, மொத்த கல்விக் கடனில், 10 சதவீதத்துக்கு மேல், நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்கக் கூடாது; வழங்கப்படும் கடனுக்கும், உத்தரவாதம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
‘நீதிமன்றம் செல்வோம்':
”நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, கல்வி கடன் நிறுத்தப்பட்டால், நீதிமன்றம் செல்வோம்,” என, கோவை அண்ணா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகள் சங்க செயலர், நடேசன் கூறினார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம் உள்ள பொறியியல் கல்லூரிகளில், நன்கொடை வாங்கும் தகுதி உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, நன்கொடை அளிப்போரால், கல்வி கட்டணம் செலுத்த முடியாதா என்ற கேள்வியை கேட்க முடியாது. நிர்வாக ஒதுக்கீடு சேர்க்கை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகளின் படி தான் நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு – 40; பிற்படுத்தப்பட்டோருக்கு – 45; பிற வகுப்பினருக்கு – 50 மதிப்பெண் என, நிர்ணயித்து உள்ளனர். ‘கவுன்சிலிங்’ மூலம், இடம் கிடைக்காதவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு, நிர்வாக ஒதுக்கீடு தான் கை கொடுக்கிறது. கல்விக் கடன் இல்லையேல், அவர்களின் எதிர்காலம் சூனியமாகி விடும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கல்விக் கடன் வழங்குவதில், கடந்த ஆண்டும் இதே நிலை தான் இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று, அனுமதி பெற்றோம். நடப்பாண்டிலும், இந்நிலை நீடித்தால், நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, May 23, 2015

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் சிறப்பு வகுப்பு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் 22ம் தேதி சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூலை மாதம் 16ம் தேதி சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்காக அனைத்து சிஇஓக்களுக்கும் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து, சிறப்பு பயிற்சி கொடுக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அனைத்து மாவட்டகளிலும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓட்டுச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று, கடைசி சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும், வாக்காளர்களிடம், அவர்களின் ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி, போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி, மார்ச் மாதம் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, விவரங்களை சேகரித்தனர். அத்துடன், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெற்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது, வீட்டில் இல்லாதவர்களுக்காக, நான்கு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று முகாம் நடத்தப்பட்டுள்ளது. நான்காவது முகாம், இன்று, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

வங்கிகளுக்கு மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் கூறியதாவது: இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கும், ஊதிய உயர்வு ஒப்பந்தம், இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு தரப்புக்குமான விரிவான ஒப்பந்தம், மும்பையில் திங்கட்கிழமை கையெழுத்தாகிறது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபர், 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். வங்கிகளுக்கு, மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு, இதற்கான ஆணையை விரைவில் வெளியிடும். அதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை நடைமுறைக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் இணையதளம், ஜூன் மாதம் முதல் செயல்பட துவங்கும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

காணாமல் போகும் குழந்தைகள் குறித்த தகவல்களை அளிப்பதற்காக, www.koyapaya.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், காணாமல் போன குழந்தைகளின் படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றலாம்; இதை, போலீசார் மற்றும் இதற்கென அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே செய்ய முடியும்.

காணாமல் போனவர்களை, உலகம் முழுவதும் உள்ளோர், இந்த தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்; அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, காணாமல் போனவர்களை மீட்க, போலீசார் நடவடிக்கை எடுப்பர். இந்த இணையதளம், முதற்கட்டமாக ஆங்கிலத் தில் வெளியாகிறது. அடுத்து, இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில், மொழிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். மேலும், 'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களுடன் இணைப்பு வசதி யும் ஏற்படுத்தப்படும். காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பத்திரிகை, 'டிவி', 'கேபிள் டிவி' போன்றவற்றில் அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

* நாட்டில், ஆண்டுக்கு, ஒரு லட்சம் குழந்தை கள் காணாமல் போகின்றனர்.

* குக்கிராமங்கள், கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பெரும்பாலானோர் போலீசில் புகார் அளிப்பதில்லை.