இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 26, 2015

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி

தமிழக அரசின், இ - சேவை மையங்களில், 'டெபிட் கார்டு' மூலம் பணம் செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம் அரசுத் துறைகளின் பல சேவைகள், மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாவட்ட அளவில் கண்காணிக்க, மேலாளர் பதவியில் பொறியியல் பட்டதாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள், மாவட்டங்களில் உள்ள அனைத்து, இ - சேவை மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மையங்களில், ஜாதி, வருமானம் உட்பட, 11 சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம், 50 ரூபாய். அதை பயனாளிகள் ரொக்கமாக செலுத்துகின்றனர். இனி, அந்தக் கட்டணத்தை, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ - வாலட் கார்டு' மூலம் செலுத்தும் வசதி அறிமுகமாக உள்ளது.

அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. 'டெபிட் கார்டு' இல்லாத வங்கி வாடிக்கையாளரே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் இந்த வசதியை, ஏராளமானோர் பயன்படுத்துவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

PF எண்ணை 15 நாட்களுக்குள் பயன்படுத்த உத்தரவு

பி.எப்., மண்டல ஆணையர் பிரசாத் தொழிலதிபர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:பி.எப்., திட்டத்தில், தொழிலாளர்கள் உறுப்பினரான, ஒரு மாதத்துக்குள், உறுதி படிவத்தை பெற்று, 25 நாட்களுக்குள், நிரந்தர எண் பெற பதிவு செய்ய வேண்டும்.

நிரந்தர பி.எப்., எண் அளிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவற்றை 15 நாட்களுக்குள் பயன்படுத்த அறிவுறுத்தி, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும்; அவர்களின், ஆதார் மற்றும் பான் எண்களை, பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத தொழிலாளர்களிடம், அதற்கான ஒப்புகையைப் பெற வேண்டும். இத்தகவல்கள் அனைத்தையும், பி.எப்., அலுவலகத்தில் தொழிலதிபர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, தொழிலதிபர்கள் செலுத்தும் பங்கு தொகையை, இணையதள வங்கி சேவை மூலமே செலுத்த வேண்டும்.

1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பங்களிப்புள்ள நிறுவனங்கள், 2015 செப்டம்பர் வரை, காசோலை மூலம், பங்களிப்பு தொகையை செலுத்தலாம். அதன்பின், இணையதள வங்கி சேவை மூலமே அவர்களும் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Chess game competition schedule

Click below

https://app.box.com/s/9s11nl86euua4rvojy66fr9tf3g5x1ra

B.ed school teaching practice

Click below

https://app.box.com/s/ry2swy9i0412ldk75s7eexy9zcgxvwna

Thursday, June 25, 2015

25% CPS அரசு ஊழியர்களின் பங்களிப்பு தொகையைப் பெறலாம்

CPS -புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
பயன்பெறுவார்கள். மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்து ஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

6முதல் 10ம் வகுப்பு வரை நீதிபோதனை பாடம் அறிமுகம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை இந்த ஆண்டு முதல் மீண்டும் நீதி போதனை பாடத்திட்டம் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை என்ற சிறப்பு பாடத்திட்டம் இருந்தது. வாரத்தில் ஒருநாள் இவ்வகுப்புகள் நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இத்திட்டம் சில வருடங்களுக்கு முன்பு முடங்கியது.

இத்தகைய சூழலில், வகுப்பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிப்பது, வகுப்பில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை கேலி செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடக்க தொடங்கின. இதை மாற்ற, பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் நீதிபோதனை வகுப்பை மீண்டும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரையில் நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்படும். மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் விஷயங்களை அடிப்படையாக கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் படிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீதி போதனை வகுப்புக்கென ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், நீதி போதனை வகுப்புக்காக சிறப்பு கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்புகளை தொடர்ந்து, 2வது கட்டமாக 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 6ம் வகுப்பு ஆங்கில வழி சேர்க்கை

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அந்த இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கிராமப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 2012-13 கல்வியாண்டில் 165 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

2013-14 கல்வியாண்டில் 1,048 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 2014-15 கல்வியாண்டில் 1,485 பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், 2015-16 கல்வியாண்டில் 6-ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு அலுவலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2015-16 கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஓர் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்.

ஆங்கில வழிப் பிரிவுகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நிகழாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GPF account statement

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

தமிழகம் முழுவதும் 85லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் கூடு தலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகங்கள் இயங்குகின்றன.

புதுப்பித்து வர வேண்டும்

பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவ சாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித் தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப் போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும்.

பெண்கள் அதிகம்

இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய் துள்ள பதிவுதாரர்களின் எண் ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402. இதில் பெண் பதிவுதாரர்கள் மட்டும் 43 லட்சத்து 24 ஆயிரத்து 881 ஆகும். இது ஆண்களைவிட அதிகம்.

இடைநிலை ஆசிரியர்கள் 81 ஆயிரத்து 777 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 816 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம் பேரும் கலை பட்டதாரிகள் 4.26 லட்சம் பேரும், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம் பேரும், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம் பேரும் பதிவுசெய்துள்ளதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

நேரடி உதவி தொடக்ககல்வி நியமனம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

  

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள். ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண் டர், வங்கிக்கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎப்) முன்பணம் பெறுதல் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

கடந்த 2009-ம் ஆண்டு வரை உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் 100 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தன. பி.எட். பட்டமும், துறைத்தேர்வு களில் தேர்ச்சியும் பெற்ற அரசு நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த நிலையில், முதல்முறையாக கடந்த 2009-ம் ஆண்டு நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமன முறை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டது. மொத்த காலியிடங்களில் 75 சதவீத இடங்களை பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீத இடங்களை நேரடியாகவும் நிரப்ப முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2009-ம் ஆண்டு 67 பேரும், 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, “உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கான காலியிடங்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம்தான் தேர்வு செய்ய வேண்டும்”என்றார்.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செய லர் தண்.வசுந்தராதேவி கூறும் போது, “உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு குறைந்த எண் ணிக்கையிலான காலியிடங்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பு வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித் தார்.

நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கான காலியிடங் கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங் களுக்கு ஒதுக்கப்படும். குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பி.எட் பட்டமும் பெற்றிருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பி னருக்கு 40 ஆகவும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் (பிசி, எம்பிசி உள்பட) 35 ஆகவும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2009-ம் ஆண்டு 67 பேரும், 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி உதவி தொடக்கக்கல்வி அதிகாரி நியமனம் நடைபெறவில்லை.

Wednesday, June 24, 2015

அக்டோபரில் புதிய ரயில்வே கால அட்டவணை

இந்த வருடத்துக்கான ரயில்வேகால புதிய அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் ஜூலை 1ம் தேதி புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் பிப்ரவரியில் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் பயணவிவரம் மற்றும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் வேகம் அதிகரித்தல், ேநரம் மாற்றி அமைத்தல் போன்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.

ஆனால் கடந்த வருடம் நாடாளு மன்ற தேர்தல் மற்றும் புதிய அரசு அமைக்கப்பட்டதன் காரணமாக செப்டம்பரில் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூலை 1ம் தேதி ரயில்வே கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட ரயில் பட்ஜெட்டில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்காத காரணத்தால் இந்த வருடமும் ஜூலை மாதம் ரயில்வே கால அட்டவணை வெளியிடப்படாது என கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் வரை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட காலஅட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயங்கும் என்றும், இந்த ஆண்டிற் குரிய புதிய காலஅட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் கூடுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் புதிய ரயில்கள் அறிவித்தல், இயங்கி கொண்டிருக்கின்ற ரயில்களின் சேவைகள் அதிகரித்தல், ரயில்களை நீட்டித்து இயக்குதல் ஆகிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அகல பாதை பணிகள் முடிக்கப்பட்ட பழநி - பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு இல்லாத காரணத்தால் அந்த தடங்களில் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது.

இதை போன்று அகில இந்திய அளவில் பல்வேறு ரயில்கள் நிரந்தர ரயிலாக இயக்க நாடாளுமன்றத்தில் அறிவிக்காத காரணத்தால் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அறிவித்து ரயில் கால அட்டவணையில் வெளியிடப்பட வேண்டும். இந்த பிரச்சினை குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று மின்சாரரயில் இன்ஜின் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை முன் கூட்டியே வந்தடைகிறது. இதனால் வருகிற ரயில் கால அட்டவணையில் அனைத்து ரயில்களின் நேரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். இந்த வருடம் ரயில் கால அட்டவணைகால தாமதம் ஆவதால் இரு வழிபாதை பணிகள் இன்னமும் அதிக அளவில் முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு இருவழிபாதை அதிகஅளவில் முடிக்கப்பட்டால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு கிராசிங்கான ரயில்கள் அதிகநேரம் நிற்கபடுவது தவிர்க்கப்பட்டுவிடும் என்றனர்.

உணவு இடைவேளைக்கு முன்பு கட்டாய உடற்பயிற்சி

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10 முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் 2012ல், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு எளிய முறை உடற்பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுத்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி யோகா உள்ளிட்ட பல்வேறு எளிய உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. யோகா மட்டும் கற்றுத்தரப்பட வேண்டும் என சமீபத்தில் எந்த உத்தரவும் வரவில்லை’ என தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரங்கள் கூறுகையில், ‘உணவு இடைவேளையில் எளிய உடற்பயிற்சி கற்றுத்தரவேண்டும் என வாய்மொழியாக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இதை சில பள்ளிகள் பின்பற்றாததற்கு இடைவேளை 40 நிமிடம் மட்டுமே என்பதே காரணம்’ என்றனர்.

மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

��TNPTF MANI��

அரசுப் பள்ளி மாணவியருக்கு ஜூலை 1முதல் கராத்தே பயிற்சி

��அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கராத்தே பயிற்சி வழங்கப்படவுள்ளது

��அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியிலுள்ள எட்டாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைக்கு வழங்கப்படவுள்ளது

��மாவட்டத்துக்கு 500மாணவியர்  தேர்வு செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்

��ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை,திருப்பூரில்  மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது

��அதிக எண்ணிக்கையில் இருந்தால் பள்ளியிலேயே பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது