இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 20, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்த வேண்டும்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் கொண்டு ஆண்டுதோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மடத்தூர் ஹிந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன. அதனால், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பாக பணியமர்த்தப்பட்ட ஒரு பிரிவினர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.

இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டியதுதான். எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Friday, December 19, 2014

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி ரூ 8.75%

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதியாண்டில் 8.75 சதவிகித வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.

முன்னதாக நடப்பு 2014 - 15 நிதியாண்டுக்கு 8.75 சதவிகித வட்டி தரலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்த நிலையில் அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட அதே வட்டி விகிதமே நடப்பாண்டுக்கும் வழங்கப்பட உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இம்முடிவால் 5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது. தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார் மேலும் இந்த பாடமானது தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்க முறையும் என்ற பெயரில் உள்ளது. எனவே கணிப்பொறி இயக்கம் குறித்து ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு டிசம்பர் 24 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் 6 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சகம், சில நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகளைச் சுற்றிலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற 3 அல்லது 4 இடங்களில் வழிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகளை ஏற்படுத்த வேண்டும், எனவும் அசம்பாவித சம்பவம் நிகழும் போது அதிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KENDRIYA vidyalaya school list

தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்
The latest and total (37) list of KV Schools in Tamil Nadu.

Chennai
1. Chennai (CLRI)
2. Chennai (Anna Nagar)
3. Chennai (K.K.Nagar)
4. Chennai (DGI Complex)
5. Chennai (Gill Nagar)
6. Chennai (IIT)
7. Chennai (Island Grounds)
8. Chennai (Menambakkam)
9. Chennai (Tambaram -1)
10. Chennai (Tambaram -2)

11. Chennai (Avadi AFS)
12. Chennai (Avadi CRPF)
13. Chennai (Avadi HVF)
14. Chennai (Avadi OCF)
15. Chennai (Arakkonam – 1)
16. Chennai (Arakkonam – 2)

Madurai
1.KENDRIYA VIDYALAYA No.1(MADURAI –
Narimedu)
2.KENDRIYA VIDYALAYA No.2(MADURAI –
Thirupparrankundram)

Coimbatore
1. KENDRIYA VIDYALAYA (Sowripalayam Road-
Coimbatore)

Trichy
1. KENDRIYA VIDYALAYA (Ordnance Estate -
Trichy)
2. KENDRIYA VIDYALAYA (HAPP - Trich)

Kalpakkam
1. KENDRIYA VIDYALAYA (DAE Township -
Kalpakkam)
2. KENDRIYA VIDYALAYA (Sadras - Kalpakkam)

Dharmapuri
1. KENDRIYA VIDYALAYA (Lakkiampatti -
Dharmapuri)

Aruvankadu
1. KENDRIYA VIDYALAYA (Cordite Factory -
Aruvankadu)

Dindigul
1. KENDRIYA VIDYALAYA (Gandhigram -
Dindigal)

Karaikudi
1. KENDRIYA VIDYALAYA (CECRI Campus -
Karaikudi)

Wellington
1. KENDRIYA VIDYALAYA (Wellington - Nilgris)

Vijayanarayanam
1. KENDRIYA VIDYALAYA (Vijayanarayanam -
Tirunelveli)

Thiruvannamalai
1. KENDRIYA VIDYALAYA (Gandhi Nagar -
Thiruvannamali)

Thanjavur
1. KENDRIYA VIDYALAYA (Air force Station -
Thanjavur)

Sulur
1. KENDRIYA VIDYALAYA (Air Force Station -
Sulur)

Sivagangai
1. KENDRIYA VIDYALAYA (Srinivasa Nagar -
Sivaganga)

Rameshwaram
1. KENDRIYA VIDYALAYA (Varthagan Street Road
- Rameshwaram)

Ooty
1. KENDRIYA VIDYALAYA (Indu Nagar - Ooty)
Nagerkoil
1. KENDRIYA VIDYALAYA (Konam - Nagerkoil)

Mandapam
1. KENDRIYA VIDYALAYA (Mandapam Camp -

Mandapam)

NMMS urgent

Click below

https://app.box.com/s/kufquc2m8gv0xr7htmch

Thursday, December 18, 2014

Republic day celebration

ஜன.25ல் புது வாக்காளர்களுக்குபிளாஸ்டிக் அடையாள அட்டை

தேசிய வாக்காளர் தினமான ஜன.,25ல் அனைத்து ஓட்டுச்சாவடி களிலும் புதிய வாக்காளர்களுக்கு கலர் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத்திருத்தப்பணிகள் அக்.,15 முதல் நவ.,10 வரை நடந்தன. 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க, இறந்தவர்களின் பெயர்களை நீக்க, திருத்தம், ஒரே சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஓட்டுச்சாவடிகளிலும், ஆன்-லைன் மூலமும் பெறப்பட்டன.

இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியல் ஜன.,5ல் வெளியிடப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.,25ல் கலர் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.மாவட்ட தேர்தல் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“தேசிய வாக்காளர் தினத்தில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய நாளில் வாக்காளர்கள் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன,”என்றார்.

CTET

Central Teachers Eligibility Test (CTET-FEB2015)

Central Board of Secondary Education Delhi will be conducting the central teachers eligibility test for a person to be eligible for appointment as a teacher for classes I to VIII on 22.02.2015 (sunday).
Candidates can apply only On-line for CTET-FEB 2015 on CTET website

Submission of online application from- 18.12.2014

Last date for online submission of application -08.01.2015

Final list of candidates-check status and particulars-16.01.2015

Download admit card from website- 02.02.2015

Date of Examination- 22.02.2015
Paper II -9.30 to 12 pm
Paper I  -2.00 to 4.30pm

Wednesday, December 17, 2014

9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

அனைத்து விதமான பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழுக்கால் சட்டை (பேண்ட்) அணிய வேண்டும். மேலும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது உறுதிச் சான்றிதழையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 16, 2014

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யத் தவறியவர்களுக்கு வாய்ப்பு


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதி பதிவை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்தி: அரசாணையின்படி, 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறப்புச் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வரும் 7.3.2015-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ள முடியும். 7.3.2015-க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

10-ஆம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை?

அடுத்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறைக்கு, இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது. இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில் அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு மதிப்பெண்ணாக வழங்கப்படும். 2014-15-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிலும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை பின்பற்றப்படுவதால், 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையே தொடர வேண்டும் என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையைத் தொடர பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இந்த நிலையில், 10-ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநில அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் உள்ள மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறை இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது எஸ்.சி.இ.ஆர்.டி.,

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், '

'தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.

இனி பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டு!

பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக்கி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பி.எட். மற்றும் எம்.எட். எனப்படும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு இது வரை ஓராண்டு படிப்பாகவே இருந்து வந்தது. தரமான ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்றால் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான படிப்பு காலத்தை உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இதையடுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா அனைத்து மாநில ஆசிரியர் கல்வியில் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது இதுவரை ஓராண்டு கால படிப்பாக இருந்த பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் இனி 2 ஆண்டுகால படிப்பாக மாற்றம் செய்யப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.எட். மற்றும் எம்.எட். பட்டப்படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும்.

இது தவிர பிளஸ் 2 முடித்து விட்டு மாணவர்கள் சேரும் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கான பெயரை நாடு முழுவதும் ஒரே மாதிரி அழைக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது இரணடாண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்புகள் தமிழகத்தில் டீச்சர் ட்ரெயினிங் டிப்ளமோ படிப்பு என்றும் பிற மாநிலங்களில் பி.டி.சி., ஜே.பி.டி. என்று வேறு வேறு பெயர்களில் அந்த படிப்புகளை அழைத்து வந்தனர்.

இனிமேல் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பை டி.எல்.எட். (தொடக்க ஆசிரியர் கல்வியியல் டிப்ளமோ படிப்பு) என்று ஒரே பெயராக மாற்றி அமைத்துள்ளார்.

மேலும் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர் டிப்ளமோ படிப்பை ( டி.பி.எஸ்.இ) தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

-எம்.கார்த்தி

Monday, December 15, 2014

தலை சுற்றும் 'கழிப்பறை கணக்கு': மீண்டும் முதலில் இருந்து...

வங்கி கணக்கு அவசியம் டிசம்பர் 15,2014 இன்றுகடந்த வாரம்கடந்த மாதம் கருத்தைப் பதிவு செய்ய Colors: எழுத்தின் அளவு: Advertisement பதிவு செய்த நாள் 16டிச 2014 00:30 மதுரை: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் வசதி குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டதால் மீண்டும் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்; குறிப்பிட்ட காலத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை உறுதி செய்ய வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டது.

கழிப்பறைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என மூன்று வகையில் கணக்கெடுக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணிக்கையில் இருந்தன. மேலும், தனியார் அமைப்புகள் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்தபோது, கணக்கெடுப்பில் இல்லை என்று குறிப்பிட்டிருந்த பள்ளிகளில் கழிப்பறை இருந்ததாகவும், சில பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடம் இல்லாததும் தெரிந்தது.

இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள், உண்மை நிலவரம் குறித்து அறிய மீண்டும் தலைமை ஆசிரியர்களை அழைத்து விபரங்கள் சேகரிக்க உத்தரவிட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்று, தலைமை ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் விபரங்கள் சேகரிக்க துவங்கியுள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனாலும் கோர்ட் உத்தரவுக்கு பின் கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது 'ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்' போன்றவை கழிப்பறை வசதி செய்துகொடுக்க முன் வந்துள்ளன. இதற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முரண்பாடு இருந்ததால் தலைமை ஆசிரியர்களிடம் சரியான விபரங்கள் கேட்கப்பட்டது, என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ''என்.எல்.சி., சார்பில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 600 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இதில் மதுரைக்கு 50 ஒதுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Tamil modules

Click below

https://app.box.com/s/0i6tnfnsa6cvsm7w3c06

A English handbook for beginners

Click below

https://app.box.com/s/wdu9z5zzzjyfr7gdens5

Tamil slow learners module

Click below

https://app.box.com/s/bnfznm4voqxul07cgz3g

VAO EXAM RESULT PUBLISHED

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-VAO2014.html

TRB PG hall ticket

Click below

http://admit.examsonline.co.in/pe_gr1/

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை


 
எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திறனாய்வுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் கல்வி உதவி திட்டத்தின்கீழ் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.

அதில் தேர்ச்சி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 6,695 மாணவ-மாணவிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கும். 2013-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு தாமதமாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 57 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். அவர்களின் கல்வி உதவித் தொகைக்காக 6,695 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

உதவித்தொகை வழங்குவதில் தாமதம்

கடந்த ஆண்டுக்கான தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அடுத்த தேர்வு (2014-ம் ஆண்டுக்கான தேர்வு) வருகிற 27-ம் தேதி நடத்தப்பட உள்ளது என்பதுதான். இந்த திறனாய்வுத் தேர்வை மத்திய அரசு சார்பில் தமிழக தேர்வுத்துறைதான் நடத்தி வருகிறது.

மத்திய அரசுதான் காரணம்

திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காதது குறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த உதவித் தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்தான் அளிக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். மத்திய அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை. உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஆகிவிட்டதால் ஓராண்டுக்குரிய மொத்த உதவித் தொகையையும் ஒரேநேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.

Sunday, December 14, 2014

TANGEDGO online tariff calculator

Click below

http://tneb.tnebnet.org/tariff_new.html

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.