இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 28, 2015

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

-எம்.கண்ணன்,என்.ராஜேந்திரன்

வண்ணம் தீட்டுதல்...

சிறு குழந்தைகள் வண்ணம் தீட்டுவதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுடைய ஆற்றலை வளர்க்கவும், மகிழ்விக்கவும் உதவும் தளம் http:// www. thecolor. com  வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு கோட்டுச் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கும் படங்களுக்கு குழந்தைகள் தங்கள் எண்ணத்தில் தோன்றும் வண்ணத்தை தீட்டுவதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறனையும், நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றலும் மேம்படும். மழலை கல்வியின் அடிப்படை பாடமாக உள்ள இப்பயிற்சியை செய்து பார்க்க புத்தகங்களைத் தேடி கடைக்கு செல்லாமல் இணையம் மூலமாக மௌசை தூரிகையாக்கி வண்ணம் தீட்டி மகிழ இந்த இணையதளம் உதவுகிறது.
பறவைகள், விலங்குகள், இயற்கை காட்சிகள், புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள், பொம்மைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கோட்டோவியங்கள் இத்தளத்தில் உள்ளன.சிறப்பாக வண்ணம் தீட்டப்பட்ட படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டியதும் நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் பிரிண்ட எடுத்துக் கொள்வதற்கான வசதியும் இத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நம் குழந்தைகளின் கற்பனை ஆற்றலையும் ஓவியத் திறனையும் வளர்ப்பதற்கு இத்தளம் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறு விளையாட்டுகள்
குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதற்கென்று உருவாக்கப்பட்ட இணையதளம்hவவயீ://றறற.யெலெஅயnயைஉள.உடிஅ www. babymanias. com

இத்தளத்தில் பல்வேறு விதமான சிறு சிறு ஃபிளாஷ் விளையாட்டுகள் உள்ளன. காட்சியில் தோன்றும் மனிதர்கள், குழந்தைகள், விலங்குகளுக்கு அலங்காரங்கள் செய்தல், பந்துகளை தூக்கிப் போட்டு பிடித்தல், பொருட்களுடன் உள்ள வாகனத்தை பத்திரமாக ஓட்டுதல் என எண்ணற்ற விளையாட்டுகள் இத்தளத்தில் உள்ளன.தமிழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது.

கணிதம் கற்க..குழந்தைகள் கணிதம் கற்க சிறு சிறு உதாரணங்கள், விளையாட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் hவவயீ://றறற.உடிடிடஅயவா.உடிஅ www. coolmath.com
இத்தளத்தில் ஆரம்ப நிலை அல்ஜீப்ரா கணக்குகளை குழந்தைகளுக்கு புரியும்படியான உதாரணங்கள், படங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தில் ஆர்வத்தையும், திறனை யும் அதிகரிக்க இத்தளம் நல்ல பயிற்சிக் களமாக அமையும்.

மேற்கண்ட தளத்தைப் போலவே எளிமையாக கணிதத்தைக் கற்றுக் கொடுக்கும் மற்றொரு இணையதளம் hவவயீ://றறற.உடிடிடஅயவா4மனைள.உடிஅ/ www. coolmath4kids.com

இத்தளத்தில் விளையாட்டுகள்மூலமாக கணிதம் கற்றுத் தரப்படுவது சிறப்பாகும். மூளைக்கு வேலை தரும் வகையிலான எண்ணற்ற கணக்குகளும், விளையாட்டுகளும் இத்தளத்தில் நிறைந்துள்ளன.

ஆன்-லைன் கேம்ஸ்அனைத்து வயதுக் குழந்தைகளும் விளையாடுவதற்கு ஏற்ற இணையதளம் hவவயீ://றறற.கரnசெயin.உடிஅ
www. funbrain. com

கணித விளையாட்டுகள், தேடல் விளையாட்டு, சொற்களை கண்டுபிடித்தல் எனப் பல்வேறு வகைகளில் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாடும்போது குழந்தைகளிடம் தகவல்களைப் பெற்று தொடரும் வகையில் கேம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொல் விளையாட்டு, புதிர் விளையாட்டுடன் வழக்கமான விளையாட்டுகளும் இத்தளத்தில் நிறைந்துள்ளன.பொது அறிவை வளர்க்கசுற்றுப்புறச் சூழல், தொழில்நுட்பம், விண்ணியல், உடல் நலம் என பல்வேறு துறை சார்ந்த செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ள இணையதளம்hவவயீ://றறற.hடிறளவரககறடிசமள.உடிஅ

www. howstuffworks. com
இத்தளத்தில் கட்டுரைகளுடன், வீடியோக் காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. பல்வேறு தொழில் நுட்பங்களைப் பற்றியும் அவை செயல்படும் விதத்தையும் காட்சிப்படுத்தி விளக்குவது இதன் சிறப்பாகும்.

5 பிரிவாக பிரித்து கார்ப்ரேட் நிறுவனமாகிறது தபால்துறை

இந்திய தபால்துறையை தபால் பரிமாற்ற சேவையை தவிர மற்ற சேவைகளை 5 பிரிவுகளாக பிரித்து கார்ப்பரேட் நிறுவனங்களாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதிகளில் கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களும் அடக்கம்.

தனியார் தபால் சேவையும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்திய தபால் துறையை தபால் சேவையுடன் வணிகம் சார்ந்த சேவைகளில் இறங்க வைத்தது. அந்த வகையில், இன்சூரன்ஸ் சேவை, வங்கி சேவை, விண்ணப்பங்கள் விற்பனை, தங்க காசு விற்பனை, சரக்கு போக்குவரத்து, அந்நிய செலாவணி மாற்றம், காப்பீட்டுத்துறை, தொலைபேசி மற்றும் மின்கட்டணம் செலுத்தும் வசதி, பல்நோக்கு சேவை மையம் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஏடிஎம் வசதியையும் அளிக்க உள்ளது. தற்போது நாட்டில் 90 சதவீத தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து சர்வதேச பண மாற்றம் என்கிற உலகின் எந்த மூலையில் இருந்தும் பணத்தை உடனடியாக உள்நாட்டில் நமது செலாவணியாக மாற்றும் சேவையை செய்து வருகிறது. மேலும், உள்நாட்டு உடனடி மணியார்டர் சேவையையும் வழங்கி வருகிறது. இதனால் இந்திய தபால் துறை தனியார் கார்கோ சேவை மற்றும் கூரியர் நிறுவனங்களை போன்றே லாப பாதையில் நடைபோட்டு வருகிறது.

அதோடு நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளை விட அதிகளவிலான சேமிப்புக்கணக்குகளை இந்திய தபால்துறை கொண்டுள்ளது. இத்தகைய வலுவான கட்டமைப்பில் செயல்பட்டு வரும் தபால்துறையை தபால் மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை மட்டும் அதன் வசம் விட்டுவிட்டு பிற சேவைகளை 5 பிரிவுகளாக பிரித்து அவற்றை தனித்திறன் வாய்ந்த வர்த்தக நிறுவனங்களாக அறிவிப்பதுடன், அவற்றை கார்ப்பரேட் நிறுவன சட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற காபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான செயல்முறை கமிட்டியின் சிபாரிசை முழுமையாக ஏற்று அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதேநேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவும் தபால் ஊழியர் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அரசு-ஆசிரியர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, நிதித் துறைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆறு சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம், அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயரும். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். உடனடியாக அளிக்க வேண்டும்: அகவிலைப்படி உயர்வை அளிக்க முதன்மை மாநிலக் கணக்காய்வுத் தலைவரிடம் இருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திருக்க வேண்டாம். சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.

யார் யாருக்கு பயன்? அகவிலைப்படி உயர்வானது பல்வேறு தரப்பினருக்கும் பொருந்தும். அதன்படி, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ், சிறப்பு ஓய்வூதியம், கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் படிக்க விரும்பும் உயர் கல்வி, பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு கள், வேலைவாய்ப்புகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை, சிறந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மூலம், கோடை விடுமுறையில் வழங்க வேண்டும்.

உயர் கல்வி பாடங்களுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்குரிய கல்வித் தகுதிகள் குறித்த ஆலோசனைகளை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சாதனையாளர்களோடு இணைந்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்

தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கல்வித் துறை போல் இம்மூன்று மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொதுவான மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.

இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:கல்வித் துறையில் ஆண்டுதோறும் பொது மாறுதல் லந்தாய்வு நடக்கிறது. இத்துடன் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே உள்ள கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நான்கு ஆயிரத்திற்கும் மேல் உள்ள இம்மூன்று மாநகராட்சிகளுக்கும் ஒரு பொதுவான கலந்தாய்வு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகங்களில் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் ஆணையாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.மேலும் மாநகராட்சி ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கேட்டால் அதற்கான தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறுவதும் சவலாக உள்ளது. எனவே இந்தாண்டு முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த மூன்று மாநகராட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என்றார்.

Monday, April 27, 2015

7243 நர்ஸ் பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான விவரங்களை   www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு,  11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் லிங்க்

Click below

http://electoralsearch.in/search.jsp

பேராசிரியர்,விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு

பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அதில், இடஒதுக்கீட்டுப்  பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்து அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வயது வரம்பு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். வயது வரம்பை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பை மீண்டும் 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்து.
இதற்கிடையே, 139 பொறியியல் உதவி பேராசிரியர் நியமன பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்தது. வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டதால் உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அளிக்கும் என்று 35 வயதைக் கடந்த முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், தொடர்ந்து பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய அறிவிப்பின்படி 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். 35 வயதை கடந்தவர்கள் வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே, அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Sunday, April 26, 2015

ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

* 10ம் வகுப்பு முடித்து, 2014, ஜூலை 1ம் தேதி, 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலினத்தவர் அதிகபட்ச வயது 35, மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் ஆகியோருக்கு 32, மற்ற வகுப்பினர் 30. ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட, அதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால், உச்ச வயது வரம்பு இல்லை.

* முன்னாள் ராணுவத்தினர் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், சீர் மரபினர் உச்ச வயது வரம்பு 53. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 48 வயது. = அதிகமாக அருந்ததியர் இருந்தால், மீதமுள்ளவர்கள் ஆதிதிராவிடர் பட்டியலில் நியமிக்கப்படுவர். குறைவாக இருந்தால், ஆதிதிராவிடர்கள் அதில் நிரப்பப்படுவர்.

* தமிழ் வழியில் படித்தோருக்கு, 20 சதவீத முன்னுரிமை உண்டு

* மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. மாற்றுத்திறனாளிகள் இல்லாவிட்டால், அந்த இடங்கள் நடைமுறை விதிகளின்படி நிரப்பப்படும்.

* தேர்வுக்குப் பின், 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆன் - லைனில் அழைக்கப்படுவர். மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதன்மைக் கல்வி அலுவலர் குழு நேர்காணல் நடத்தி, மதிப்பெண் அடிப்படையில், இனவாரி சுழற்சி மற்றும் முன்னுரிமையில் நியமனம் நடக்கும்.

* மாவட்ட வாரியாக தேர்வுத்துறை சேவை மையங்களில், ஏப்ரல் 24 முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. மே 6ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பம் பெற சேவை மையங்களில், கணினிப் புகைப்படம் எடுக்கப்படும் என்பதால், தேர்வர்கள் நேரில் செல்ல வேண்டும்.

* பத்தாம் வகுப்பு, முன்னுரிமை, உயர்கல்வித் தகுதி சான்றிதழ்களை அசல் மற்றும் நகல்கள், வேலை வாய்ப்பு அட்டை கொண்டு செல்ல வேண்டும்.

* தேர்வு கட்டணம் ரூ.100, சேவை கட்டணம் ரூ.50 ரொக்கமாக, தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வின் விவரங்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு எப்போது?

Saturday, April 25, 2015

போலி வாக்காளரை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பேரணிகள்

வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

துறை அதிகாரிகள்: தமிழக வாக்காளர் பட்டியலை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம், சமீபத்தில் ஆய்வு செய்ததில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது; பெயர் குழப்பம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி அதிகாரிகளின் உதவியை, தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் மூலம், போலி வாக்காளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: எச்சரிக்கை: போலி பதிவால் ஏற்படும் சட்ட ரீதியான பின் விளைவுகள் குறித்து, வாக்காளரை எச்சரிக்கை செய்ய, கல்வி துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் வரை கல்லூரி மாணவ, மாணவியரும், பள்ளிகள் திறந்த பின், ஜூலை வரை பள்ளி மாணவ, மாணவியரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. மூத்த விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, 2011ல் டி.ஆர்.பி., மேற்கொண்டது. ஆனால், இதில் பல குளறுபடிகள் இருந்ததாக, டி.ஆர்.பி.,க்கு எதிராக பலர் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையில், இரண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், தற்காலிகத் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுகளைப் பொறுத்தது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

ஜீன்ஸ், மொபைல் போனுக்கு தடை.ஆசிரிய ஆசிரியைகளுக்கு புது கட்டுப்பாடு.வரும் கல்வியாண்டு முதல் அமல்

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மாணவருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தல், மாணவியரிடம் ஆசிரியர் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ளுதல் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் கல்வித் துறையில், ஒழுக்கக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. எனவே, சில கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி,

* ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

* இளம் வயது ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட், இறுக்கமான சட்டை போடக் கூடாது.

* பள்ளிகளில், ஆசிரியர், மாணவ, மாணவியர் மொ பைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.

* ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது அலுவலகத்தில் வைத்து விட்டு, வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.

* மாணவ, மாணவியருக்கு மொபைல் போனே வேண் டாம்; அவசரத் தேவைக்கு பள்ளி போனை பயன்படுத்தலாம். இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, பல்துறை நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு பின், முடிவு செய்யப்படும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.